21. மௌனம் எதற்கு? - ராசு
தன் தங்கை இறந்துவிட்டாள் என கூறி மனைவியின் மடியில் முகம் புதைத்து கதறி அழுதான் ரங்கநாதன். அழுதவாறே அவன் சொன்னவை சந்தியா எதிர்பாராத அதிர்ச்சியாய் இருந்தது. அவள் நினைத்திருந்தது ஒன்று. ஆனால் நடந்திருந்ததோ வேறொன்று. ஜீவகனுக்கு அடிபட்ட அன்று அவர்கள் வீட்டுக்கு திரும்பிய பிறகு என்ன நடந்தது என்று கணவன் கூறக் கூற இப்படியுமா இருப்பாள் ஒரு பெண் என்ற ஆதங்கமே அவளுள் எழுந்தது.
கணவன் அடிபட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தும் நந்தினி அவனைப் பார்க்க மருத்துவமனைக்கு வரவில்லை. குழந்தையையும் வீட்டில் விட்டுவிட்டு வெளியில் சென்றிருந்தாள். என்னதான் ஒரு மனிதன் மோசமானவனாக இருந்தாலும் உயிருக்குப் போராடிக் க
...
This story is now available on Chillzee KiMo.
...
தயங்காம கொடு கையெழுத்துப் போட்டுத்தர்றேன். இனி அவன் எனக்கு எதுக்கு? அவன் உயிரோட வர்றானோ? இல்லையோ? அப்படியே வந்தாலும் பாதி முடமாத்தான் வருவான். அவனோட வாழனும்னு எனக்கு தலையெழுத்தா என்ன?” அலட்சியமாகக் கேட்டுக் கொண்டே கையெழுத்துப் போட்டுக்கொடுத்தவள் தன்னுடைய பொருட்களுடன் வெளியில் சென்றுவிட்டாள்.