“அப்டில்லாம் ஒரு நிலமை அவருக்கு வராதுமா…” உணர்ந்ததைச் சொன்னாள்.
“இவ்ளவுநாள் எத்தனையோ பொண்ணு பார்த்துட்டேன் …ஆனா அவனுக்கு என்னமோ யாரையும் பிடிச்சதே இல்லை…பட் உன்னைதான் அவனுக்கு பிடிச்சிருக்குது….”
‘ஐயோ இதுக்கு நான் எப்டி எக்ஸ்பிரெஷன் கொடுக்கனும்னு கூட எனக்கு தெரியலையே…’ மனதிற்குள் புலம்பினாள்.
“அவன் முடிவுல எனக்கு ரொம்பவுமே சந்தோஷம்தான்…”
ஈ ‘இதுக்குப் பேரு சிரிப்பான்னு கேட்றாதீங்க ஆன்டி’ மனதுக்குள் கெஞ்சினாள்.
“ஆனா உடனே மேரேஜ் செய்தா என்னனு கேட்டா, நான் ரெடிதான் அவளுக்குத்தான் டைம் வேணும்னு சொல்றான்….”
‘அடப்பாவி இப்டியா பழியத்தூக்கி என் மேலப் போடுவ…’ உதட்டிலிருந்த ஈ (சிரிப்புதான்) ஓடிப் போயிருந்தது.
“எனக்காக கொஞ்சம் சீக்கிரம் செய்துக்க கூடாதா லியாமா..?”
என்ன சொல்வாள் இதற்கு.?
பே பே என முழி
“சரி என்ட்ட சொல்லமுடியாதபடி வேற எதுவும் இருக்கும் போல….” அவரின் முகமும் மனமும் சோர்வது இவளுக்குத் தெரிகிறது.
“ஆனா குறஞ்சபட்சம் எங்கேஜ்மென்ட் கூட வேண்டாம்றது நல்லா இல்லமா…அதையாவது பார்ப்பேன்ல”
பரிதாபமாய் முழித்தாள்.
“என்ன ப்ரச்சனை லியாமா?”
தெய்வமே கூரைய பிச்சுகிட்டு வந்து கூட்டிட்டுப் போய்டேன்….மனதிற்குள் மன்றாட்டு…
“அது….வந்து….”
“இப்டி அரண் வீட்லனாலும் நீங்க ரெண்டு பேரும் பார்த்துகிறது மீடியாவுக்கு போகாமலா இருக்கும்?”
இப்டி வேற ப்ரச்சனை இருக்குதா, பய நினைவுடன் எச்சில் விழுங்கினாள்.
இவள் முகம் சுருக்கியவிதம் அவருக்கு எப்படி புரிந்ததோ?
“உனக்கு உண்மையிலே ப்ரபுவ பிடிக்கலையோ…?” அவர் முகம் காண்பித்த வலிக்கு இவள் என்ன பதிலை சொல்வாள். மனகண்ணில் ஜோனத்தின் உருவம்.
“அப்டில்லாம் இல்ல ஆன்டி….”
அன்பரசிக்கு இந்த பதில் போதுமானதாய் இல்லை போலும். ஆழமாய் இவளைப் பார்த்தார்.
அவர் பார்வை தாங்காமல் வாய் சொல்கிறது “அவங்களப் பிடிக்கும் ஆன்டி…..ரொம்பவே” அமில அலை அள்ளி எறிந்தது பெண்மனது. இப்பதான் பொய் சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டு வந்த…அதுக்குள்ள திரும்பவும் வந்து இப்டி பொய் சொல்றியே….?அதுவும் யார்ட்ட எப்படிபட்ட ஒரு பொய் சொல்லிகிட்டு இருக்க…..?கோடி குத்துகள் மனம் முழுவதும்.
ஆனால் ஆழ புதைந்திருந்த அடிமனதிற்குள் நுழையக் கூட இல்லை அந்த அலை அமிலம். உள்ளாடியது ஒரு ஜீவ உணர்வு. நீண்ட நெடும் இரவில் அவள் அறியா ஓர் விடியல்.
“அப்படின்னா நாளைக்கு எங்கேஜ்மென்ட்...அவனுக்கு இஷ்டம் இருக்குது உனக்காகத்தான் யோசிக்கான்….உனக்கும் பிடிச்சிருக்குது…பிறகென்ன…?” இவள் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு சென்றுவிட்டார் அன்பரசி.
அடுத்தென்ன? படுக்கையில் உறங்காமல் உருண்ட படி இவள். மொபைல் இருந்திருந்தால் நிச்சயம் அவனை அழைத்திருப்பாள். இத எப்டி சமாளிக்க போறான்? ஜோனத் வந்து என்ன சொல்லி திட்டுவான்?
அவனின் ஒவ்வொரு திட்டும் நினைவு ஊர்வலம். சரியான பச்சமிளகா பார்ட்டி….ஆனாலும்…..இட் ஹெல்ப்ஸ்….
இவள் நெற்றி பட்டதும் அவன் சட்டென உருவிய கை ஞாபகம் வருகிறது. என்னயப் பார்த்தா கேவலமாதான தோணும் அவனுக்கு?
இன்னும் கொஞ்ச நேரம் உருண்டவள், எழுந்து அறையைவிட்டு வெளியே வந்தாள்.
எதிரிலிருந்த லாஞ்சில் சிறு வெளிச்சத்தில் இருந்து எதையோ பேசிக் கொண்டிருந்தார்கள் அரணும் அவன் அப்பா திரியேகனும்.
சத்தமின்றி தன் அறைக்குள் நுழைந்து கொள்ள எண்ணினாள் இவள்.
அதற்குள் இவளை கவனித்துவிட்டான் அரண். “என்னமா இன்னும் தூங்கலையா?”
“இ..இல்ல…..குட் ஈவ்னிங் அங்கிள்” பக்கத்திலிருந்து பார்த்து புன்னகைத்த திரியேகனுக்கு ஒரு வணக்கம்.
சின்னதாய் புன்னகை அவரிடம். “இங்க வாம்மா….”
சென்றாள். அரண் அருகிலிருந்த இருக்கையை காண்பித்தான். அமர்ந்தாள்.
காஃபி சாப்டுறியாமா…?” திரியேகன்
அவர் கேட்டதும் சாப்பிடலாம் என தோன்றிவிட்டது.
“ஓகே அங்கிள்….”
ப்ளாஸ்கிலிருந்து காஃபி ஊற்றி நீட்டியது அரண்.
“தேங்க்ஸ் அண்ணா….”
பருக ஆரம்பித்தாள். “உங்க வீட்ல யாரு ஃபிட்ஸ் பேஷண்ட்….? அப்பவே கேட்கனும்னு நினச்சேன்….” அவன் சுகவிக்காக பரிதவித்துக் கொண்டிருந்த நேரத்தில் இவள் சொன்னதைக் கூட இவ்வளவாய் ஞாபகம் வைத்து கேட்கிறானே….
“என் பாட்டி தான்….பட் இப்ப அவங்க இல்லை….”
“ஓ….ஐம் சாரி…வீட்ல வேற யாரெல்லாம் உண்டு….? லியா அம்மா செல்லமோ…..ஹயாவுக்கு சேட்டை பார்ட்னர் எங்கப்பான்ற மாதிரி உனக்கு கம்பெனி உங்க தாத்தாவா?” அரண் கேட்க திரியேகன் முகத்தில் பெருமிதம்.
“என்னையும் பாட்டியையும் தவிர வீட்ல யாரும் கிடையாதுண்ணா…நான் எனக்குத்தான் செல்லம்…சேட்டைலாம் தனியாத்தான் செய்துப்பேன்….நீங்க…?” இவள் சொல்ல திரியேகன் சிரித்தார்.
“அவனுக்கு சேட்டை பண்ணவும் சுகவிதான் வேணும் செல்லம் கொடுக்கவும் அவதான் வரனும்…..எதுலனாலும் பஞ்சாயத்துக்கு மட்டும் நான், தூதுவர் நம்ம ப்ரபு”
“ஹேய்….இதுலாம் ஃபவ்ல் ப்ளே….…திஸ் கொஸ்டியன் வாஸ் ஃபார் மீ…..நான்தான் ஆன்ஸ்வர் செய்யனும்…” தன் அப்பாவைப் பார்த்து சொன்ன அரண் இவளிடமாக
“எனக்கு அப்பாதான் எல்லாம்….அம்மா இல்லைல அதனால….அப்பா செல்லமும் கொடுப்பாங்க… பட் ஸ்டிரிக்டாவும் இருப்பாங்க….நான் சேட்டை செய்ததுன்னு சொன்னா அப்பா சொன்ன மாதிரி மெயினா சுகவி கூடதான்…அப்றம் ப்ரபு கூடயும் உண்டு…”
“நீங்களும் சுகவியும் சைல்ட் ஹூட் ஃப்ரெண்ட்ஸுன்னு ஜோனத் சொன்னாங்க….
சிரித்தான் அரண்.” அப்டி சொல்லிருக்க மாட்டானே….”
இதே கேள்விக்கு ஜோனத்தும் சிரித்தது ஞாபகம் வருகிறது இவளுக்கு.
“அவங்க ஆரம்பத்துல பயங்கரம்மா சண்டை போட்டுப்பாங்கம்மா….” திரியேகன்தான் சொன்னார். ஹான் எனப் பார்த்தாள் சங்கல்யா…. “அப்றம் லவ் மேரெஜ்…” அரண் சொல்லிய விதம் இவளுக்கு பிடித்தது. அவனுக்கு சுகவி மேல் உள்ள அன்பை இவளால் உணர முடிவது போல் ஒரு உணர்வு.
“அதெப்டி?”
சின்னதாய் சிரித்தான் அரண். வாட்சைப் பார்த்தான். “இப்ப ரொம்ப லேட்…நாளைக்கு கதை கேட்கனும்னு தோணிச்சுன்னா ஈவ்னிங் ஃப்ரீயா இருக்கப்ப பேசலாம்…”
‘குட் நைட்” சொல்லிவிட்டு கிளம்பி வந்துவிட்டாள் சங்கல்யா.
அரணும் திரியேகனும் பழகும் விதம் அவளுக்கு ஆச்சர்யமாக இருக்கிறது , பிடித்திருக்கிறது. இன்னுமாய் அவர்களைப் பற்ரி தெரிந்து கொள்ள ஒரு க்யூரியாசிட்டி….ஆனால் இவ்வளவு தூரம் அவளிடம் பேசியதே அதிகமல்லவா?