கேட்டவளின் கைகளை பற்றி தன் கண்களில் ஒற்றிக்கொண்டாள் அன்னம்மா. சுஜயாவின கைகளில் பட்ட ஈரம் அவள் அழுகிறாள் என்று உணர்த்தியது. சுஜயாவிற்கு அன்னம்மாவின் நிலைமை புரிந்தது. அவள் நெகிழ்ந்துபோனாள்.
அப்போதே கண்ணனை அழைத்துக்கொண்டு வேளாண்துறை அலுவலகத்துக்குச் சென்றாள். அங்கே தங்களது இடத்தில் இருந்து எடுத்த மண்ணைக் கொடுத்து ஆராயச் சொன்னாள். மேலும் தனது விருப்பத்தை அங்கே கூற அவர்கள் மனமாற அவளை பாராட்டினர். தங்களால் இயன்ற உதவியை செய்வதாக வாக்களித்தனர்.
கண்ணனுக்கு கொஞ்சம் எழுதப் படிக்க தெரிந்திருந்தது. ஆனால் அவனுக்கு கேள்விஞானம் அதிகமாக இருந்தது. எதைப் பற்றிக் கேள்விப்பட்டாலும் அதை அப்படியே தன் மனதில் பதித்துக்கொண்டான். அதை ஞாபகப்படுத்தி செயல்படுத்தவும் செய்தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
ில் கூட தனது வருத்தம் அவனைப் பாதித்ததை கண்டு நெகிழ்ந்துபோனாள்.
“நீ சீக்கிரம் ஒரு கல்யாணம் பண்ணிக்கோ கண்ணா. பாட்டியோட கவலையும் அதுதான்.”
அவன் கசப்புடன் புன்னகைத்தான்.
“வேண்டாம்மா. நீங்க சொன்ன மாதிரி எனக்கு நீங்க இருக்கீங்க. அது போதும் எனக்கு.” தீவிரமான குரலில் சொன்னான்.