அவளைத் திருமணம் செய்வது அவன் வாழ்வு பாழாவதற்கு சமம் என்று தனக்காக யோசித்து சொல்பவளை வேதனையுடன் பார்த்தான். ஆனால் எந்தப் பதிலும் சொல்லி அவளை தேற்ற முயலவில்லை. அவனே இப்போது எப்படி ஆறுதல் தேடலாம் என்று யோசிக்கையில் அவளை எப்படி தேற்றுவது. அவள் சொன்ன மாதிரி அவள் பெற்றோர் தங்கள் மகளைப் பார்த்துக் கொள்வார்கள். அதன் பிறகு அவன் சென்னைக்கு கிளம்புவதாக சொன்னபோது மற்றவர்கள் தயங்கினர்.
“அங்கே போட்டது போட்டபடி வந்துட்டேன். போய் சரி செஞ்சுட்டு வர்றேன்.”
“உடனே திரும்பி வந்துடுப்பா. கல்யாணத்தை உடனே வைக்கனும்.”
அவன் வெறுப்புடன் கிளம்பினான். ஊருக்குத் திரும்பும் வழியில் அவனுக்கு தூரிகாவின் முகமே கண்முன்னே வந்தது.
‘கடவுளே அவளுக்கு என்ன சொல்வேன்? பேசா
...
This story is now available on Chillzee KiMo.
...
="text-align: left;">Episode # 19
{kunena_discuss:882}