அவனும் ஒத்துக்கொண்டான். அவளை வழியனுப்பி வைத்தான். கோவையில் ஒரு பிரபலமான துணிக்கடையில் தான் அந்த போட்டி அறிவித்திருந்தனர். அது ஆடை வடிவமைப்பாளர்களுக்கான போட்டி. அது தெரிந்துதான் சந்தியா அவனுக்கு அழைத்து சொல்லியிருந்தாள். அதில் கலந்து கொள் என்றால் உமா மறுத்துவிடுவாள். அதோடு அவளுக்கே அந்த போட்டியில் அவள் ஆடை இடம் பெறப் போவது சஸ்பென்ஸாக இருக்க வேண்டும் என்று அவன் ஆசைப்பட்டான். தன் தங்கையிடம் தன் ஆசையைக் கூற அவள்தான் இந்த மாடல் பொண்ணை அழைத்து தனக்கு தேவைப்படுவதாக கூறச் சொன்னாள். இயல்பாகவே மற்றவர்க்கு உதவும் குணம் உள்ள உமா இதற்கு மறுக்க மாட்டாள் என்று அவள் திட்டவட்டமாக எண்ணினாள். அதைப் போலவே உமாவும் ஒத்துக்கொண்டாள்.
இதில் அவளுக்கு பரிசு கிடைக்கிறதோ இல்லையோ? அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
வந்துடுச்சு வடிவு.” கிண்டலாக மொழிந்தவர் அங்கே வீட்டினரிடம் சொல்லி வடிவின் மகள்களை வடிவின் வீட்டுக்கு அழைத்துச் செல்ல அனுமதி கேட்டார்.
வடிவு தயங்கினாள். அவளுக்கு என்று வீடு எது? அவளே இங்கிருக்க முடியாது என்று தவித்தப்போ தானே சந்தியா அவளை கோவைக்கு அழைத்ததே. அதை தர்மராஜ் மறந்துவிட்டாரா?