“ஆமாம். ராத்திரிக்கு என்ன சாப்பாடு?”
“தோசைதான். கார சட்னி வச்சிருக்கேன். பிள்ளைகளுக்காக தேங்காய் சட்னியும்.”
“ஆஹா! கார சட்னி வாசம் ஆளையே தூக்குதே.” வாசம் பிடித்தாள்.
“நந்து இன்னிக்கு நான் தோசை வார்க்கவா?”
குழந்தைகளும் வந்திருந்தனர்.
“சித்தி எனக்கு நிலா தோசை.” ரூபி கேட்டாள்.
“சித்தி எனக்கு ஸ்டார் தோசை.” சக்தி கேட்டான்.
“தர்றேன்.. தர்றேன். போய் அம்மாவையும் சாப்பிட கூப்பிடுங்க.”
“சரி.” குழந்தைகள் ஓடினர்.
“சிந்து நீ பசிக்குதுன்னியே. நீயும் உட்கார்ந்து சாப்பிடு. நானே தோசை வார்க்கிறேன்.”
“நான் நல்லா தோசை ஊத்துவேன்ப்பா. நீ கவலைப்படாதே.”
அவள் தோசை வார்க்க வார்க்க சூடாக மற்றவர்களுக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
டது. அவசர அவசரமாக காரின் எண்ணைக் குறித்துக்கொண்டான்.
முகவரியை விசரித்து அறிந்த போது மலைத்துவிட்டான்.
‘இவ்வளவு பெரிய இடத்தில் எப்படி நுழைந்தாள்?’
மனைவியை உடனே காணும் ஆவலில் சுஜயாவின் வீட்டுக்கு சென்றான். ஆனால் பாவம். அவனால் அவர்கள் வீட்டு கேட்டை கூட நெருங்க முடியவில்லை.