ஆனால் அவள் யோசிக்கும் முன்னே தர்மராஜ் அனைவரையும் முன்பு அவர்கள் குடியிருந்த வீட்டிற்கே அழைத்துச் செல்லவும் அங்கே அந்த வீட்டு சொந்தக்காரர் அவர்களுக்காக காத்து நின்றதும் அவளுக்கு ஆச்சர்யமாயிருந்தது என்றால் அவர்கள் இறங்கியவுடன் அவர் வீட்டின் சாவியை வடிவிடம் நீட்டவும் அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.
“என்னம்மா பார்க்கிறே. சாவியை வாங்கிக்கோ.”
அவளும் வாங்கிக் கொண்டாள்.
“எனக்கு ரொம்ப சந்தோசம்மா. உங்களை வீட்டை விட்டு காலி பண்ணி அனுப்ப வேண்டியிருக்கேன்னு வருத்தப்பட்டேன். நீங்களே இந்த வீட்டை வாங்கியதில் எனக்கு ரொம்ப சந்தோசம்மா.” அவர் சொல்லிவிட்டு விடைபெற அவள் தர்மராஜை சந்தேகத்துடன் பார்த்தாள்.
“உன்னைப் பத்தி நல்லா தெரியும் வடிவு. நீ பொண்ணு கொட
...
This story is now available on Chillzee KiMo.
...
்றவள் தான் இருந்த நிலையைக் கண்டு அழுவதா சிரிப்பதா? என்று புரியாத நிலையில் தன்னந்தனியே வாடினாள். அதற்கடுத்த நாளும் விடுமுறை தினமாதலால் அவளுக்கு பயம் அதிகரித்தது. உணவு இல்லாமல் இருக்கலாம். ஆனால் குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் எப்படி இருப்பது? ஜீவகன் தன்னை எங்கெங்கே தேடுவானோ என்ற கவலை அதிகரித்தது.