அவர் மேல் உள்ள கோபத்தில் என்னவெல்லாமோ பேச வேண்டும் என்று மனம் துடித்தது. ஆனால் பண்பாடு தெரியாத அவரிடம் பேசி அவன் தன் தரத்தை தாழ்த்திக்கொள்ள தயாராயில்லை. வீட்டுக்கு வந்தவன் தன் தாயைக் கட்டிக்கொண்டு அழுதான்.
“என்னப்பா? போன காரியம் எதுவும் சரியில்லையா?” கவலையுடன் கேட்டார் கமலம்.
பதிலாக தன் மதிப்பெண் பட்டியலை எடுத்துக் காட்டினான்.
“அப்புறம் ஏன்ப்பா அழறே?”
“சந்தோசம்மா. தாங்க முடியாத சந்தோசம். இனி நமக்கு நல்ல காலம்தான்.”
அவன் சந்தோசம் அந்த தாயையும் தொற்றிக்கொண்டது.
You might also like - ... தோன்றியது. கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்தவள் திகைத்து நின்றாள்.
‘இப்படியேவா நான் அவரை சந்திக்கப் போகிறேன்? இந்த நிலையில் என்னைப் பார்க்கும்போது அவருக்கு மரியாதைதானே வரும். காதல் வராதே. என்னை முதன் முதலில் அவர் பார்க்கும் போது நான் இப்படி இருக்கக்கூடாது. கண்டிப்பா இருக்கவே கூடாது.’
This story is now available on Chillzee KiMo.
...