அருகே அமர்ந்திருந்த பெண்ணின் முகத்திலும் நட்பு இல்லை.
இருந்தாலும் உமா பொறுமையுடன் நின்றாள்.
“என்ன செய்யனும்?”
“இதில் ஒரு பையெழுத்துப் போடனும்.” ஒரு தாளை நீட்டினாள்.
வாங்கிப் படித்தாள்.
“திருவாளர் தர்மராஜுக்கு மருமகளாகப் போகும் உமாவாகிய நான் சுய நினைவுடன் முழு சம்மதத்துடனும் எழுதிக்கொள்வது. என் சகோதரிகளின் திருமணம் செய்ய வேண்டிய ஒரு கட்டாயத்தின் பேரில் நான் என் திருமணத்திற்கு சம்மதித்தேன். எந்த ஒரு நிலையிலும் என் கணவர் வீட்டினர் மனம் கோணாமல் நடந்துகொள்வேன். அவர்கள் மனம் வருத்தம் கொள்ளும்படி நான் நடந்தால் எந்த நிலையிலும் அவர்கள் என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பலாம். ஏனென்றால் கடனுக்கு ஈடாகத்தான் நான் இந்தத் திருமணத்தை ஒத்து
...
This story is now available on Chillzee KiMo.
...
குதி இல்லை. நான் கோடீஸ்வரன். என்கிட்டயே உன் திமிரை காட்டினே! அதான் ஒட்ட நறுக்கி வைக்கனும்னு ஆசைப்பட்டேன். இப்பதான் எனக்கு திருப்தியாய் இருக்கு. இனியாவது உன் தராதரம் தெரிந்து நடந்துக்கோ.” என்று அவள் முகத்தை பார்க்க கூட பிடிக்காதவனாய் முகம் சுளித்து அவன் பேசியது இன்று வரை காதில் ரீங்கரிக்கிறது.