அவளின் அமைதியின் பொருள் அவனுக்கு புரியாமல் இல்லை. அவளின் வருத்தம் தீர்க்க முடியவில்லையே என்று இருந்தது. ஆனால் அவனாலும் ஒன்றும் சொல்ல முடியவில்லை.
“ப்ரயு” என்று அவன் மென்மையாக அழைக்கவும்,
மெதுவாக “சரி” என்றாள்
பிறகு மீண்டும் அவன் உடல் நிலையை பற்றி கவனிக்க சொல்லி வற்புறுத்தினாள்.
ஆதியின் உடல் நிலையில் கவனம் செலுத்திய ப்ரயு, தான் மயங்கி விழுந்ததை அவனிடம் சொல்ல மறந்து விட்டாள். உண்மையில் அதை அவள் யாரிடமும் சொல்லவில்லை. ஆதியிடம் சொல்லி விட வேண்டும் என்று எண்ணி இருந்தவள், அவனின் நிலையை பார்த்து விட்டு விட்டாள்.
அவனுக்கு ஒன்றும் ஆக கூடாது என கடவுளை வேண்டினாள்.
பிரயுவிடம் பேசி வைத்த ஆதி, தன் நண்பன் பிரபுவை அழைத்து,
“டேய் ..மச்சான் ..பிரயுவிடம் பேசிட்டேண்டா.. “ என்றான்.
“நல்லது டா.. அம்மாகிட்ட சொல்லிட்டியா?”
“இல்லைடா.. பிரயுவை சமாளிக்கிறதே பெரிய பாடா ஆகிட்டுது .. இதுலே அம்மா வேறன்னா சமாளிக்கிறது கஷ்டம். அதான் “
“சரி டா.. எடுத்தவுடனே நல்ல திட்டு வாங்கினியா?”
“ஹேய்.. நான்தான் அவ ஸ்டார்ட் மியூசிக் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே surrendar ஆயிட்டேனே.. அதோட நான் accident ஆயிட்டேன்னு தெரிஞ்சதும் அவ போன் அட்டென்ட் பண்ணாதது பத்தியே பேசல ... சரி அத விடு.. உனக்கு ரொம்ப தேங்க்ஸ்டா ... நீ உன் சிஸ்டர் விட்டு இங்கே என்ன பார்த்துக்க ஏற்பாடு பண்ணிருக்க.. ஹாஸ்பிடல் பில் வேலையும் அவங்க இருந்ததாலே easy ஆ முடிஞ்சுது.”
“இதுல என்னடா.. நான் இப்போதானே அங்கிருந்து வந்தேன் .. அங்க உள்ள formalities எல்லாம் எனக்கு தெரியும்.. அதான் என் மச்சான் கிட்ட பொறுப்ப ஒப்படைச்சு உன்ன பார்த்துக்க சொன்னேன். “
“அதுக்குதான் தேங்க்ஸ் ... சரி .. அடிக்கடி பேசு” என்று கூறி வைத்து விட்டான்.
ஆதியின் கை நன்றாக சரியாகவும் வேலைக்கு செல்ல ஆரம்பித்தான். தினமும் பிரயுவின் ஆதி உடல் நிலை பற்றிய பயங்கலந்த கேள்விகளுக்கு பதில் சொல்லி அவளை அமைதி படுத்தினான்.
அந்த வாரம் வித்யாவை அவள் புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். ஏழாம் மாதம் வளைகாப்பு வைத்துக் கொள்ளலாம் என்று இரு வீட்டு பெரியவர்களும் முடிவு செய்தனர்.
ஆதியும், பிரயுவும் மீண்டும் இரவுகளில் சாட்டில் பேச ஆரம்பித்தனர். நடுவில் அவர்களுக்கு இடையே இருந்த மெல்லிய திரை விலகினார் போல் இருவரும் உணர்ந்தனர். இப்பொழுது எல்லாம் ஆதியின் பேச்சுக்கள் கூடுதல் நெருக்கத்தை காட்டியது. பிரயுவும் சற்று தயங்கினாலும் அவனின் பேச்சுக்களுக்கு பதில் கொடுக்க ஆரம்பித்து இருந்தாள்.
இந்த நிலையில் அன்று பிப்ரவரி பதினான்கு.. இவர்கள் திருமணத்திற்கு பின் வரும் முதல் valentines day என்பதால் ஆதி அவளுக்கு surprise gift அனுப்பி இருந்தான்.
முதல் நாள் இரவு பேசும்போது
“ப்ரயு, நாளைக்கு காலையில் உனக்கு ஒரு gift வரும். அதை பார்த்து விட்டு, அதில் சொல்லியபடி செய்ய வேண்டும். “ என்று சொல்லியிருந்தான்.
காலை சரியாக ஆறு மணிக்கு எல்லாம் அவன் அனுப்பிய பார்சல் கிடைத்தது. அதில் ஒரு ஆகாய வண்ண புடவையும், அதற்கு மேட்சிங் ரவிக்கையும் இருக்க, அதோடு ஒரு நல்ல பாக்கிங்கில் ஒற்றை ரோஜாவும், மல்லிகை பூவும் தனியாக இருந்தது.
ஒரு பேப்பரில் ..
”என் அழகு ரதிக்கு.. ஆதியின் valentins day gift.. இந்த புடவை கட்டி, நான் அனுப்பிய ரோஜா மற்றும் மல்லிகை பூவை தலையில் வைத்து எனக்கு சீக்கிரம் போட்டோ whats up லே அனுப்பு.. நான் வெயிட் பண்ணிட்டு இருப்பேன்.” என்று எழுதியிருந்தது.
வெட்கத்தோடு அவன் சொன்ன மாதிரி செய்தவள், அவனின் பதிலுக்காக காத்திருந்தாள்
இவள் photo அனுப்பின அடுத்த நிமிடம் அவளை அழைத்த ஆதி
“ஹே.. செல்ல குட்டி .. சும்மா கலக்குற போ.. நான் மட்டும் இப்போ அங்கே இருந்தேன் ..” என்று முடிக்காமல் விட்டவன்
“ஆதிப்பா.... “ என்று அழைக்கவும்,
ரொம்ப நாள் கழித்து அவள் அப்படி கூப்பிடவும், மகிழ்ந்த ஆதி “ஹே ..ரதிம்மா .. ரொம்ப சந்தோஷம் டா..” என்றான்
“அது என்ன ரதி.. தீடிர் என்று ?” வினவவும்,
“நீ அழகுடா... அதான் பிரத்யுக்ஷாலேர்ந்து ரதிய சுட்டுட்டேன்.. .. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கிறப்போ உன்ன அப்படிதான் நினைச்சுப்பேன்.. அதுதான் அப்படி கூப்பிட்டேன். “
“சரி.. நல்லாருக்கேனா?”
“நல்லாருக்கியாவா ..? நீ எப்படி இருக்கன்னு இப்போ வரும் பாரு.. இன்னிக்கு சண்டே தானே .. கொஞ்சம் கழிச்சு பேசலாமா ?” என்று கேட்டான்