அவள் பேசிய போது அவனால் நம்ப முடியவில்லை. என்னதான் அத்தை பையனைக் கிண்டல் செய்வதென்றாலும் அநாதை என்று பேசுவதெல்லாம் அதிகப்படிதானே. தங்கள் வீட்டில் ஒட்டுண்ணியாக உறிஞ்சுகிறான் என்று கூறுவதெல்லாம் அத்தை மகன் என்ற உரிமையிலா? அவன் வேறொரு பெண்ணை விரும்புவதாக நல்லவிதமாகவே சொல்லி அனுப்பினான். அவளும் கிளம்பிவிட்டாள். இனி எந்தப் பிரச்சினையும் இல்லை என்றே நம்பினான். அதன்பிறகு அவன் பிறந்த நாளுக்கு முந்தினநாள் ஊரிலிருந்து அவனை உடனே கிளம்பி வரச் சொல்லி போன் வந்தது. தூரிகாவிடம் சொல்லலாம் என்று பார்த்தால் அவன் செல் போனைக் காணவில்லை. மறுநாள் அவள் அலுவலகம் வரும்போது அவளிடம் பேசிக்கொள்ளலாம் என்று நினைத்தான். உடனே கிளம்பிவிட்டான்.
அங்கே நந்தினி விசம் குடித்து உயிருக்குப் போரா
...
This story is now available on Chillzee KiMo.
...
ுறம் அவங்ககிட்ட இருந்து சொத்தை நாம பிடுங்கிடனும்.” தீவிரமான குரலில் சொன்னாள்.
“எனக்கு சொத்து மேல் எல்லாம் ஆசையில்லை நந்தினி.”
“நீங்க ஆசைப்படலை அத்தான். எனக்கு அது நல்லா தெரியும். ஆனால் உங்க வாழ்க்கையை அழிச்சுட்டு அந்த சொத்தை அவங்க அனுபவிக்க விடலாமா?” தீவிரமான குரலில் கேட்டாள்.