"அதன் பிறகு வீட்டுல பல மாற்றம்.. நடக்குற சத்தம் கேட்கும்.. யாரோ என் பக்கத்துல இருக்குற மாதிரி இருக்கும்.. வீடே ஹேப்பி பீல்ல இருக்கும்.. அதாவது என் தங்கச்சிக்கு பிடிச்ச மாதிரி.. ஒரு சில நேரம் நான் வீட்டு கதவை திறக்குறதுக்கு முன்னாடியே கதவு திறந்து இருக்கும்.. என் வரவுக்காக யாரோ எதிர்பார்த்து காத்திருந்தது போல.. அதன் பின் சில நாட்கள் நான் ரூபனின் வீட்டுலேயே தங்கி இருந்தேன்..
ரூபனின் அப்பா பேய் ஆவி எல்லாம் விரட்டுவார்.. ஆனா, ரூபனுக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை.. அவன்கிட்ட நான் வீட்டில் நடக்குறதை சொன்னப்போ, அவன் என்னிடம் சொன்ன ஒரே பதில் 'மகேன் நீ உன் தங்கையை ரொம்ப மிஸ் பண்ணுற.. அதான் உனக்கு இப்படி தோணுது. இதெல்லாம் வெறும் கற்பனையே'ன்னு சொல்லிட்டு போயிட்டான்.. "
".."
"நான் அவன்கிட்ட சொல்லிட்டு இருந்ததை ரூபனின் அப்பாவும் கேட்டுகிட்டு இருந்தார். அப்போதான் ரூபனின் அப்பா, ஒரு பொருளை இரண்டு துணிகளில் கட்டி என்னிடம் அதை தந்து, அதை வீட்டின் முன், பின் வாசலில் குழி தோண்டி புதைக்க சொன்னார்.
அதை புதைத்த பின்னாடி, வீடு மிகவும் அமைதியாய் இருந்தது.. ஒரு வித தனிமையை அப்போது தான் உணர்ந்தேன் . என் தங்கை இறந்தப்பின் கூட என்னை தாக்காத தனிமை அப்போதுதான் ரொம்பவும் தாக்கியது. அதன்பின் ரெண்டு நாளிலே நான் மறுபடியும் அங்கிளை போயி பார்த்தேன். என்னை பார்த்ததுமே அவர் 'என்னப்பா, உன் வீது அமைதியாகி நீ தனிமையை உணருர போல'ன்னு சொன்னாரு.. "
" உங்க்ளுக்கு எப்படிப்பா தெரியும்ன்னு கேட்டேன்.. 'ஹ்ம்ம் எல்லாம் தெரியும்.. நான் சொல்லுறத நீ நம்பினால் நான் சொல்லுறேன்'னு சொன்னாரு.. சொல்லுங்கப்பா எனக்கு தெரியனும்.. தெரிஞ்சே ஆகணும் அதுக்காகத்தான் ரூபன் இல்லாத நேரமாய் பார்த்து இங்க வந்தேன்னு சொன்னேன்.. "
அன்று...,
"ம்ம்ம் சொல்லுறேன்.. நீ ஆத்மாவை நம்புறியா?"
"புரியல"
"இறந்த பின்னே மனிதனின் உடலில் இருந்து ஆத்மா வெளியேறி விடும்.. வெறும் உடலை மட்டும்தான் நாம் நம்முடைய சாங்கியப்படி காரியங்கள் செய்யுறோம்.. அப்படி வெளியேறும் ஆத்மா அதன் நேரம் வரும்வரை இங்கேயே அதாவது பூமியிலேயே தான் இருக்கும்.. அப்படி இறந்து இன்னமும் ஆத்மாவை சுற்றிக்கொண்டு இருக்குறவங்களை தான் நாம ஆவி பேய் என சொல்லுவது.. புரியுதா? "
"புரியுது அப்பா... ஆனா இதை ஏன் இப்போ என்கிட்டே சொல்லுறிங்கன்னு புரியல”.. அவனை பார்த்து சாந்தமாய் புன்னகைத்த படி அவர் சொன்னார்..
"இவ்வளவு நாள் உன் வீட்டில் உன்னுடன் இருந்தது உன் தங்கை தான்.. அவள் இறந்த பின்னும் உன் மேல் இருந்த அன்பினால் அவள் உன்னுடன் வீட்டில் இருந்தாள்.. அதனாலத்தான் அவள் இறந்தப் பின்னரும், நீ தனிமையை உணரவில்லை.. உன் வீட்டை விட்டு வெளியில் செல்லாமல் வீட்டுக்குள்ள இருந்தப்படியே, அவள் உன்னை கண்காணித்தாள்..
உன்னால் அவளை பார்க்க முடியாது.. ஆனா அவளால் உன்னை பார்க்க முடியும்.. அதேபோல் உன்னால் அவளிடம் பேச முடியும், ஆனா அவளால் உன்னிடம் பேச முடியாது.. அதனால்தான் அவளே உனது வரவை எதிர்பார்த்து உனக்கு கதவு திறந்து விட்டாள்.. "
அவன் அமைதியாக இருப்பதை பார்த்தவர்,
"உனக்கு பயம் இல்லை என்றால் நான் உனக்கு கொடுத்த அந்த பொருளை எடுத்துவிடு.. உன் தங்கையின் ஆத்மா மீண்டும் வீட்டுக்குள் வரும்.. அதனால் யாருக்கும் தொல்லை இருக்காது.. அது யாரையும் பயமுறுத்தாது.. அண்ணிடம் மட்டுமே அதனுடைய சேட்டைகள் இருக்கும்" என்று விளக்கம் அளித்துவிட்டு சென்றார்..
அவர் சென்றபிறகும், அவனால் நம்பமுடியவில்லை.. ஆத்மா தான் பேய் பிசாசா? அவனுக்குள் பல கேள்விகள்.. எதற்கும் பதில் மட்டும் கிடைக்கவில்லை..
ஒருவாரம் கடந்த நிலையில், கல்லூரி முடிந்து வீட்டிற்கு சென்றவனால் அங்கு நிலவிய மௌனத்தையும் தனிமையையும் தாங்கி கொள்ள முடியவில்லை.. ஒரு முடிவுக்கு வந்தவனாய், வீட்டின் இரு வாசலிலும் புதைத்த போருளை அவன் எடுக்க, நொடிபொழுதில் காற்றைப்போல் வேகமாய் ஏதோ ஒன்று அவனை கடந்து சென்றது..
தைரியத்தை எல்லாம் ஒரு திரட்டி "குட்டிமா நீயா? நீதான் என்றால் நிரூபி" என்று கூறிவிட்டு அவன் காத்திருக்க, அந்த இடத்தில் ஒரு சின்ன சத்தம் கூட இல்லை..
"எனக்கு நீதான்னு தெரியாதுடா.. ரூபனப்பா, கொடுத்ததை என்ன எதுன்னு கேட்காமல் புதைச்சு வெச்சேன்.. நீதான்னு எனக்கு எப்படி தெரியும்? நீயாவது சொல்லி இருக்கலாம்.." அவன் சொல்லி கொண்டிருக்கையிலேயே, ஒரு வாளியில் இருந்த தண்ணீரை அவன்மேல் ஊற்றி அவனை ஈரமாக்கினாள்..
"குட்டிமா சாரி டா".. எப்போதும் மகேன் மேல் கோபமாய் இருந்தால், அவனின் குட்டிமா இப்படி தண்ணீர் ஊற்றுவது வழக்கம்.. அதை வைத்த மகேன் இது, அவளது குட்டிமா தான் என்று நம்ப தொடங்கினான்.. அவனது அன்றாட வாழ்கையில் அவனின் குட்டிமா ஒரு பங்கானாள்.. (இதுதாங்க நம்ம குட்டிமாவின் கதை)