15. மௌனம் எதற்கு? - ராசு
உமாவிற்கு தன் நிலை உணர்ந்த பின் அதிர்ச்சியாக இருந்தது. தன்னை விரும்பாத கணவனின் பால் தன் மனம் ஈர்க்கப்பட்டதை அறிந்து அவள் வருந்தினாள். இதற்கிடையில் அடிக்கடி மோகனாவிடம் இருந்து அவளுக்கு போன் வந்தது. அவளின் பேச்சு மேலும் உமாவை கலக்குவதாகவே இருந்தது. ஒருவருடமாவது நிலைக்கும் என்று நினைத்த தன் வாழ்க்கைக்கு அதற்குள்ளாகவே முடிவு நெருங்கி வந்ததை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அந்த அளவிற்கு மோகனா நெருக்கினாள். அவள் கூட இருப்பதாலேயே சிவனேஸ்வர் தன் சந்தோசத்தை இழந்து தவிப்பதாக கதை கட்டியிருந்தாள் மோகனா.
தன் அன்பு கணவனை வாழ வைப்பதற்காக மட்டுமே இருக்க வேண்டும் என்று விரும்பினாள்.
அவளின் ஒதுக
...
This story is now available on Chillzee KiMo.
...
்தனத்தால் தானே அவனை இழந்து விட்டோமே என்று வருந்தினாள்.
அவளின் எதிரே அமர்ந்திருந்த சிவனேஸ்வருக்கு அவளின் வருத்தம் புரியவில்லை. அவள் நடிக்கிறாள். ஏதாவது சொல்லி தன்னை மயக்க முயல்வாள் என்று எண்ணினான். அதற்குள் அவளிடம் ஜாலமாக பேசி அவளை இந்த ஊரை விட்டு அனுப்ப வேண்டும் என்று முடிவு செய்தான்.