“என்ன ஆச்சு சார்?”
“பின்ன என்னம்மா? எவ்வளவு அழகா மாமான்னு சொன்னே! இப்ப வார்த்தைக்கு வார்த்தை சார் சார்னு கூப்பிடறியே?”
அவள் நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
“அடுத்து என்ன செய்யலாம் மாமா?”
“குட்! இதைத்தான் எதிர்பார்க்கிறேன். நாம அவங்க வீட்டில் போய் பேசுவோம். சம்பிரதாயப்படி பெண் பார்க்கும் படலங்கள் நடக்கட்டும். நான் கல்யாண வேலைகளை கவனிச்சுக்கிறேன்.”
“உங்களை யாருன்னு கேட்டாங்கன்னா?”
“தாய் மாமான்னு சொல்லிட்டுப் போ!” சர்வ சாதாரணமாய் சொன்னார்.
“சரிம்மா! கிளம்புவோம். மூன்று கல்யாணங்களை நடத்த வேண்டிய பொறுப்பு இருக்கிறதே!” சிறு பையன் போல் துள்ளும் அவரைக் கண்டு உமாவால் சந்தேகப்பட முடியவில்லை.
“என
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்தது.
“அண்ணா! நான் அப்படி கூப்பிடலாமில்லையா?”
“என்னம்மா இப்படி கேட்டுட்டே? நான்தான் உன் அண்ணன்னு முன்னாடியே சொல்லிட்டேனே!”
“நீங்க இவ்வளவு சொன்ன பிறகும் எப்படிண்ணா என்னால் மறுக்க முடியும்? என் பொண்ணை உங்களைத் தவிர வேற யாரால் நல்லா பார்த்துக்க முடியும்?” மனதார சொன்னாள்.