இவங்களுக்கு இவ இங்க உண்மையிலேயே எதுக்கு வந்தான்னு தெரிய வர்றப்ப எப்டி இருக்கும்?
எப்ப விடியும்? எப்ப வருவான் ஜோனத்? அவன்ட்ட போய் இதையும் புலம்பனும்…
ஆனால் மறுநாள் அன்பரசி கொடுத்த மென் ஆரஞ்சு வர்ண புடவையும் சில நகைகளையும் அணிந்து எளிமையான அலங்காரத்தில் அரண் வீட்டிலேயே நடக்கவிருக்கும் சின்ன ஃபங்க்ஷனுக்கு என சங்கல்யா தயாராகி வரும்போதுதான் பார்வையில் பட்டான் ஜோனத். சந்தன நிற ஷெர்வானியில் அவன். கூட்டம் என்று அரண் குடும்பத்தையும் அன்பரசியையும் தவிர யாருமில்லைதான். ஆனால் விழா அலங்காரம் படுதாம்தூம்.
ஜோனத் அருகில் செல்ல செல்ல ஏனோ யாரையும் எதையும் நிமிர்ந்து கூட பார்க்க முடியவில்லை அவளால். குற்ற மனப்பான்மை. எப்பொழுது முடியும் இது என்றிருந்தது அவளுக்கு. மாலை அணிவித்து இருவரையும் மோதிரம் மாற்றிக் கொள்ள சொன்னார்கள். ஃபோட்டோக்கள் பளிச் பளிச்…
அவன் அணிவிக்கும் மோதிரம் வாங்கிக்கொள்ள நீட்டிய இவள் விரல் நடுங்குகிறது. மெல்ல இவள் விரலைப் பற்றி அதனிலும் மென்மையாய் மோதிரத்தை அணிவித்தான். முதன் முதலாய் இவள் சம்மதத்துடன் ஓர் ஆண் தொடுகை.
கண்ணில் நீர் கட்டி அவன் நீட்டிய விரலில் கொட்டுகிறது ஒரு சொட்டு. இவள் அவனுக்கு அணிவித்த மோதிரமும் ஏறுகிறது அதேநேரம் அவ்விரலில்.
“உன் ஆன்ட்டி பார்க்காங்க…..” சிறு குரலில் சொன்னான் ஜோனத். அடுத்து அவனுடன் அமர்ந்து சாப்பிட சொன்னார்கள். ஒரு வாய் உணவை கூட உண்ண முடியவில்லை அவளால்.
“நீ சாப்டாம இருக்றதால எதுவும் மாறிடப் போறது இல்ல…ப்ளீஸ் தயவு செய்து சாப்டு….ப்ரியாணி முடியலைனா கர்ட் ரைஸ்ஸாவது சாப்டு….”
பெயருக்கு ரெண்டு வாய் அள்ளிப் போட்டுக் கொண்டாள். “ப்ளீஸ் என்ன சீக்ரமா ரூம்க்கு போக விடுங்களேன்…” அடுத்த ஐந்தாவது நிமிடம் தன் ரூமில் போய் அடைந்தாள். கட்டிலில் போய் விழுந்தவள் எவ்வளவு நேரம் அப்படியே கிடந்தாளோ….?
அவள் மொபைல் சிணுங்குவது காதில் விழ மெல்ல அதை எடுத்து காதில் வைத்தாள்.
“நான் தான்மா அனவரதன் பேசுறேன்….என் பொண்ண பத்தி எப்ப எதை நீ மீடியாவுக்கு கொண்டு போனாலும், இந்த எங்கேஜ்மென்ட் ஃபோட்டோவும் நியூஸும் மீடியாவுக்குப் போகும்….அதை ஞாபகம் வச்சுகிட்டு ஒழுங்கா இருந்துக்கோ….உன் மேல ஒரு செக் வைக்க சொல்லிருந்தேன் ப்ரபுட்ட…அவன் இவ்ளவு ஸ்மார்ட்டா இருப்பான்னு நான் நினைக்கலை….இப்போதான் எனக்கு முழு நிம்மதி….”
உடைந்து உறைந்து போனாள் அவள். ஆக எல்லாம் இதுக்குத்தானா? எத்தனை அலங்காரம் எத்தனை ஃபோட்டோஸ்? அவன் அம்மாவை தூண்டிவிட்டு இவளை இப்டி ஏமாத்திட்டானே….வெகு காலத்திற்குப் பின்பு கதறி அழுதாள் சங்கல்யா.
தொடரும்
{kunena_discuss:879}