“சக்தி! இப்ப உங்க அம்மா வந்துட்டாங்க. இதுக்கு பதிலை அவங்ககிட்ட கேட்டா நீ ரொம்ப பிரிலியண்ட் பாய்னு பாராட்டுவாங்க. போய் அவங்ககிட்ட கேளு. போ..போ…”
குழந்தைகள் இருவரும் சுஜயாவின் அறைக்கு ஓடினர்.
“ஏய்! இவ்வளவு அழகா ஒரு தோல்வியை ஒத்துக்க உன்னால்தான் முடியும்.” கிண்டல் குரலில் கேலி செய்தாள் நந்தினி.
“இல்ல நந்து. அக்கா ரொம்ப ஒதுங்கியே இருக்கா. நம்மால்தான் அவகிட்ட இயல்பா இருக்க முடியலை. குழந்தைகளுக்கு எந்த பிரச்சினையும் இல்லையே. நான் முன்னாடி எப்படி இருந்தேன்னு உனக்கே தெரியுமே. ஆனால் இப்ப அவங்களோட டைம் ஸ்பெண்ட் பண்ண ஆரம்பிச்ச பிறகு நான் இந்த மாலை நேரங்களை ஆவலோட எதிர்பார்க்க ஆரம்பிச்சிட்டேன் தெரியுமா? சரி வா! என்ன நடக்குதுன்னு பார்ப்போம்.”
“
...
This story is now available on Chillzee KiMo.
...
தியை பிரிஞ்சு போறதுன்னா அiதை என்னால் நினைச்சு பார்க்கவே முடியலை.” கண்கள் கலங்கின.
“ச்சீ அசடு. எதற்கு அழுகறே? உன்னை யாரும் எங்கேயும் போகச் சொல்லலே. அம்மா! தாயே! போ. போய் சமைக்கிற வேலையைப் பாரும்மா. பசி ஆளைக் கொல்லுது.”
நந்தினியின் பின்னேயே சிந்தனாவும் சமையல் அறைக்குள் சென்றாள்.