"என்ன?"-அவன் சட்டையை பிடித்து நன்றாக உலுக்கினாள்.
"உனக்கு எவ்வளவு கொழுப்பு இருந்தா!என்கிட்டையே அப்படி நடித்திருப்ப?உனக்கு என்ன துரோகம் பண்ணேன்?மூணு வருஷமா நரகத்துல வாழுறா மாதிரி வாழ்ந்தேன்!"-அவன் கேள்வியாய் பார்த்தான்.
"நிவாஸ் சாரை பார்த்தேன்!"-அனைத்தையும் கூறினாள்.அவனுக்கு தெரிந்து போனது இன்று அவன் விதி முடிய போகிறது.
"ஏன் சொல்லலை?"
"அது...நான்..."
"ஏன் இப்படி பண்ண?"
"..............."
"உண்மையில உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா?"
"ம்.."
"யார் கூட?"-கண்ணீரோடு கேட்டாள்.
"அம்மூ!"-என்றான் சிரித்தப்படி,
"அன்னிக்கு நீயும் தான் கூட இருந்த?தெரியாத மாதிரி கேட்கிற?"-எங்கோ பார்த்தப்படி கூறினான்.நிலா கண்ணீரோடு அவன் நெஞ்சில் தன் காதலை கரையவிட்டாள்.
ரஞ்சித்தின் கைகள் மெல்ல அவளை வளைத்தன.
"என்னை மன்னிச்சிடு ரஞ்சு!நான் உன் பேச்சை கேட்டு இருக்கணும்!"
"தெரிந்து கொள்!எப்போவும் ஆம்பளங்க நல்லதை தான் சொல்லுவாங்க!"-அவளுக்கு கோபம் ஏறியது.
"நீ நல்லதை சொல்லுவியா?"-என்று எதையோ தேடினாள்.
"என்னம்மா தேடுற?"-அவள் கையில் ஒரு கட்டை சிக்கியது.
"அடிப்பாவி!கட்டின புருஷனை கொல்ல பார்க்கிறீயே!"
"பின்ன நீ பண்ண வேலைக்கு கொஞ்ச சொல்றீயா?"
"நல்லா தான் இருக்கும்!எங்கே ஒண்ணு கொடு!"
"ஒண்ணு என்ன?நூறு தரேன்!"என்று அவனை அடிக்க துவங்கினாள்.
"ஏ...வலிக்குதுடி ராட்ஸஸி!"-அவன் கத்தினான்.அங்கே ஒரு அழகிய காதல் போர் நடக்கிறது.நாம் அங்கிருக்க வேண்டாம்!!!!
"உனக்கு என்ன தைரியம் இருந்தா இப்படி பண்ணுவ?"-பளாரென்று வைஷ்ணவியை அறைந்தார் அவள் சித்தப்பா.
அவள் நிலை தடுமாறி கீழே விழுந்தாள்.
"யாருடி அவன்???எங்கே பார்த்தாலும் அவன் பெயரை எழுதி வைத்திருக்க?சொல்லு...யார் அவன்?"
"சித்தப்பா..."
"எப்படி உன்னால இப்படி மாற முடிந்தது!
உன் அப்பா சாகும் போது என் பொண்ணை பார்த்துக்கோன்னு சொன்ன ஒரே காரணத்துக்காக தான் உன்னை இங்கே விட்டு வைத்திருக்கேன்!ஆனா,நீ எவன் கூடவோ சுத்திட்டு இருக்கல்ல!!!!"
"சித்தப்பா!நீங்க நினைக்கிறா மாதிரி இல்லை!"
"என்ன இல்லை???யார் அவன்?"
"சித்தப்பா அப்பா மேல சத்தியமா என் மேல எந்த தப்பும் இல்லை!"
"இதோப் பார்!நான் உன்னை கூட வைத்திருக்க காரணம் நீ நினைக்கிறா மாதிரி உன் மேல பாசம் இல்லை!உன்னோட சொத்து தான் காரணம்!"- திடுக்கிட்டாள் வைஷ்ணவி!!!
"அதனால தான் உன்னை உயிரோட விடுறேன்!இரண்டு நாள் டைம் தரேன் அவனை மறந்துட்டு நான் கை காட்டுற பையனை கல்யாணம் பண்ணிக்கிற?புரியுதா???"-ஆடிப்போனாள் அவள்.சிலையாய் நின்றாள்.தான் இதுவரை துணை என நினைத்தவர் இன்று தூக்கி எறிய துணிந்தாரா???பணம் பாசத்தையே விலைக்கு வாங்கியதா???அவரை தந்தை ஸ்தானத்திற்கு இணையாக வைத்தேனே!!!அவரை உலகம் என்று நம்பினேன்!!!எல்லாம் பொய்யா???
கண்ணீரோடு தன் அறைக்கு சென்று கதவை தாழிட்டாள்.
விஷ்வா கண்களுள் நின்றான்.
விஷ்வா இல்லாத வாழ்வை எண்ணி பார்க்க இயலவில்லை.
அவரில்லாத வாழ்வை எப்படி வாழ்வேன்.
ஏன் இந்த சோதனை???
நான் விருப்பப்பட்டது அனைத்தும் எனக்கு தூரமாகி விடுமா???
பலவாறு சிந்தித்து சோர்ந்தது பேதை மனம்.
"விஷ்வா!"
"ம்"
"என்ன யோசித்து கொண்டு இருக்க?"
"நிலா!"
"என்ன?"
"ஏதோ தப்பு நடக்குது நிலா!"-அவள் சிரித்தாள்.
"என்னடா ஜோசியம் பார்க்க ஆரம்பிச்சிட்டியா?"
"இல்லை...எனக்கு....எனக்கு...ஏதோ சரியா படலை!வைஷ்ணவி ஞாபகமா இருக்கு!"
"அதுக்கு ஏன் பதற்றமா இருக்க?"
"தெரியலை...!"
"அதெல்லாம் ஒண்ணும் இல்லை!நீ பேசாம தூங்கு!காலையில உனக்கு ஒரு சர்ப்ரைஸ் தரேன்!"
"என்ன?"
"காலையில சொல்றேன்!"
-அவனை உறங்க வைத்துவிட்டு தன்னறைக்கு வந்தவள் மனதில் ஏதோ உறுத்தியது.
இவன் ஏன் தேவையில்லாமல் பதற்றம் ஆகிறான்.
அவளுக்கு ஏதேனும் பிரச்சனையா?
உண்மையில் அங்கே என்ன நடக்கிறது தெரியுமா???
நடந்த கொடும் நிகழ்வுகளில் பாதிக்கப்பட்ட பெண்ணின் மனம் உடைந்து மரணத்தை வேண்டி மண்டியிட்டது.
கையில் இருந்த நஞ்சு அவளுள் இறங்க ஆயத்தமானது.
அவள் அதை வாயில் ஊற்ற முனைந்த நேரம் அவள் கைப்பேசி சிணுங்கியது.
தடுமாறியப்படி அதை பார்த்தாள்.
புதிய எண்ணாக இருந்தது.
எடுத்தாள்.
"ஹலோ!"
"ஹலோ!நான் வெண்ணிலா பேசுறேன்மா!"
"நீங்களா?என்னங்க இந்த நேரத்துல?"
"உனக்கு அங்கே எதாவது பிரச்சனையா?"-அவள் அதிர்ச்சியில் உறைந்தாள்.
"ஒண்ணுமில்லை...விஷ்வா உனக்கு எதாவது பிரச்சனை இருக்கும்னு பயப்படுறான்!"-என்று நடந்தவற்றை கூறினான்.அவளுக்கு மேலும் அதிர்ச்சி.
அவனுக்கு எப்படி தெரிந்தது???
அன்பின் இலக்கணம் பல நேரங்களில் நம்பிக்கைக்கு அப்பாற்ப்பட்ட ஒன்றாக இருக்கும்.உண்மையில் அன்பானது மனதோடு தொடர்புடைய ஒன்று அல்ல!!அது ஆன்மாவோடு தொடர்புடைய ஒன்று!!!
உயிர்கள் மட்டும் பேசி கொள்ளும் செய்தி ஆதலால், அது தகவல் பரிமாற்றத்தை துல்லியமாக,விரைவாக,அழகாக கூறிவிடுகிறது.
இறைவன் உண்மையில் ஒன்றை அழகாக காதலிக்க தெரிந்துள்ளான்!!!ஆச்சரியம்!!!
"வைஷ்ணவி?"-பதில் பேசவிடாமல் கண்ணீர் பேசியது.
"என்னம்மா?என்னாச்சு?"-அவள் நடந்ததை கூறினாள்.நிலாவின் இதயமும் உடைந்தது.உண்மையில் அதன் வலி அறிந்தவள் தானே அவளும்!!!
"செத்துடலாம் போல இருக்கு!"
"இதோப் பார்!அவசரப்பட்டு எந்த முடிவுக்கு வராதே!!! காலையில நல்ல முடிவு எடுக்கலாம்!!"
"..........."
"வைஷ்ணவி!விஷ்வா உன்னை அளவுக்கு அதிகமா விரும்புறான்!நீ இல்லாத வாழ்க்கை அவனுக்கு நிச்சயம் சந்தோஷம் தராது!அவனுக்காக கொஞ்ச நேரம் காத்திரு!ப்ளீஸ்!"