" எவ்வளவு நாளாச்சு மதனி உங்க கையாள காபி குடிச்சு ?"என்று உரிமையாய் பெருமூச்சு விட்டார் அவர் .. வாசுகிக்கே இவரது உரிமை கொஞ்சம் விந்தையாய்தான் இருந்தது .. கண்களாலேயே கணவனை கேள்வியாய் அவர் பார்க்க , வரதராஜன் தான் இருதலை கொல்லி எறும்பாய் தவித்தார் ..
காரணம் இல்லாமல் அவர் தங்கை அங்கு வரவில்லை என்று புரிந்துகொண்டார் அவர் ..தனது மகளுக்கு வரன் பார்க்கும் செய்தி எப்படியோ அவரை எட்டி இருக்க வேண்டும் ..அதனால்தான் இங்கு உரிமை குரல் ஒலிக்கிறது என்று சரியாய் கணித்து இருந்தார் வரதராஜ் .. அத்தையின் பேச்சினை கேட்டு கொண்டே வீட்டின் பின் புறமாய் சென்று முகம் கழுவிவிட்டு நிமிர்ந்தவளின் முன் கை கட்டி மந்தகாச புன்னகையுடன் நின்றிருந்தான் அவன் .. அவனை பார்த்ததுமே உச்சி முதல் பாதம் வரை ஏதோ ஒரு பதற்றம் பரவ , கண்களை படபடக்க நின்றாள் மைத்ரேயி.... யார் அவன் ?
அதே காலைவேளை உற்சாகமாய் தலைவாரி கொண்டிருந்தான் கெளதம் ..
" நெஞ்சை பூ போல் கொய்தவளே
என்னை ஏதோ செய்தவளே " என்று உற்சாகமாய் பாடினான் அவன் .. சரியாய் அதே நேரம் இரு கரங்கள் அவன் கண்களை மூட
" மச்சி , நான் உன்னை பார்த்துட்டேன் டா ..இப்படி மொக்கையா விளையாடதே " என்று சிரித்தவன் பரிசாய் கொட்டு வாங்கி கொண்டான் ..
" என்ன சார் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கீங்க ?" - ஜீரோ
" சும்மா தான் ஜீரோ ! "
" நம்பிட்டேன் டா .. உண்மைய சொல்லு "
" மச்சான் , நண்பன் சொன்னா நம்பனும் டா "
" மாட்டேன் போடா .. "
" நீ அடங்கவே மாட்டியா ஜீரோ ?"
" நீ திருந்தவே மாட்டியா கெளதம் ? இன்னும் எவ்வளவு நாள்தான் ஒரே பெண்ணை லவ் பண்ண போற ? சுத்த போர் மச்சி நீ !"
" சரி சரி .. இன்னைக்கு வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு அவளை சரி சொல்ல வெச்சிடுறேன் ஓகே யா டா ?"
" கிழிச்ச !" என்று கிண்டலுடன் உதட்டை பிதுக்கவும் , ஜிரோவின் தலையில் கொட்டுவைத்து தோளில் கைபோட்டு கொண்டான் அவன் ...
" இன்னைக்கு நீயும் கூட வர்றியா மச்சி ? உன் லக்குல அவ எனக்கு ஓகே சொல்லிடலாம் இல்லையா ?"
" நானா ?" என்று பதில் கூறி முடிக்கும் முன்னே , விஷ்வாநிகாவே கௌதமை போனில் அழைத்தாள் ..
" ஹெலோ கெளதம் ?"
" விஷ்வா சொல்லு மா "
அவனது உரிமையான அழைப்பில் அமைதியானாள் அவள் .. சில நொடிகளுக்கு பின் ,
" உங்களை மீட் பண்ணனும் " என்றாள் ..
" கண்டிப்பா ? இப்போவே வரவா ?"
" பத்து மணிக்கு யோகா க்ளாஸ் பக்கத்துல இருக்குற காபி ஷாப்பில் பார்க்கலாம் "
" ஓகே டா " என்று போனை வைத்த கெளதம் , சந்தோஷத்தில் துள்ளினான் ..
" மச்சான் , கலக்கிட்ட டா நீ .. இப்போதான் நீ எனக்கு லக்குன்னு சொன்னேன் .. உடனே விஷ்வாவே கூப்பிடுறா .. எல்லாம் நல்லதா நடக்கட்டும் உனக்கு நானே ட்ரீட் வைக்கிறேன் " என்றவன் தனியாகவே விஷ்வாவை சந்திக்க கிளம்பினான் நடக்கப்போவதை அறியாமல் !
குழலின் அடுத்த கீதத்தில் இணைவோம்
{kunena_discuss:883}