இதனால் ப்ரத்யா வாழ்வில் பல கஷ்டங்களை அனுபவிக்க போகிறாள் என்பதை அப்போது இருவருமே உணரவில்லை.
அன்று பேசி முடிக்கும் போது ஜோக் சொன்னான் ஆதி.
“What is check mate?”
You tell your wife “I saw a lady, looked exactly like you”
Wife asks “Was she beautiful or not?
You can’t say YES OR NO
This is check mate...
(பிரண்ட்ஸ் ... அப்போ அப்போ இந்த ஜோக்ஸ் எல்லாம் யூஸ் பண்ணிக்கிறேன்... தப்பா எடுத்துக்காதீங்க..)
இதை சொன்னவுடன் ப்ரயு கலகலவென சிரித்தாள்.
“ஆதிப்பா நீங்க சொல்லுங்க .... அவள் அழகா இருந்தாளா?” என்று வினவ,
“அம்மா தாயே... ஆளை விடும்மா... அவ எப்படி இருந்த எனக்கென்ன... நீதான் அழகுடி செல்லம். “ என்று பெரிய கும்பிடு போட,
ப்ரயு .. அழகு காமித்தாள்.
அன்றைய பாடலாக அவன் அனுப்பியது ,
“என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை...
சொல்ல மொழி இல்லையம்மா ...கொஞ்சி வரும் தேரழகை..
அந்தி மஞ்சள் நிறத்தவளை .. என் நெஞ்சில் நிறைந்தவளை
நான் என்னென்று சொல்வேனோ.. அதை எப்படி சொல்வேனோ...”
அதை கேட்ட ப்ரயு சிரித்தபடி தூங்க போனாள்.
மறுநாள் காலை எழுந்தவள், தன் மாமியாரை தேடி போனாள்
“அத்தை.. நடந்தது நடந்து போச்சு.. இனிமேல் வித்யா விஷயத்தில் நீங்கள் என்ன சொல்றீங்களோ அதை கேட்கிறேன்... இதற்காக நாம் ஒருவரை ஒருவர் கஷ்டபடுத்திக்க வேண்டாம்” என்று சொல்ல,
“அந்த எண்ணம் இருக்கட்டும் “ என்று கெத்தாக சொன்னார். சொல்லி விட்டு அன்றைய வேலைகளில் பழைய படி அவளுக்கு உதவியும் செய்தார்.
பிரயுவிற்கு ஏமாற்றமே.. அவள் பேசியவுடன், நானும் அது போல் பேசியிருக்க கூடாது என்று மட்டுமாவது சொல்வார் என்று நினைத்திருந்தவள், அவர் அவளை போனால் போகுது என்று மன்னித்த மாதிரி நடந்து கொண்டதை எதிர்பார்க்கவில்லை. எதுவும் காட்டிக் கொள்ளாமல் சாதரணமாக இருந்தாள்.
அவர்கள் பேசியபடி பதினைந்து நாட்கள் கழித்து, வித்யாவை வீட்டிற்கு அழைத்து வந்தார்கள்.. அது வரை மாமியாரும், மருமகளும் சிரித்து பேச வில்லை என்றாலும், எதிர்ப்பாக இல்லாமல் இருந்தார்கள்.
வித்யா வந்த மறுநாளே பிரச்சினை ஆரம்பமாகியது.
காலையில் ப்ரயு மதிய சமையல் முடித்து, காலை உணவிற்காக பொங்கலும், சட்னி , சாம்பாரும் செய்திருந்தாள்.
சாம்பார் கொதிக்கும் வாசனை தாளாமல் , வித்யாவிற்கு வாந்தி வந்தது.
அதற்கு “சாம்பார் வாசனை ஒத்துக் கொள்ளவில்லையே. எதற்காக அதை செய்கிறீர்கள்? ஏன் எனக்கு என்ன வேண்டும் என்று கேட்டு சமைக்க மாட்டீர்களா? எல்லாம் உங்கள் இஷ்டம் தானா இந்த வீட்டில்?”
இத்தனைக்கும் அன்று காலை மாமியாரிடம் கேட்டு தான் சமைத்தாள்.. அவருக்கும் அவளுக்கு வாந்தி வரும் விஷயமெல்லாம் தெரியாது.. அதனால் அவர் தான் சொன்னார்.
இப்போது வித்யா கோபப்படவும், “சரி.. சரி.. வித்யா விடு .. உனக்கு என்ன வேணுமோ சொல்லு .. நான் செய்து தருகிறேன்... ப்ரத்யா நீ நாளையிலிருந்து அவளை கேட்டு செய்.. இப்போ நீ கிளம்பு“ என்றார்..
வித்யாவிடம் நான் தான் சொன்னேன் என்றும் சொல்லவில்லை.. அதே சமயம் பிரத்யாவை காப்பாற்றுவது போல் அவளை கிளப்பியும் விட்டார்.
பிரத்யாவிற்கு இதெல்லாம் புதுசாக இருந்தது.. அவள் சரியோ, தவறோ தான்தான் செய்தேன் என்று ஒப்புக்கொள்வாள். பிறகு தலையை குலுக்கி தன்னை சரி செய்து கொண்டாள்.
இரவுகளில் ஆதியோடு கொஞ்சம் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்தாள். அப்போதுதான் இருவருக்கும் ப்ரீயாக இருக்கும் என்று. இதனால் அவள் தூக்கம் என்பது கொஞ்சம் குறைவாக இருந்தது.
வித்யா வந்த பிறகு வீட்டில் பிரத்யவிற்கு வேலைகள் அதிகமாக இருந்தது.. அவளுக்கு பிடித்தது என்று சமைத்து, வீட்டில் வேலைகளும் பார்த்து, ஆபீஸ் வேலைகளும் பார்க்க பர்த்யாவிற்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. இருந்தாலும் அட்ஜஸ்ட் செய்து கொண்டாள்.
கொஞ்ச நாட்களில் இருவரும் பேசுவதற்கும் தடங்கல் ஏற்பட ஆரம்பிக்க, அது அவர்களின் வாழ்க்கையையே கேள்வி குறி ஆக்கியது.
தொடரும்