(Reading time: 11 - 21 minutes)

" ரி குட்டிமா " என்று போனை வைத்தான் .. குட்டிமா என்று அவன் அழைத்ததை கேட்டு நந்திதாவுக்கு இதயமே வெடித்து விடும் போல இருந்தது ... முகத்திலோ எள்ளும் கொள்ளும் வெடித்தது ... " பாவி மனுஷா .. இத்தனை நாளில் , கனவுல கூட என்னை இப்படி கூப்பிட்டு இருப்பாரா ? அந்த ரோஜாப்பூகாரியை முதலில் சொல்லணும் .. இன்னைக்கு அவ யாருன்னு கண்டுபிடிக்காமல் விடமாட்டேன் " என்று மனதிற்குள் சூளுரைத்தவள் அவன் அருகிலேயே படுத்து கொண்டாள் ..

" என்ன நந்திதா ? அம்மா ரூம் ல தூங்கலையா ?"

" ..."

" உன்னதான் கேக்குறேன் "

" இதானே என் ரூம் ? நான் இங்க தூங்குறதுல உங்களுக்கு சிரமம் இருக்க ?"

You might also like - Krishna Saki... A family oriented romantic story...

" ச்ச ..ச்ச .. "

" அப்போ தூங்குங்க " என்றாள் ..

" ம்ம்ம் ஓகே ..எது எப்படியோ இன்னைக்கு தான் நிம்மதியா தூங்குவேன் " என்றவன் அலமாரியை திறந்து அந்த பூங்கொத்தை எடுத்தான் ..எத்தனை தவிர்த்தாலும் நந்திதாவின் பார்வை அந்த பூவின் மீதே இருந்தது .. அபிநந்தனோ , புன்னகையுடன் அந்த பூவை இறுக அணைத்து கொண்டு கண் மூடினான் ...

" தூங்கு ராஜா ... தூங்கு .... அந்த திருட்டு பூனை யாருன்னு இன்னைக்கு கண்டு பிடிக்கிறேன் " என்று சிலிர்த்து கொண்டு சவாலாய் மனதிற்குள் கூறினாள் அவள் ..

நிமிடங்கள் மணி நேரமாய் கரைய , அபி ஆழ்ந்த நித்திரையில் மூழ்கும்வரை அமைதியாய் கண்கள் மூடி படுத்திருந்தாள் நந்திதா .. அவனது சீரான மூச்சு காற்று அவளுக்கு கொஞ்சம் தைரியம் அளிக்க மெல்ல திரும்பி படுத்தாள் நந்திதா ..

அபியின் கைகள் இரண்டும் பூங்கொத்தை இறுக பற்றி இருக்க , அதில் இருந்த வாழ்த்து அட்டை அவளை வரவேற்றது .. விழிகள் மின்ன அவன் அருகில் நகரும் நேரம் அவனிடம் லேசாய் அசைவு தெரிய விழிகளை இறுக மூடிக்கொண்டு " முருகா காப்பாத்து " என்றாள் நந்திதா ..

" அட போமா , நான் என் வள்ளியை கொஞ்சும்போது டிஸ்டர்ப் பண்ணுறதே உன்னுடைய வேலையா போச்சே " என்று முருகர் சலித்து கொள்ள , "இது வேலைக்கு ஆகாது " என்று முணுமுணுத்தபடி கட்டிலில் இருந்து இறங்கி அபிநந்தனின் பக்கம் நெருங்கினாள் நந்திதா ...

நிலவொளி அவன் முகத்தை வருடிட , மிருதுவான புன்னகையில் குழந்தையை போலத்தான் இருந்தான் அபிநந்தன் ..

" நந்து கண்ட்ரோல் கண்ட்ரோல் " என்று தன்னைத்தானே திட்டி கொண்டு அவன் அருகில் குனிந்தாள் நந்திதா .. அந்த வாழ்த்து அட்டையை திறக்க அவள் கை நீட்ட, நீட்டிய கரத்தை வேகமாய் இழுத்து அவளை தன் மார்பில் சாய்த்து தன்னோடு இறுக்கி கொண்டான் அபிநந்தன் ..

" ஹே " என்று அவள் ஏதோ சொல்வதற்குள் அவன் இதழ்கள் அவள் இதழோடு பேச்சு வார்த்தை நடத்த தொடங்கின .. எப்போ பார்த்தாலும் சண்டை போடும் ஜோடி இப்போதான் காதல் பேச போறாங்க .. சோ நாம அடுத்த எபிசொட் ல அவங்களை சந்திப்போம் .

குழலின் அடுத்த கீதத்தில் இணைவோம்

Episode # 08

Episode # 10

{kunena_discuss:883}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.