பதில் சொல்லிவிட்டு அவன் மாடி ஏறி செல்வதையே பார்த்திருந்தாள் நந்தினி. நீ சாப்பிட்டாயா என்று கேட்க மாட்டானா என அவளினுள் ஆசை இருக்க தான் செய்தது...
ஆனால அவனை பொறுத்த வரை அவள் இந்த வீட்டில் இருக்கும் ஷோபா, நாற்காலிகளை போல் இன்னுமொரு ஜட பொருள் அவ்வளவு தான்...!
அவன் ஏன் அவளிடம் பேசுகிறான்...!
அமைதியாக அவன் உணவு உண்ண தேவையானவற்றை எடுத்து மேஜை மீது வைத்தாள்.
இந்த ஊமை நாடகத்தை இன்னும் எத்தனை நாட்கள் தொடர்வது என்று தெரியவில்லை... காலேஜ் திறக்கும் வரையாவது அவள் பல்லை கடித்துக் கொண்டு இருந்தே தீர வேண்டும்...
அதற்கு முன் அவளுக்கு காலேஜில் அட்மிஷன் வேறு கிடைக்க வேண்டும்...!
இலக்கில்லாமல் பார்த்தவளின் கண்ணில் சுவரில் மாட்டி இருந்
...
This story is now available on Chillzee KiMo.
...
வேறு ஒன்றுமில்லை...
தனக்குள் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டு பைக்கை கிளப்பிக் கொண்டு சென்றான்.
ஆனால் அன்றைய நாள் முழுவதும் நந்தினியே அவனை அலைக்கழித்தாள்....
ராபர்ட்டின் பேன்ட் (band) செய்துக் கொண்டிருந்த ஒத்திகை, அந்த இசையின் ஓசை எதுவுமே அவனின் கவனத்தை கவரவில்லை....