பிரிவு .. ! கண்ணீர் , துயரம் , விரக்தி இவை அனைத்தையும் வாரி வழங்கிடும் வல்லமை கொண்டது பிரிவு மட்டும்தான் .. பிரிவு என்றாலே பாரதியின் வரிகளை நினைவு கூர்கிறேன் ..
" மோனத்திருக்குதடி இந்த வையகம் மூழ்கித் துயிலினிலே
நானொருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத் துழலுவதோ "
பிரிவை நரகம் என்கிறான் பாரதி .. ! நரகத்தில் என்னென்ன தண்டனைகள் உண்டு என்று பெரும்பாலும் படித்திருப்போம் ! எரித்தீயில் துடிப்பது , குருதிக்கடலில் மிதப்பது , உணவின்றி தவிப்பது இப்படி பல .. ஆக, பிரிவின் துயரில் இப்பவன் நரகத்தில் வாழ்வதற்கு சமமாய் இருக்கிறான் என்றே கருத்தப்படுகிறது ..
ஆனால் , இந்த பிரிவிற்கு இன்னொரு முகம் இருப்பதை நாம் உணர்ந்தது உண்டா ? அருகில் இருக்கும்வரை அலட்சியமாய் கூட இருந்திருப்போம் .. அப்படி அலட்சியத்தில் அசரும் நம்மை சுத்தியால் அடித்து தெளியவைப்பது பிரிவுதானே ?
பிரிவில்தான் ஒருவரின் அருகாமையை தேடுகிறோம் .. !
பிரிவில்தான் ஒருவரின் அன்பினை புரிந்துகொள்கிறோம் ..!
பிரிவில்தான் ஒருவர் நமக்காக நிரப்பிய வெற்றிடங்களை கண்டுகொள்கிறோம் !
பிரிவில்தான் ஒருவரின் கோபத்தினில் உள்ள நியாயத்தை உணர்கிறோம் ..!
அருகில் இருக்கும்போது கூட அடக்கடி நினைத்திருக்க மாட்டோம் .. ஆனால் , பிரிவென்று வந்துவிட்டால் உறக்கத்தில் கூட உற்றவரை நினைத்திருப்போம் .. அந்த வகையில் பிரிவும் நல்லது தானே ? சிந்திக்கிறேன் சகிதீபன் .. !
உதடுகளால்
உரைக்காமல் போனாலும்
உன்னதமான அன்பு
உணர்ந்துவிட்டேன் இன்று
உடன் வருவேன் விரைவில்
உன்
உடன்பிறந்தவள்
- விஷ்வானிகா ..
You might also like - Puthir podum nenjam... A romantic story...
விஷ்வாவின் கையெழுத்து இடப்பட்டு இருந்த இடத்தை வருடினான் அபிநந்தன் .. " என் தங்கை " மனதிற்குள் அவனுக்குள் சிலிர்ப்பு .. வீட்டில் முதல் மகனாய் பிறந்த அபிநந்தனை, தொடர்ந்து சகியும் விஷ்வாவும் பிறந்த பின்னே , அவன் தனது கூட்டுக்குள் அடங்கி போனது என்னவோ உண்மைத்தான் .. ஆனால் , அவனுக்கு தனது சகோதரர்கள் மீது எந்த வித வன்மமும் இல்லை .. அவர்கள் மீது கொண்டுள்ள அன்பினை வெளிக்காட்டி கொள்ளா விடினும் , மனதினுள் அவர்களை சீராட்டி கொண்டு தான் இருந்தான் அபி .. விஷ்வானிகா இப்படி கலை இழந்து சோகமாய் இருந்த நாட்களில் எல்லாம் , தனக்குள்ளேயே மருகி கொண்டான் அவன் ..
" எந்த முகத்தை காட்டி அவளிடம் பேசுவேன் ? எதைச்சொல்லி அவளை தேற்றுவேன் ? " இப்படி அடக்கடி கேள்வி கேட்கும் மனதிற்கு பதில் சொல்ல முடியாமல் அமைதியாகிவிடுவான் அவன் .. ஏதேதோ சிந்தனைகள் அணிவகுக்க , அதை கலைத்தது தாத்தாவின் குரல் ..
" என்ன அபி , எப்போ வந்த ?" அருண் தாத்தாவின் அருகில் நந்திதாவும் நடந்து வர அவளை பார்வையால் வருடிக்கொண்டான் அபிநந்தன் ..
" இப்போதான் தாத்தா " என்று புன்னகைத்தான் அவன் ..
" அடடே, உனக்கு இப்படி ஸ்மைல் பண்ண கூட தெரியுமா ? பரவாயில்லையே "
" என்னத்தான் இருந்தாலும் நான் உங்க பேரன் ஆச்சே " என்றான் அவன் ..
" எம்மாடி நந்து , வெளில மழை ஏதும் வருதான்னு பார்த்துக்கம்மா .. என் பேரன் இன்னைக்கு அசர வைக்கிறான் "
" ஹா ஹா "
" ஆமா டா , கையில என்ன பூ " ..இவ்வளவு நேரம் தாத்தாவும் பேரனும் பேசிக்கொண்டு இருக்க , நந்திதாவின் விழிகள் என்னவோ அந்த ரோஜாப்பூக்களின் மீதுதான் இருந்தது .. அதுவும் அபிநந்தன் அந்த பூக்களை நெஞ்சோடு அணைத்து கொண்டு நின்ற கோலம் அவளுக்குள் எதையோ அனலாய் தகிக்க வைத்தது .. " யாரு தந்த பூன்னு இவன் இப்படி பத்திரப்படுத்தி வைச்சு இருக்கான் ?" .. அவளின் பார்வையில் அர்த்தத்தை புரிந்து கொண்டவன் " இன்னைக்கு உன்னை எப்படி ரூமுக்கு வர வைக்கிறேன் பார்" என்று கூறிக் கொண்டான் மனதினுள் .. இதை அறியாமல் தாத்தா கேட்ட கேள்விக்கு அவனிடம் இருந்து வரும் பதிலுக்காக செவிகளை தீட்டி வைத்தாள் நந்திதா ..
" இதுவா தாத்தா , எனக்கு ரொம்ப ரொம்ப வேண்டியவங்க கொடுத்த பூ இது " என்றான் அந்த பூக்களை இறுக பற்றி கொண்டு ..
" அப்படி யாருடா வேண்டியவங்க ?"
" எனக்கு ரொம்ப நெருக்கமானவங்க தாத்தா .. அவங்களுடைய அன்பை இந்த பூ மூலமா கொடுத்து இருக்காங்க "
" அப்படியா , காட்டு பார்ப்போம் " என்றப்படி தாத்தா முன்னேறவும் , சட்டென பின்வாங்கினான் அபி ..
"நோ நோ தாத்தா .. திஸ் இஸ் பெர்சனல் .. நான் யாருக்கும் சொல்ல மாட்டேன் போங்க " என்றவன் யாருக்கும் என்ற வார்த்தையில் மட்டும் கூடுதல் அழுத்தம் கொடுத்தான் .. அவனை பார்த்து திமிராய் முறைத்தபடி ஹாலில் அமர்ந்து கொண்டாள் நந்திதா ..
" என்னதான் மனசுல நினைச்சிட்டு இருக்கான் இவன் ? யாருக்கும் உரிமை இல்லையா ? எனக்கு கூடவா உரிமை இல்லை ? அதை எப்படி அவன் சொல்லலாம் .. கவனிச்சுக்குறேன் ... முதலில் பூ கொடுத்த அந்த பூகம்பம் யாருன்னு தெரிஞ்சுக்கணும் " என்று எண்ணியவள் விருட்டென எழுந்து அவர்களது அறைக்குள் சென்றாள் .. அறை கதவை திறக்கும் சத்தம் கேட்டதுமே , அபிநந்தன் துள்ளி குதித்தான் .. அதை முகத்தில் காட்டி கொள்ளாமல் , கட்டிலில் சாய்ந்து அமர்ந்துகொண்டு அந்த பூங்கொத்தை மார்போடு அணைத்து கண் மூடி இருந்தான் ..
நந்திதாவின் கொலுசின் ஒலி காதில் கேட்டாலும் அவன் கண் திறக்காமல் இருக்கவும் , அவளுக்குள் எள்ளும் கொள்ளும் வெடித்தது .. அருகில் இருந்த தலையணையை அவன் மீது வீசினாள் ... " ஹே " என்று அதிர்ச்சியாய் கண்விழித்தான் அபி ..
" ஓ .. உங்க மேல பட்டுருச்சா ? சாரி " என்றாள் நந்திதா ..
" தெரிஞ்சுதானே வீசின ?"
" இல்லையே "
" பொய் சொல்லாத "
" உங்க மேல நான் எதுக்கு வீச போறேன் ? என்னுடைய கம்மலை காணோம் .. எங்க வெச்சேன்னு தேடும்போது உங்க மேல பட்டுருக்கும் " என்றவலிம் பார்வை இப்போதும் பூங்கொத்து மேலேதான் இருந்தது .. " இப்பவும் அதை விடாமல் பிடிச்சிட்டு இருக்கான் பாரேன் " என்று முனுமுனுத்தாள் ..
" உன்கிட்ட தான் நிறைய கம்மல் இருக்கே ..அப்பறம் ஏன் சிரமபட்டு தேடுற ? அதுவும் நீ நேத்து அம்மா ரூமில் தானே தூங்கின ? ஒருவேளை அங்குதான் இருக்கும் போல .. இங்க நீ எவ்வளவு நேரம் நின்னாலும் , நீ பார்க்கனும்னு நினைக்கிறது உன் கண்ணில் படாது ... " என்று கண்சிமிட்டினான் அபிநந்தன் .. அவ்வளவுதான் ! அவளுக்குள் ரோஷம் கரை புரண்டது ..
" பெரிய இவன் .. இவனுக்காகத்தான் நாம வந்தோம் பார்.. ச்ச " என்று மனதிற்குள் கோபித்து கொண்டு , வெடுக்கென அறையை விட்டு சென்றாள் நந்திதா .. ஆனால் , அந்த பூங்கொத்தை தந்தது யார் என்ற கேள்வி மட்டும் இன்னமும் மனதிற்குள் ஓடிகொண்டே இருந்தது ..
உச்சரிக்கும்போதே வார்த்தை சேர்ந்து பிரிகிறது. பிரிவுகளை யாரும் விரும்புவதில்லை. ஆனாலும் அதை ஏற்றக் கொள்ளாதவர்களும் கிடையாது.
விருப்பம் விருப்பமின்னை இரண்டையும் தாண்டி பிரிவுகளை ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும். நட்பு , காதல் , சகோதரபாசம் , கணவன் –மனைவி ,பெற்றவர்கள் –பிள்ளைகள் என எ உறவுகளிலும் பிரிவுகளும் வலிகளும் இருக்கதான் செய்கின்றன. பிரிவுகளுக்கு காரணம் தேடினால் அங்கு தீர்க்கவே முடியாத பிரச்சனைகள் காரணமாய் இருக்காது. தீர்த்துக் கொள்ளத் தெரியாத தீர்த்துக் கொள்ள விரும்பாத மறைக்கப்பட்ட உண்மைகளே காரணமாய் இருக்கும்.
பிரிவு என்பது பலநேரங்களில் மூச்சஅடைக்க வைக்கும் மாயத்திரை போன்று ஆகிவிடும். எனினும். மூச்சு முட்ட முட்டத்தான் பலர் அந்தத் திரைக்குள் ஒளிந்துகொள்கின்றனர். நேசம்(அனைத்து உறவுகளிற்கும் பொதுவான .காதல் மட்டும் குறிக்கவில்லை.) கொண்ட இரு மனங்கள் அடுத்தவர் மனதை தன் மனம் பார்த்து புரிந்துவிடாமல் இருக்க இருவருக்குமிடையே போட்டுக்கொண்ட திரை அது.
அபி தன் திரையை விலக்கியே விட்டான்.
விநி அவள் திரையை கிழித்தே விட்டாள்.
சகி இன்னமும் அதற்குள்ளேயே இருக்கிறான்.
அபிக்கு நந்து
விநிக்கு சாம்பவிக்கு பாட்டி
சகிக்கு…………..யாரோ………….?
As usual Nandhan Nandhita pair scenes ellam cute
Ipo dan romantic hero avathaaram edukuraaru siru.. Vazhga valamudan
Abi summa nandhu va suttha vitutare
Abi ippadi chocalte boy ah parkka nalla irukku
Vishwa kittayym changes
Waiting to read more
Oru bouquet vaithu kondu Abhi seyyum alambal super.
Paravaayillai romantic hero-va maaritaare.
nanthan sir peasarathu sirikarathe athisayama iruku idhula avar plan panni vara vaikarara..... good improvement
vishwanika changes ku paati thaan karanama...? nxt ep padika romba aarmavama iruku sis.
Abi chance eh illa......
Nanthitha's chella kobam and antha bouquet yar anupinathunu teriyamal avanga kuzhamburathu cute.
Next epi sikirame share seinga mam.