(Reading time: 14 - 28 minutes)

ன்றைய நிகழ்வை ஸ்ருதியிடம் நினைவு கூர்ந்தவள்.... பார்த்த ஒரு நாளிலே, பல நாள் பழகிய அனுபவத்தை கொடுத்தவளின் அன்பை எண்ணி சிலாகித்து..

“இப்பவும் கூட என் வால் பேப்பர்ல அதே பிக்சர் தான்!”, என்று தனது அலைபேசியை கையில் எடுத்தவள்... அதன் திரையில் தன்னைத் தோளோடு அணைத்த படி புன்னகைத்தவளை  ஏக்கத்துடன் பார்த்தாள்..

என் வைஃப் இந்த ஆபிஸ்ஸ விட்டு எப்போ போனாளோ அப்பவே உங்க ஃப்ரண்ட்ஷிப்புமும்  முடிஞ்சு போச்சு! இன்னும் ஃப்ரண்ட்ன்னு சொல்லிக்கிட்டு எங்க விஷயத்தில் மூக்கை நுழைச்சா.....“,

“................உங்களுக்கு தான் அசிங்கம்!!!”, என்று அந்த அசிங்கம் என்ற வார்த்தை அழுத்தி சொன்னவன்.. அவளை அற்பப் புழுவைப் போல பார்த்ததை மறப்பாளா???

அவனின் ஆக்ரோஷ கர்ஜனை நெஞ்சமெங்கும் எதிரொலிக்க.. நட்புச் சங்கிலி அறுந்து போனதை எண்ணி சசியின் மனம் ஊமையாய் அழுதது... அவள் பார்வையோ அலைபேசியில் பதிந்து  இருக்க...

அவள் பார்வையைத் தொடர்ந்த ஸ்ருதியின் பார்வையும் அந்த திரையில் விழுந்தது..... அதில் குறும் பார்வையுடன் கபடமற்ற சிரிப்புடன் சசியோடு நின்றவளை கண்டதும் விழிகள் பெரிதாக,

“இவங்க தான் அஞ்சனாவா?????!!! வாஆவ்வ்வ்!!!!... செம க்யூட்!!!!! ஆர்யா இஸ் ரியலி லக்கி!!”,

என்று ஸ்ருதி புகழாரம் சூட...

‘உண்மையில் அவள் கிடைக்க இந்த ஆர்யமன் கொடுத்து வைத்திருக்கணும்.. ஆனால் அவன் அந்த கோகிலாவுடன்..’, என்று உள்ளுக்குள் குமுறிய சசி,

“ம்ம்... கிளி மாதிரி வைஃப் இருந்தும்........”,

படபடவென்று மனதில் உள்ளதை கொட்ட ஆரம்பித்தவள்.. பின் சுதாரித்து, நாகரிகம் கருதி தான் பேசுவதை நிறுத்தினாள்...

‘ஆர்யாவை இன்னொரு பெண்ணுடன் தொடர்பு படுத்துகிறாள்’, என்று ஸ்ருதியால் யூகிக்க முடிந்தது.. வதந்தியாக கேள்விபட்டதை சசியின் வாய் மொழியாக தெரிந்த பொழுது.. அதை ஜீரணிப்பது கடினமாக இருக்க... அடுத்து சசி என்ன சொல்ல போகிறாள் என்ற திகைப்புடன் அவள் முகத்தை பார்த்திருந்தாள்...

தான் சொல்லப் போவதை எதிர்நோக்கி காத்திருந்த ஸ்ருதியை சசி ஏறிடும் பொழுது அவளது அலைபேசிக்கு அழைப்பு வர...

“ஓகே ஸ்ருதி கால் வருது! அப்புறமா பேசலாம்”, என்று அங்கிருந்து சசி அகல...

இன்னும் திகைப்பில் இருந்து அகல முடியாத ஸ்ருதியோ... அவள் சொன்னதை அசை போட்டாள்.

ஏனோ...  ஆர்யாவின் பார்வையில் இருந்த கண்ணியம் சசியின் கூற்றை ஒத்துக் கொள்ள மனம் வரவில்லை...

இது போன்ற வதந்திகளை கேட்ட பொழுது அதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் தான் இருந்தது! ஆனால், இப்பொழுது சசி அஞ்சனாவை சொன்ன விதத்தில்....  ஸ்ருதிக்கும் அவளை மிகவும் பிடித்து விட...

‘கடவுளே.. அஞ்சனாவிற்கு எந்த கெடுதலையும் செய்து விடாதே...’ என்று மானசீகமாக வேண்டிக் கொண்டாள்.

அன்று அஞ்சனாவை சூழ இருக்கும் ஆபத்தை கடவுளாலும் தடுக்க முடியுமா?????!!!!!

தொடரும்

Episode 08

Episode 10

{kunena_discuss:922}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.