அன்று மாலை வீடு திரும்பும் வழியெல்லாம் காலையில் நடந்ததே திரும்ப திரும்ப நினைவுக்கு வந்தது.
‘அவர்கள் யார் என் வாழ்க்கையை நிர்ணயிக்க? அவன்தான் சின்னப் பையன். அவன் பெற்றோராவது யோசிக்க வேண்டாமா? நல்லா படிக்கிறவனை பார்த்துப் பொறாமைப்படாமல் ஒழுங்காக படித்திருந்தால் அவன் நல்ல மதிப்பெண்களை பெற்றிருக்கலாமே. இதை எடுத்துச் சொல்லி மகனை நல்வழிப்படுத்தாமல் அவர்களும் அவனுக்கு துணை நின்றிருக்கின்றனர். கொஞ்சமாவது அப்பாவின் உண்மையான உழைப்பையும் விசுவாசத்தையும் உணர்ந்து பார்க்கவில்லையே. இப்படி நன்றி கெட்ட தனமாக நடந்துவிட்டார்களே.’
வீட்டில் கமலம் அவனுக்காக காத்திருந்தார். அவர் முகம் கலங்கியிருந்தது. மகன் சாப்பிடும் வரையில் பொறுமையாக இருந்தவர் அவன் சாப்பிட்டுக் கை கழ
...
This story is now available on Chillzee KiMo.
...
் பெரிய ஆளுங்களா இருப்பாங்கன்னு தோணுது. அநாவசியமா போய் எங்கேயும் மாட்டிக்காதே. ஏதோ எனக்கு தெரிந்த பையனாச்சேன்னு சொன்னேன்.”
அவன் அவரையே கூர்ந்து பார்த்தான்.
“சரி சார். எனக்கு என்னைப் பத்திரமா பார்த்துக்க தெரியும். உங்க அக்கறைக்கு நன்றி சார். வர்றேன்.” சொல்லிவிட்டு வெளியேறினான்.