(Reading time: 10 - 20 minutes)

வளை ஒரு நிமிடம் பார்த்தவன் அங்கே சென்றான். அவனை அவள் பின்தொடர்ந்தாள்.

"என்ன வேண்டும் சனா"

"வாங்க எல்லாதையும் பார்க்கலாம். லாஸ்ட்ல முடிவுபண்ணிக்கலாம்"

அவன் கை பிடித்து அழைத்து சென்றாள்.

'இவள் தெரிஞ்சு பண்றாளா தெரியாம  பண்றாளா? நானே கண்ட்ரோல் பண்ணிட்டிருக்கேன். இவ வேற உசுபேத்திவிடராள். டேய் உனக்கு நேரமே சரியில்லை'

"எனக்கு இது மூன்றும் பிடிச்சிருக்கு. நீங்க ஒன்னை செலக்ட் பண்ணுங்க"

"மூன்றையும் வாங்கிக்கலாம்"

"வேண்டாம். ஒன்னை வாங்கி வளர்க்கலாம். பிறகு பார்த்துக்கலாம்"

"ஹ்ம்ம்..அதை வாங்கிகோ...ஹே என்ன பண்ற...விடு சனா"

"நோ வே.. ஒ ஒ ஒ"

"மழையில் நனையாதே சனா..என்னையும் வேற இழுத்துடே"

"என்ஜாய் பண்ணுங்க பாஸ்"

அவர்கள் இருந்த இடம் மறைவாக இருந்தது..நற்செரி  பின்னால் இருந்தனர். சர்வேஷ் அவளை ரசித்துகொண்டிருந்தான். ஹர்ஷாவிடம் சொன்ன ஸ்பார்க் அவன் நினைவில் வந்தது.

அவள் அவளையும் அறியாமல்  பாட தொடங்கினாள். அது அவர்களுக்கே உரியதை இருந்தது.

உன்னை கண்டனே முதல் முறை நான்

என்னை தொலைத்தேனே முற்றிலுமாய் தான்

காதல் பூதமே என்னை நீயும் தொட்டாய்

ஹய்யோ ஹய்யோ .அச்சம் வருதே

தப்பிசெல்லவே வழிகள் இல்லை இங்கே

ஹய்யோ ஹய்யோ .

ஏங்கினேன் நான் தேங்கினேன்

ஏனடா போதும் இம்சைகள்

வானமும் இந்த பூமியும் உந்தன் தோற்றமே

உன் பேர் சொனாலே உள்ளே தித்திக்குமே

காதல் கடிதம் அது கொஞ்சம் பேசும்

கண்ணோடு இருக்கும் பல கடிதம்

பெண்ணே நானும் உன் கண்ணை படிப்பேன்

புரியாமல் தவித்தேன் பொய் சொல்லுதோ மெய் சொல்லுதோ

காதல் எனை தாக்கிடுதே

அவள் இதை எதிர்பார்க்கவில்லை. அவனை பார்த்தாள். அவன் காதல் மொத்தமும் அவன் கண்ணில் தெரிந்தது. காதலுக்கே உரிய கண் மொழியிலும் பாடலாகவும் தன் எண்ணங்களை அவன் சொன்னான்.

அவளும் அவன்  காதலால் அவளையும்மீறி அடுத்த வரியை பாடினாள். இருவரும் காதலை அழகான பாடலால் வெளிபடுத்தினார்.

செரி தான் எனையும் அது சாய்த்திடுதே

இரவில் கனவும் என்னை சாபிடுதே

பொதுவாய் வயதில் இதில் தப்பிக்கே யாரும் இல்லையே

உன்னை கண்டனே முதல் முறை நான்

என்னை தொலைத்தேனே முற்றிலுமாய் தான்

ஏனோ இரவில் ஒரு பாடல் கேட்டால்

உடனே என் உள்ளே நீ வருவாய்

கோயில் உள்ளே கண் மூடி நின்றாய்

உன் உருவம் தானே என்னாளுமே முகில் தோன்றுமே

நான் உன்னால் தான் சுவாசிக்கிறேன்

நான் உன் பேர் தினம் வாசிக்கிறேன்

உயிரை விடவும் உன்னை நேசிக்கிறேன்

கடவுள் நிலையாய் நம் கண்ணிலே காட்டும் காதல்

உன்னை கண்டனே முதல் முறை நான்

என்னை தொலைத்தேனே முற்றிலுமாய் தான்

இருவரும் மெய்மறந்து பார்த்துக்கொண்டிருந்தனர்.

"சனா.."

"ஹ்ம்ம்..நான் சும்மா பாடினேன் சவேஷ்" முகம் முழுவதும் வெட்கம்.

"ஆனால் நான் சும்மா பாடலை சனா. உணர்ந்து பாடினேன்...உன் பதில்என்ன சனா?"

"நான் பதில் சொல்லிட்டேனே"

"சனா...நீ"  "ஐ லவ் யு சனா"

இந்த ப்ரோபோசல் ஓகேவா பிரிண்ட்ஸ். மத்த இரண்டு ஜோடியையும் நெக்ஸ்ட் வீக்ல பார்க்கலாம்.  கொஞ்சம் ஸ்க்ரூ கொடுக்கணும். நவீன் பற்றியும் சொல்றேன்

டாட்டா...படிச்சிட்டு கமெண்ட்ஸ் மறக்காம சொல்லுங்க

தொடரும்

Episode # 08

Episode # 10

{kunena_discuss:855}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.