Page 4 of 4
தன் அறைக்கு வந்தவள் தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள்.
‘இப்போ என்ன செய்யறது?’
அப்போது விஸ்வநாதன் அங்கே வந்தார்.
“என்னம்மா? இன்டர்வியூவை ஆரம்பிக்கலாமா? எல்லாரும் வந்துட்டாங்க. ருத்ரதேவனும்தான்.” புன்னகையுடன் சுஜயாவைப் பார்த்தார்.
“மாமா. நா…நா…நான்.” தடுமாறினாள்.
அவர் ஆச்சர்யமாகப் பார்த்தார். அவர் அறிந்த சுஜயா இப்படி தடுமாற மாட்டாள். சரியோ? தவறோ? மனதில் பட்டதை சட்டென்று போட்டு உடைத்துவிடுவாள்.
“உனக்கு என்னாச்சும்மா? உடம்பு சரியில்லையா?” கவலையுடன் கேட்டார்.
அவர் வரும்போது அவள் தலையைக் கையில் தாங்கியவாறு அமர்ந்திருந்தாளே.
“அப்படி எல்லாம் இல்லை மாமா. அது வந்து எப்படி சொல்றதுன்னு தயக்கமா இருக்கு.”
...
This story is now available on Chillzee KiMo.
...
கிளிகள் பேசும் . . .