(Reading time: 14 - 27 minutes)

ஹே.. அவங்க இதுலே எல்லாம் தலையிட மாட்டாங்க... நல்லா இருக்குன்னாலும் உடனே சொல்லிடுவாங்க.. “ என்று பதில் சொன்னாள் வித்யா ..

அப்போது மீண்டும் ஆதியிடமிருந்து போன் வரவும், ப்ரத்யா ப்ரியா முகத்தை பார்க்க, “என்ன மறுபடி வெளியே போகனுமா ? சண்டே விடிகாலையிலே எழுப்பி வர சொல்லிட்டு, இப்படி hallukkum ரூம்க்கும் அலைய விடறியே இது உனக்கே நியாயமா இருக்கா?” என்று புலம்பவும்.

“ஹே.. நீ வெளியே போகவேண்டாம்.. நான் பால்கனி லே போய் பேசறேன்.. நீ இங்கேயே வெயிட் பண்ணு” என்றபடி போனை அட்டென்ட் பண்ணி,

“ஹலோ ..” என்றாள்

“ஹே.. ரதிக்குட்டி ... நான் உனக்கு surprise அனுப்பினா, நீ டபுள் surprise gift அனுப்பிருக்க.. எப்படிடா ?”

“online லே ஆர்டர் பண்ணேன்”

“நீ எங்கிட்ட சொல்லவே இல்ல.. நான் உனக்கு புடவை பூவோடு அனுபிச்சேன்.. நீ.. எனக்கு டீ ஷர்ட் வித் பொக்கே அனுப்பிருக்கே.. நானும் முதல்ல பொக்கே ஆர்டர் பண்ணலாமுன்னு நினைச்சேன் .. ஆனால் ... அங்கே உனக்கு அம்மா எதிரில் சங்கடமா இருக்கும்னுதான் செய்யல..”

“புரியுது .. அதான் .. நான் உங்களுக்கு பொக்கே அனுப்பிச்சேன்...” பிறகு மெல்ல தயக்கத்தோடு “நான் அனுபிச்சது உங்களுக்கு பிடிச்சிருக்கா ?”

‘பிடிச்சுதாவா?.. நேரில் இருந்தால் அப்படியே..உன்னை தூக்கி ஒரு சுத்து சுத்தி இருப்பேன் ..”

“அப்படினா .. நீங்க மட்டும் அந்த டீ ஷர்ட் போட்டு photo அனுப்பல “ என்று சிணுங்கல் குரலில் கூறினாள்.

“ஹே.. சாரி டா... சந்தோஷத்திலே அத மறந்துட்டேன் “ என்றவன் உடனே .. இப்போ உன் மொபைல் பாரு.. என்றான்.

அவள் கொடுத்த டீஷர்ட் அணிந்து.. அந்த பொக்கேவை தன் நெஞ்சோடு அணைத்தவாறு photo அனுப்பிருந்தான்.. யாரும் இல்லை என்று எண்ணி , அந்த போட்டோவிற்கு முத்தம் வைத்தாள் ப்ரத்யா ..

பிறகு போன் செய்த ... ஆதி “ஹே.. செல்லம்.. உன் புருஷன் எப்படி இருக்கேன்..?”

“சூப்பர்.. என்றாள்...

“சரி.. photo அனுப்பினதும் பார்த்துட்டு என்ன செய்த?”

“ஒன்னும் செய்யலே.. பார்த்தேன் .. வேறென்ன?”

“இப்படி கவுத்துட்டியே... நான் கூட அய்யா personality பார்த்து மயங்கி ஏதாவது பரிசு கொடுத்துருப்ப.. நினைச்சேன்..”

“அது எல்லாம் இல்லை .” என்றாள்.. மீண்டும் தன் மாமியார் அழைக்கவே அவனிடம் இரவு பேசலாம் என்று விட்டு புன்னகையோடு வந்தாள்..

ப்ரியாவோ .. அவள் ரகசியத்தை கண்டவள்

“ரகசியமாய் .. ரகசியமாய் புன்னகைத்தால் பொருள் என்னவோ ..” என்று பாடினாள்.

அவள் தலையில் தட்டியபடி வெளியே வந்தவள், பிரியா, ப்ரத்யா அவள் மாமியார் மூன்று பேரும் tiffen சாப்பிட்டு கிளம்பினர்.

பிரியா அவள் வீட்டிற்கு சென்று விட, இவர்கள் இருவரும் கடைக்கு சென்றனர்.

ப்ரத்யா மாமியார், பிரத்யா ஆதியை தன்னிடமிருந்து பிரித்து விடுவாளோ என்று பயப்படுவாரே தவிர, அதை விட, ப்ரத்யா ஆதி மாதிரி தன் மகளும் அவள் கணவனை விட்டு இருக்க வேண்டும் என்று நினைத்த வித்யாவின் மாமியார் பேச்சு தான் அவருக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தது.. மற்றபடி அவரும் பிரத்யாவை நல்லவிதமாக நடத்தினார். தன் மகளுக்கு சீர் செய்யும் போதும், மற்ற நேரமும் அவர் பிரத்யவை முன்னிலைபடுத்திதான் செய்வார்.

அதனால்  இருவரும் மகிழ்ச்சியோடு சென்று முதலில்  காத்திருந்தனர். இவர்கள் வந்து ஒரு கால் மணி நேரம் கழித்து வித்யா வீட்டில் எல்லாரும் வந்தனர்..

முதலில் அவளை கவனித்த வித்யாவின் மாமியார் “அட.. புது புடவை எல்லாம் கட்டி இருக்கே... என்னம்மா உனக்கு பிறந்த நாளா?” என்று கேட்டார்.

அதற்கு பதில் பிரத்யாவின் மாமியார் “இல்ல.. சம்பந்திம்மா.. ஆதி இன்னிக்கு தான் அவளுக்கு அனுப்பிருக்கான் போலே... இன்னிக்கு இங்கே வரதாலே கட்டியிருக்கா .” என்றார்.

அவர் சாதாரணமாக அதை சொன்னதும் .. ப்ரத்யா.. தனக்குள் அப்பாடி என்று நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டாள்.

ஆனால் .. வித்யாவின் மாமியார் கொஞ்சம் விவரம் ஜாஸ்தி.. “ஒஹ்.. இன்னிக்கு காதலர் தினமாமே அதுக்கு அனுப்பி இருக்கறா உங்க பையன் ? “ என்று நக்கலாக கேட்கவும், ப்ரத்யா மாமியாரின் முகம் ஒரு மாதிரி ஆகி விட்டது. வித்யாவின் முகமும் மாறி விட்டது.

இதை கண்ட ப்ரத்யாவிற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.