“சரிம்மா! நிறைய வேலை இருக்கு. நான் கிளம்பறேன்.”
உமாவிடமும் விடை பெற்று கிளம்பினார்.
மணமக்களை தன் வீட்டிலிருந்து வழியனுப்ப தயாராக இருந்தாள் வடிவு. ஆசிர்வாதம் பெற்றபின் மாப்பிள்ளைகள் வெளியில் சென்று நின்று கொண்டிருந்தனர்.
“அம்மா!” இருவருக்கும் கண்களில் கண்ணீர். அம்மா மீது பாசமானவர்கள்தானே. உமாமேல்தானே அவங்களுக்கு வெறுப்பு.
“உடம்பை நல்லா கவனிச்சுக்கனும்மா. நாங்க கிளம்பறோம்.”
“நில்லுங்கம்மா.” மகள்களை அழைத்தாள்.
“தங்கச்சிகிட்டயும் சொல்லிட்டுப் போங்கம்மா.”
இருவரும் உமாவைப் பார்த்தனர். அவள் எதிர்பார்ப்புடன் நின்றிருந்தாள். அவர்கள் பார்வையில் வெறுப்புதான் மிஞ்சியிருந்தது.
“அவகிட்ட ஏன் சொல்லிட்டுப் போகனும்?
...
This story is now available on Chillzee KiMo.
...
="text-align: left;">Episode # 03
{kunena_discuss:882}