20. மௌனம் எதற்கு? - ராசு
மருத்துவமனை வளாகம்.
தூரிகா அனுமதிக்கப்பட்டிருந்த அறையின் வாயிலில் மனம் கலங்கியவாறு சந்தியா அமர்ந்திருந்தாள். விபத்து நடந்து இரண்டு நாட்களாகிவிட்டன. இரத்தம் அதிகமாக வெளியாகியிருந்தது. தலையில் அடிபட்டிருந்தது. இடையிடையில் விழித்தாள். இன்னும் முழுதாக விழிப்பு வரவில்லை. செய்தி அறிந்து தர்மராஜ் வரும்போது வடிவும் கூடவே வந்திருந்தாள். சிவனேஸ்வரும் உமாவை அழைத்துக்கொண்டு வந்திருந்தான். குழந்தை உமாவோடு இருந்ததால் அவளைப் பற்றிய சிந்தனை கூட இல்லாமல் அமர்ந்திருந்தாள். கடைசி விநாடியில் அவள் லாரியின் மோதலில் இருந்து தப்புவிக்கப்பட்டிருந்தாள். அப்போது தடுமாறி விழுந்ததில் அங்கிருந்த கல்லின் மீது தலை மோதி
...
This story is now available on Chillzee KiMo.
...
நீங்க ரொம்ப களைச்சுப் போய் தெரியறீங்க. பேசாம போய் குளிச்சுட்டு வாங்க.” கண்டிப்புடன் சொன்னாள்.
“மத்தவங்க சாப்பிட்டாங்களா?”
“அது.. அது..நீங்க வாங்க. அவங்க எல்லாரையும் சாப்பிட சொல்லிர்றேன்.” உமா எதையோ மறைப்பது போல் இருந்தது.
இருந்தும் எதுவும் தூண்டித் துருவ விரும்பவில்லை.