பசுமையான நினைவுகள் அவனுள் ஒரு சாரலை தெளித்து விட்டிருக்க அவளை ஓரக்கண்ணில் கண்டான் .. ஆதி ..அவன் இதழ்கள் தானாய் விரிந்தன..
அவளை வீட்டில் விட்டுவிட்டு மீண்டுமாய் எங்கோ சென்றான் ஆதி சென்றவன் வெகு நேரம் ஆகியும் வரவே இல்லை ..இரவு உணவு உண்ண என அமர்ந்த அவளிடம் ஆதி எங்கு சென்றுள்ளான் என்று ஒருவர் மாற்றி ஒருவர் கேட்க தன்னால் பதில் சொல்ல முடியவில்லை ..அவன் தன்னிடம் ஏதும் கூறவில்லை..
இல்லத்தில் இருப்பவர்களிடமும் ஏதும் சொல்லவில்லை என்று அவளுக்குமே அப்போது தான் தெரியும்.. ஏதோ தான் மிக பெரிய குற்றத்தை செய்தது போல் அனைவரும் தன்னை பார்ப்பதை அவளால் தாங்கி கொள்ள முடியவில்லை..
கணவனாகப்பட்டவன் சொன்னால் தானே ஒரு மனைவிக்கு அவன் செல்லும் இடம் இன்ன பிற தகவல் எல
...
This story is now available on Chillzee KiMo.
...
கை அதற்கு சாட்சியாய் இருந்தது..
ஏதோ ஒரு ஆத்திரத்தில் செய்துவிட்டு வந்த செயலை எண்ணி அவனும் வருந்தி ..விழிகளை அவன் மூடியிருக்க அவனின் மனசாட்சி அவனிடம் போர் தொடுக்க ஆரம்பித்தது..
நீ எத்தனை தடவ சமாதானம் சொன்னாலும் சரி ஆதி இப்போ நீ பண்ணிட்டு வந்திருக்குற காரியத்துக்கு பேரு என்ன ..?