“இல்லபா.. இன்னிக்கு வித்யாவிற்கு வளைகாப்பு புடவை எடுக்க போகணும் ... அதுனாலே எப்பவும் போல பேசலாம்.. “
“சரி.. இப்போ பாட்டு கேட்டுட்டு போ “ என்றவன் அனுப்பிய பாடல்
ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளை தானோ
மலர் சூடும் கூந்தலே மழைகால மேகமாய் கூட
உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட
தேவார சந்தம் கொண்டு தினம் பாடும் தென்றல் ஒன்று
பூவாரம் சூடி கொண்டு தலைவாசல் வந்ததின்று
தென்பாண்டி மன்னன் என்று திருமேனி வண்ணம் கண்டு
மடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்று
இளநீரும் பாலும் தேனும் இதழோரம் வாங்க வேண்டும்
கொடுத்தாலும் காதல் தாகம் குறையாமல் ஏங்க வேண்டும்
கடல் போன்ற ஆசையில் மடல்வாழை மேனிதான் ஆட
நடுஜாம வேலையில் நெடுநேரம் நெஞ்சமே கூட
என்ற பாடல் கேட்டவள்.. மெய் சிலிர்த்து நின்றவள்
சற்று நேரத்தில் அவள் மாமியார் அழைக்கவும் வெளியே சென்றாள். அங்கே அவளை ஏற இறங்க பார்த்தார் அவள் மாமியார். காலையிலேயே பார்சல் வந்தது அவருக்கு தெரிந்திருந்தது. ஆதி அனுப்பியது போலே என்று ஒன்றும் சொல்லவில்லை. பிரத்யாவின் முகத்தில் என்றும் இல்லாத மகிழ்ச்சி இருந்தது. அதற்கு ஆயுள் சில நேரமே என்று அவள் உணரவில்லை.
தொடரும்
{kunena_discuss:948}