சுகவிதா மயங்கி விழும்போது அரண் மீது கடும் கோபத்திலும் வேதனையிலும் இருந்தாள்தான். மீண்டும் அவள் மயக்கம் தெளிந்ததும் அது தொடரத்தான் செய்தது. ஆனால் தலைவலி காரணமாக அவளுக்கு மருந்து கொடுத்து தூக்கத்திற்குள் அவளைத் தள்ளிவிட்டதால் அவளால் அதன்பின்பு எதையும் கோர்வையாக நினைக்க கூட முடியவில்லை.
சுய நினைவில் மனதில் எதெல்லாமோ கொதித்தாலும், அரண் மீது அறிவில் எத்தனை கோபம் இருந்தாலும், தூக்கத்திற்குள் நுழைய தன் மனதிற்குள் தானே இறங்க…….. இறங்க………
இந்த அரணுடைய வீட்டில் தான், கிட்சனில் அவள் ஏதோ சமைக்க முயன்று கொண்டிருக்கிறாள். ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைத்திருக்கிறாள் அவ்வளவே….”ஏய் ட்ரம்ஸ்டிக் இங்க உனக்கென்ன வேலை…”
சமயலறை உள்ளே நுழைந்த அரண் வந்த வேகத்தில் ஒற்றைக்கையால் பின்னிருந்து அப்படியே அவள் இடையோடு கை கொடுத்து தூக்கிக் கொண்டு போகிறான்…”ஐயோ விடுங்க…நான் கேசரி செய்யப் போறேன்…”
“ஐயையோ அப்ப நான் கண்டிப்பா விட மாட்டேன்…பாவம்டி நான்…”
இப்பொழுது இன்னொரு காட்சி.
இதே வீட்டின் முகப்பு வாசலில் இவள். வெளியே கடும் காற்று. மரங்களும் செடிகளும் வாயுவுடன் வாழ்வாதார போராட்டம். அதை இவள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். இப்பொழுதும் அங்கு வந்த அரண் அவள் பின்னிருந்து தன்னோடு இவளை அணைத்துக் கொள்கிறான்.
“இதென்ன வேலை…வாசல்ல வச்சு…?” சிணுங்கினாலும் அவன் கையிலிருந்து விடுபடும் எண்ணம் எதுவுமில்லை அவளுள்.
“ஏய் கொசு…காத்து உன்ன தூக்கிட்டுப் போயிடப் போகுது….”
“என்னது கொசுவா நான் உங்களுக்கு? …விடுங்க என்ன…” கோபம் போல சொல்லிக் கொண்டாலும் இன்னும் அவனுக்குள் பம்மத்தான் தோன்றுகிறது அவளுக்கு.
“ஸ்கூல்ல படிக்றப்ப நீ கொசு வேலை தான பார்த்த…அதான் அப்ப வச்ச பேரு…வைட் மஸ்கிடோ..இப்ப வைஃப்மஸ்கிடோ…”
இப்பொழுது எங்கோ இரவில் இவர்கள் இருவரும் நடந்து கொண்டிருக்கிறார்கள்…
“அதெல்லாம் கிடையாது கேர்ள் பேபியோ பாய் பேபியோ…உங்க நேம்தான் குட்டிக்கு…”
“எதுலதான் என் பேச்சே கேட்ட..…சரி வச்சுக்கோ…...என்ன நீ எங்க ரெண்டு பேர்ல யாரக் கூப்டாலும் சீனியரைனு நினச்சு ஜூனியரும் , ஜூனியரைனு நினச்சு நானும் கண்டுக்காம இருந்துப்போம்…”
ஷ்…ஆஅ…இப்பொழுது இவள் தன் காலைப் பிடித்து நொண்டினாள்.
“ஹேய் …என்ன ஆச்சு விதுமா…?” பதறியபடி குனிந்து அவள் காலைப் பார்த்தான் அரண்.
கண் சிமிட்டினாள் இவள். “நான் இன்னும் உங்கள கூப்டவே இல்ல…அதுக்குள்ள இப்டி…இதுல கூப்ட்டும் வராம இருக்கப் போற ஃபேஸை கொஞ்சம் காமிங்க பாப்போம்……ரெண்டு பேர்ல யாரக் கூப்டாலும் கண்டிப்பா நீங்க வந்து நிப்பீங்க…உங்க ஜூனியர் விஷயம் தான் தெரியலை….”
இப்பொழுது வேறு ஒரு காட்சி
ஏதோ மருத்துவமனை போலும்....இவள் மிரண்டு போய் அமர்ந்திருக்கிறாள்..
“என்ன விதும்மா இதுக்குப் போய் யாராவது இவ்ளவு டென்ஷனாவாங்களா…?” அருகிலிருந்த அரண் ஆறுதல் சொன்னான்.
“எனக்கு பயமா இருக்குது ஜீவா.. சின்ன வயசுல இருந்து இஞ்ஜெக்க்ஷன்னா ரொம்ப பயம்…” இவள் அரணை ஜீவா என்று கூப்பிடுகிறாள்.
“அதுக்குன்னு இவ்ளவா…? “
“டாக்டர் டாக்டர் இந்த பொண்ணுதான் டாக்டர் விடாதீங்க ஒன்னுக்கு ரெண்டா அதுவும் பெரிய நீடில் வச்சு போடுங்க…” ப்ரபுதான் பக்கத்திலிருந்து கேலி செய்து கொண்டிருக்கிறான்.
“ஏன்டா அவளே அரண்டு போய் இருக்கா…இதுல நீ வேற..” அரண் தன் நண்பனிடத்தில் மனைவிக்காய் பரிந்து பேசுகிறான்.
“இதெல்லாம் உலக மகா அநியாயம்ங்க மக்களே…ஸ்விமிங் தெரியாத பொண்ண பூல்ல தூக்கிப் போட்டவர் பேசுற பேச்சா இது..?”
“போடா..போடா அதெல்லாம்......” அரண் ஏதோ சொல்லிக் கொண்டிருக்க டாக்டர் உள்ளே நுழையவும் பேச்சு நின்று போகிறது.
சுகவிதாவோ அருகில் இருந்த அரண் கையைப் பற்றுகிறாள். அவளை ஒரு பார்வை பார்த்த டாக்டர் “இவங்களை தனியா …”
அவர் சொல்லி முடிக்கவில்லை.
“நோ…நோ டாக்டர்….நான் இவங்க பக்கத்துலதான் இருப்பேன்…” இன்னுமாய் மிரள்கிறாள் பெண்.
டாக்டர் அரணைப் பார்க்கிறார். “நான் என்ன சொல்ல வரேன்னா…”
“இல்ல டாக்டர் அவ தனியா இருந்தா இன்னும் அதிகமா டென்ஷனாவா…. ப்ளீஸ்…” அரண் தான்.
இப்பொழுது நர்ஸ் கொண்டு வந்த இஞ்ஜெக்க்ஷனை வாங்கிப் பார்த்துவிட்டு நர்ஸிடம் கொடுக்கிறார் டாக்டர்.
அரணின் கையைப் பற்றியிருந்த சுகவிதாவோ இப்பொழுது அவனது தோளோடு சென்று அப்புகிறாள்.
“ரொம்ப பயமா இருக்கு ஜீவா…” நடுநடுங்கிய சிறு குரலாய் வருகிறது வார்த்தைகள்.
“ஒன்னுமில்லடா…ஒரு சின்ன டி டி அவ்ளவுதான்…எறும்பு கடிச்ச மாதிரி இருக்கும்…அதுவும் ஃபார் அ செகென்ட்……தட்ஸ் ஆல்”
“…………………….”
“போடலாமா…ஓகேவா?”
“ம்…” சொல்லிவிட்டாளே தவிர உடல் நடுங்குகிறது.
நர்ஸைப் பார்த்து தலையாட்டி சம்மதமாக சைகை செய்த அரண், தன் இடத்தோளில் சாய்ந்திருந்த சுகவி தலையை தன் இடக்கையால் சுற்றி அவள் கண்களை உள்ளங்கையால் மூடுகிறான்.
“அதெல்லாம் ஒன்னும்…” அவள் தலையை ஆட்டிய படி ஏதோ மறுப்பாக சொல்ல
“ஏய் அவன ஆட்டத அரைடிக்கெட்…” ப்ரபாத்தின் வார்த்தைகளில்
இன்னுமாய் இறுகி நடுங்கி அழுகையாய் வருகிறது வார்த்தை அவளுக்கு “வலிக்குதா ஜீவா?”
அரணுக்கு இஞ்ஜெக்க்ஷன் போடுகிறார்கள் என அவளுக்குப் புரிந்து விட்டது தானே…
“ஆமா இன்னும் கொஞ்சம் வேகமா நீ அவன ஆட்டி இருந்தா கூட ஏதோ சொல்லிக்கிற மாதிரி வலிச்சிருக்கும்…இப்ப என்ன செய்றதாம்….? வேணா நர்ஸ்ட்ட ரெண்டாவது இஞ்ஜெக்க்ஷன் ஏதாவது போடச் சொல்லுவோம்….” ப்ரபாத் தான்.
“போடா..” அரண் இவள் மீது வைத்திருந்த கையை விலக்க அவசரமாக அவன் அடுத்த தோள் பகுதியை எட்டிப் பார்க்கிறாள். அரண் தன் வலக்கையால் ஷர்ட்டின் மேல் பட்டனை பூட்டிக் கொண்டிருந்தான். அவன் தோளில் பேண்டேஜ் ஒட்டப்பட்டிருப்பது கண்ணில் படுகிறது இவளுக்கு.
இன்னொரு நாள்
இவள் அரணுடன் காருக்குள் ஏறி அமர்ந்தவுடன் துள்ளி அவன் மீது சாய்ந்து இறுக்கி அணைத்து சில அன்பின் சின்னங்கள் அவன் கன்னத்தில் இரைத்து….”ரொம்ப சந்தோஷமா இருக்கேன் ஜீவா…ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்….அம்மாவுக்கு என்னப் பார்க்கவும் அப்டி ஒரு சந்தோஷம் தெரியுமா…தேங்க்ஸ்பா ….”
இன்னும் துண்டு துண்டாய் எத்தனையோ கனவுகள். எங்கும் எதிலும் அரண் என்னும் ஜீவன். காதல் எனும் சுகமயம். இன்பம் நிலை வரம்.
M | Tu | W | Th | F |
---|---|---|---|---|
TA 🎵 MM-1-OKU 🎵 |
RTT |
MM-2-AMN |
PT |
UKEKKP 🎵 MM-1-OKU 🎵 |
UKEKKP |
UANI |
CM |
UANI |
UKAN |
RTT 🎵 UKEKKP 🎵 |
MM-2-AMN |
UKAN |
TM 🎵 UKEKKP 🎵 |
* - Change in schedule / New series
If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.
sghavin niaivu alaigal veeesiyathu azhagana thendral kaatru .......
sugha oda decidion sooooppper ..
excellent ..
cant wait to read wat happen to sangu
Sugaviku ella gnanabagam varathu nala sign and sugavi avaloda jeevanai purinchukitathu
jonath-liya airport scenes
Liya ethuku inga vanthirukkanu aran ku theriyuma
Sankalya yenna ithu ithanai avasaram, Ippothan Aran nallavana irukkalam appadinnu yosicha, athukulla Prabaath mela doubt vanthu athai Aran lifela kaatta aarambichutta. Hmm What will be Aran's reaction, waiting to know????
சூழ்நிலைகளுக்கு பொருள் கொள்ள நினைத்தால் எப்படியும் பொருள் கொள்ளலாம் ..
சங்கல்யா எண்ணவோட்டம் சிறந்த உதாரணம்.
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு. தனக்கு ஒருவர்
தன் அந்தரங்கத்தை அடுத்தவர் வெளிப்படுத்தபோவதாய் கூறுவதே வலி என்றால் அடுத்தவர் அந்தரங்கம் வெளியே வந்தால் அது அவர்களுக்கு எத்தனை வேதனையாய் இருக்கும் என்பதை அவள் ஏன் சிந்திக்கவில்லை.
நேசிப்பதாய் கூறும் ப்ரபாத் தனக்கு நம்பிக்கைத் துரோகம் செய்வதாய் அவனை சாடுபவள் அவளை தங்கையாக நினைக்கும் அரணுக்கு அவள் செய்யநினைத்ததும் நம்பிக்கைத்துரோகம் தானே.
கவலைகள், பிரச்சனைகள் நெருக்கும்போது மனித மனம் நெருக்கும் சிந்திக்க மறுக்கிறது.
பெயர் பொருத்தமாவைக்குறதுல பின்றிங்க சுவீட்டி
.சுகவியின் நினைவுகள் சில நேரம் காயம் செய்கிறது சில நேரம் மாயம் செய்கிறது. இரவில் விழித்துக் கொள்ளும் ஆழ்மனம் அவளது வாழ்வின் இன்ப நினைவுகளால் மாயம் செய்கிறது பகலில் அவள் வாழ்வின் கசப்பான நினைவுகள் அவள் ஆழ்மனத்தை தூங்கச் செய்து காயம் செய்கிறது.
நினைவுகள் நிழல் போல நிழல் எப்போதும் உடலேடு இருக்கும். ஆனால் ஒளி உள்ள இடத்திலேயே அவை வெளிப்படும்.
அரண் ஒளி. அவன் அருகாமையில் அவள் நினைவுகள் வெளிப்படுகின்றன.
காயமே மருந்தாகிப் போவதுபோல் அவள் நினைவுகள் வலி கொடுத்தாலும் அவை அவள் நினைவுகள் மீள்வதை காட்டுகின்றன. விழித்திருக்கும் பொழுதுகளில் சில நேரம் நினைவில் காயம் கொள்ளும் மனம் இரவில் இனிய நினைவுகளால் தனக்குத்தானே மருந்திட்டும் கொள்கிறது .
சாய்வதற்கு தோள் இருந்தால் எத்தனை பெரிய துன்பங்களையும் உள்ளம் தாங்கும்
sugu oda fb pathi solldrathu romba cute ta erunthuchu
sugu sikirama arunnai kunnamai arunnoda happyaiduva polla
sangalya pannathu thappunu ava feel pannuvala ellaiya
appo sangalya oda entha thittam arunnuku munnadiya tharinji eruka
Nice episode..
Liya - Aran parthiu inime purinchippanu ninaikieren.
Sugvukku seekiram amnesia sariagumnu thonudhu..
Waiting to read next episode!!
Short ah "achacho" update
Enna da kovama irukka nu nencha, takkunu sweet girl aitaa Suga
Liya Dan kavuthutaaa :cry: .. Ipdi ya revenge edupaa???..
BuT Jona Dan paavam..epdi irukkum SH reaction nu theriya eager ah iruken.. Boss one month aprum Dan re entry????
Ini ena aagum.. Seekiram sollidunga
Jeeva nu koopdavum inga aranukum ethana name o nu confuse agiten.
Sugavi Ku niyabagam varathu ellam semma super scene.
Ivalo poratathulaium sixer konjam romantic than anga nikureenga sweety.
Jonath strong base but ippo konajm week agi iruku.
Jonath illama 1 month appao evalo epi.
Next Anna thangachita fb solla porara
Romba thrilling episode.
Sangalya thaan purinthu kondathu thapunu sikirame ternjupangala?
Eagerly waiting for the next update!
Sugaa-vin memories...anta memories sollum sambavangal...ovvoru pulliyayum inaitu mulu picture kondu vara vendum....eppavum pola inta style-i miga rasithen.
Last scene romba pidichatu...
Appo Aranuku Aval nokkam terintu iruntataa..
Ini Aran enna solla poraarnu paarka next epikaga ippave kaatirukiren.