“குட்டீஸ்! ஓடி வாங்க. நான் உங்களுக்கு எக்சர்சைஸ் சொல்லித்தர்றேன்.”
வாண்டுகள் இருவரும் ஓடி வந்தனர்.
“ஒன். டூ…” என்று உடற்பயிற்சியினை சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தாள்.
குழந்தைகளும் ஆர்வமுடன் கற்றுக்கொண்டனர்.
சற்று நேரம் கழித்து நந்தினி அவர்களை கூப்பிட்டாள்.
“போதும். வாங்க. ஒரே நாளில் எல்லாத்தையும் கத்துக்கிட்டா நாளைக்கு என்ன பண்றது?”
“ஏன் நந்து நீயும் எங்ககூட செய்யலாம்ல?”
“ஆமாம்! இது ஒன்னுதான் குறைச்சல். செஞ்சு என்ன பண்ணப் போறேன்?”
“இதுதான் நந்து நம்மகிட்ட உள்ள தப்பே? கல்யாணம் ஆயிட்டா உடம்பை பேணனும்னு தோணவே மாட்டேங்குது. நம் நாட்டில் அதுவும் நம்ம மாநிலத்தில்தான் இந்த எண்ணம் அதிகமா இருக்கு. ஏதோ இப்ப கொஞ்ச
...
This story is now available on Chillzee KiMo.
...
ுடன் பார்த்து நின்றான்.
அவள் மலைத்துப் போனாள்.
‘என்ன மாதிரியான கேள்வியை கேட்டுவிட்டான். இந்த காலத்து பிள்ளைங்க எல்லாம் ரொம்ப யோசிக்குதுங்கப்பா. நான்லாம் இந்த வயசில் இப்படி இருந்திருப்பேனா?’ யோசித்தாள்.
“என்ன பதில் தெரியலையா?” முகத்தில் கிண்டல் தொனிக்க நந்தினி கேட்டாள்.