(Reading time: 30 - 59 minutes)

தெல்லாம் அநியாயம் மை சன் .. உன் அம்மா என்னடானா என்னை காதல் மன்னன்னு சொல்லுறா .. நீ என்னை வில்லன் மாதிரி சொல்லுற .. என்ன அநியாயம் இதெல்லாம் " என்று சோகமாய் முகத்தை வைத்து கொண்டார் .. இரு கைகளையும் உயர்த்தி சிரித்தான் சிவா..

" அப்பா ,நானே கமல் சார் ரசிகன் .. நீங்க அவருக்கு மேல நடிக்காதிங்க ..தாங்க முடியல " என்றான் ..

" வாய் ஜாஸ்தி ஆகிருச்சு சிவா உனக்கு .. சத்யா இந்த வீட்டுக்கு வரட்டும் கவனிச்சுக்குறேன் " என்று சிரித்தார் நித்யா .. சட்டென கார்த்திக் மற்றும் சிவா முகத்தில் தீவிரம் படர்ந்தது .. கார்த்திக்கு எப்போதுமே தங்கள் மகனின் திருமண விஷயத்தில் நித்யா கொண்டிருக்கும் அதீத நம்பிக்கை மீது கொஞ்சம் பயம்தான் .. அவசரபடாதே   நித்தி செல்லம் என்று அடிக்கடி அவர்  அறிவுறுத்தியும் கூட நித்யாவிற்கு சத்யா தான் மருமகளாய் வரவேண்டும் என்று ஆசை மட்டும் மாறாமல் இருந்தது ..

சிவா ஒரு பக்கம் வேறொரு சிந்தனையில் இருந்தான் .. அதை மறைத்து வைக்காமல் இப்போதே பேசி விடலாம் என்று உள்மனம் வற்புறுத்த

" அப்பா அம்மா உங்க ரெண்டு பேரிடமும் ஒரு விஷயம் பேசணும் " என்றான்  தீவிரமான குரலில் ..

" சொல்லுப்பா " என்றனர் இருவருமே ..

" அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு கேள்விக்கு பதில் வேணும் "

" என்னடா ?" - கார்த்திக் ..

" ஒருவேளை என் மனசுல இன்னொரு பெண் மீது காதல் இருந்தா " என்று அவன் முடிப்பதற்குள்

" சிவா " என்று அதட்டல் போட்டார் நித்யா ..

" நித்திம்மா " என்று அவரை அடக்கினார் கிருஷ்ணன் ..மேலும் மகனை பார்த்து

" நீ சொல்லு " என்றார் ..

" ம்ம்ம்.... ஒருவேளை எனக்கு இன்னொரு பெண்ணை பிடிச்சு இருந்தா என்ன செய்விங்க ?"  ..முகத்தில் கோபரேகை பரவ அவனை பார்த்தார் நித்யா ..

" விளையாடதே  சிவா .. சின்ன வயசில் இருந்தே நித்யா தான் உனக்கு மனைவின்னு நான் முடிவு பண்ணிட்டேன் "

" நீங்க முடிவு பண்ணி இருக்கலாம் அம்மா ..ஆனா எனக்குன்னு சில ஆசைகள் இருக்க கூடாதா ?"

" இருக்கலாம் .. ஆனா இது ரொம்ப லேட் "

" நீங்க சொல்றது வேடிக்கையா இருக்கு அம்மா ..பெரியவங்க நீங்க எப்பவோ பேசி முடிவெடுத்த விஷயத்துக்காக நான்  என்ன பண்ண முடியும் ? காதல் இன்னார் மேலதான் வரணும்னு  கட்டாயம் இருக்கா என்ன  ?"

" சிவா ஆனா "

" இருங்கம்மா நான் பேசி முடிச்சிடுறேன் .."

" ம்ம் சொல்லு "

" நீங்களும் அப்பாவும் கூட காதல் கல்யாணம் தானே பண்ணிங்கம்மா .. ஒருவேளை என் இடத்தில் அப்பா இருந்திருந்தா அப்போ அவர் என்ன பண்ணி இருக்கணும்னு சொல்றிங்க ?".. அவன் கேள்வியில் இருந்த உண்மை அவரை சுட்டது .. உண்மைதானே ? மகனது விருப்பத்தை விடவா தங்களது ஆசை முக்கியம் ? முதன்முறையாய் நித்யாவின் மனதில் மாற்றம் ... கோபம் தனிந்தவராய் மகனை பார்த்தார் அவர் ..

" சரி சொல்லு டா.. உன் மனசுல இருக்குற பொண்ணு யாரு ?"

" சின்ன திருத்தம் அம்மா ..எங்க விஷயத்தில் காதலில் விழுந்தது நானில்லை ... சாஹித்யா தான்"

" சத்யாவா ? " என்று நித்தி கார்த்திக் இருவருமே ஒரே நேரத்தில் கேட்டனர் ..

" என்னடா ஷாக் மேல ஷாக் கொடுக்குற நீ "

" உண்மைதான் அம்மா ..."

' வாய்ப்பே  இல்லை சிவா ..நீ தப்பா புரிஞ்சுகிட்டு இருக்க நினைக்கிறன் .. கல்யாணம் என்றாலே காத தூரம் ஓடுற பெண்ணுக்கு காதல் வர வாய்ப்புகள்  கம்மி "

" வாய்ப்புகள் கம்மிதான் ..ஆனா வாய்ப்பே இல்லைன்னு சொல்ல முடியுமா ? மாற்றம் ஒன்றே தான் மாறாதது "

" இருக்கட்டும் கண்ணா .. அப்போ நீ ?" என்று கேட்ட தாய் மனம் கண்ணீர் விட்டது .. அதுவரை சோபாவில் அமர்ந்து இருந்த  சிவா நித்யாவின் முன் மண்டியிட்டு அமர்ந்து அவர் முகத்தை கைகளில் ஏந்தினான் ..

" ஏன் அம்மா ? எதுக்கு இந்த கண்ணீர் ? உங்க பையன் மேல உங்களுக்கு என்ன கழிவிரக்கம் "

" சிவா ??"

" உண்மைதான் அம்மா ... நீங்க இந்த சம்பந்தம் நடக்கலன்னு அழுதா , உங்க எமாற்றதுக்காக அழறிங்கன்னு  நான் அமைதியா இருப்பேன் ;.. ஆனா உங்க பையன் மேல அவளுக்கு காதல் வரலயென்னு அழுதா , அது ஒரு விதத்தில் எனக்கு அவமானம் இல்லையா ? ஏன் அம்மா , நான் நல்லவன் இல்லையா ?படிப்பு இல்லையா திறமை இல்லையா ? அல்லது இந்த உலகத்தின் கடைசி பெண் தான் சாஹித்யாவா ?"

" இல்ல கண்ணா .. சத்தியமா உனக்கு இனி ஒரு வாழ்கை இல்லைன்னு நினைச்சு நான் அழல ..ஆனா , நீ இந்த கல்யாண விஷயம் நடக்கனும்னு ஆசைபட்டியே  "

" உண்மைதான் ..! இவ தான் என் மனைவி ஆகா போகிறாள் என்ற உரிமை உணர்வில் வந்த ஆசைதான் அது தவிர எனக்கு ஆழமான காதல் ஏதும் உண்டாகி விடவில்லையா ? எத்தனையோ ஆண்கள் அவங்க அத்தை மகள் மேல ஆசை வைக்கிறது இல்லையா ? அந்த மாதிரி தான் இதுவும் .. ஆனா எப்போ அவ சந்தோஷை விரும்புறான்னு  புரிந்துகொண்டேனோ அப்போவே என் மனசு மாறிடுச்சு அம்மா .. நீங்களே என்னை வற்புறுத்தினாலும் எனக்கு சாஹித்யா வேணாம் .. "

"..."

" இந்த கல்யாணத்தில் ஆரம்பத்திலேயே சத்யாவுக்கு இஸ்டம் இல்லைதான் .. ஆனா அப்போ அவ மனசுல யாரும் இல்லை .. ஏதோ குருட்டுத்தனமான பயத்தில் அவ இருக்கன்னு நினைச்சு நானும் அமைதியா இருந்தேன் .. அவ மனசை மாற்றிடலாம்னு  நினைச்சேன் ..ஆனா இப்போ நிலைமை வேறு அம்மா .. சந்தோஷ் இருக்குற இடத்தை பறிச்சு எனக்கு அங்க  இருக்கணும்னு ஆசை இல்லை . " என்றான் சிவா தெளிவாய் .. எதுவும் பேசாமல் மகனை பெருமையாய் பார்த்தார் நித்யா .. என்னதன இருந்தாலும் மனதோரம் லேசாய்  நிராசை எட்டி பார்க்கததான் செய்தது .. அதை உணர்ந்தவராய் கார்த்திக் நித்யாவின் தோளில்  கைபோட்டு லேசாய்  ஆதரவாய் அணைத்தார் ..கணவரின் பார்வையில் மனம் தெளிந்தவர் மகனின் கேசத்தை  வருடி  நெற்றியில் முத்தமிட்டார் ... கார்திக்கோ  அவன் மார்பில் குத்தி

" கிரேட்டா நீ ..கலக்கிட்ட நீ ..என் மகன்னு ப்ரூவ் பண்ணிட்ட" என்றார் கர்வமாய் ..

" விடுங்கப்பா .. நமக்கு ஆயிரம் பிகர் மடியும் " என்று கண்சிமிட்டினான் சிவா .. மேலும்

" இன்னொரு விஷயம் , அம்மா அப்பா நீங்க ரெண்டு பேருமே சாஹித்யாவின் காதலை எண்ணி சந்தொஷபடனுமே  தவிர  கண்ணீர் விட கூடாது ... உங்க கண்ணீர் அவளது எதிர்காலத்தை பாதிக்க கூடாது..சந்தோஷையும்  தான் " என்றான் அவன் ...

" சந்தோஷ் ... உன் பாஸ் தானே சிவா ?"

" ம்ம்ம் ஆமா அப்பா "

" அவனும் நல்ல பையன் தானுங்க "

" ம்ம்ம் சத்யாவுக்கும் நல்ல ஜோடிதான் " என்றார் கார்த்திக் ..

" குட் ..இப்போதான் நீங்க ரெண்டு பெரும் என்னை பெருமைப்பட வைக்கிறிங்க " என்று சிரித்தான் சிவா ...

( சோ ச்வீட் ல சிவா நீ ... கவலையை விடு , உனக்கொரு சூப்பர் பெண்ணை ரெடி பண்ணுறேன் .. யாரங்கே , வண்டியை  ஸ்டார்ட் பண்ணுங்க நான் சிவாவுக்கு பெண் பார்க்க போயிட்டு வரேன் ..ஹா ஹா )

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.