" ஓஹோ , சோ இப்போ நீ பார்க்கறதுக்கு பெரிய பொண்ணு மாதிரி தெரியுற??" என்று ஒற்றை புருவத்தை உயர்த்தி கேலியான குரலில் கேட்டான் .. அவனுக்கு பரிமாறுவதை நிறுத்திவிட்டு தன்னை மேலும் கீழுமாய் பார்த்து கொண்டாள் சங்கமித்ரா ..
" ஆமா மாமா , நான் பெரிய பொண்ணு மாதிரி தானே இருக்கேன் " என்று அவள் கேட்கவும் தலையில் அடித்து கொண்டான் ஷக்தி ..
" என்னாச்சு மாமா ?"
" ம்ம்ம் கொசு .. அதை தட்டி விட்டேன் .. " அவன் நக்கலான பதிலுக்கு ஈடு கொடுப்பது போல , அவன் தலையில் செல்லமாய் கொட்டிவிட்டு அவன்
" ஏய் " என்று மிரட்டவும்
" ஐயோ அதே கொசுதான் மாமா , பறந்து வந்து உன் தல மேல உட்காருந்துச்சு " என்றாள் ..
" உப்ப்ப்ப்ப் ... உன் கிட்ட பேசி ஜெயிக்க முடியாது லாயரம்மா " என்றவன் அவளையும் அருகில் அமர்த்தி சாப்பிட வைத்தான் .. அவனுடன் கரையும் ஒவ்வொரு நொடிகளையும் அணு அணுவாய் ரசித்தாள் சங்கமித்ரா ..
உன்னோடு நான்..!
இரு விழிகளுக்கு இடையே தோன்றிடும் இடைவெளி போல
மிகச்சிறிய இடைவெளியில்
உன்னோடு நான் !
பூவை தொட்டு செல்லும் காற்றை போல
உன்னை தொட்டு உரசிட உன்னோடு நான் !
என் தேவைகளை அனைத்தையும் நீ பூர்த்தி செய்வதற்காகவே
உலகம் அறியாத பெண்ணாய் உன்னோடு நான் !
உன் தேவைகள் அனைத்தும் நொடி பொழுதில் உணர்ந்திட
இருளிலும் தொடர்ந்திடும் நிழலாய் உன்னோடு நான் !
இன்னல்கள் ஆயிரம் வந்தாலும்
அதை மாற்றி இன்பம் தந்திட உன்னோடு நான் !
காலம் என்பது எத்தனை அழகென
காதலாய் வாழ்ந்து காட்டிட உன்னோடு நான் !
- திருமதி சங்கமித்ரா ஷக்தி ..
வழக்கம்போல அவளுக்குள் கவிதை மின்னலாய் வெட்டியது .. அவள் அருகில் அமர்ந்திருந்த ஷக்தி , உணவை முடித்து பாத்திரங்களை கழுவி விட்டு அவளின்முன் சொடுக்கு போடும்வரை கற்பனையிலேயே லயித்திருந்தாள் அவள் ..
" என்ன டீ .. கனவா ?"
" ம்ம்ம் .. ஒண்ணுமில்ல " அழகாய் வெட்கபட்டு சிரித்தாள் அவள் .. அதை ரசித்தாலும் சலிப்புடன்
" நாசமா போச்சு போ .. சீக்கிரம் வா என் கூட " என்றபடி அவன் அறைக்கு சென்றான் .. அவன் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் குட்டி போட்ட பூனை போல பின்தொடர்ந்தவளின் கைகளில் சில பைகளை திணித்தான் ஷக்தி ..
" என்ன மாமா இது ? "
" பிரிச்சு பாரு "
" சொல்லேன் "
" நீயே பாரேன் "
" அடங்கவே மாட்டடா நீ " என்று சலித்தபடி பையை திறக்க அவளுக்காக சில உடைகளை வாங்கி இருந்தான் ஷக்தி .. அவள் வேலைக்கு ஏற்றாற்போல ப்ரொபெஷனலாக அதே நேரம் அவளுக்கும் பிடித்தவரு சில ஷர்ட்டும் , முழங்கால்தொடும் அளவுள்ள ச்கிர்டும் வாங்கி இருந்தான் ஷக்தி .. அவன் தேர்வினை மனதிற்குள் மட்டும் இல்லாமல் வாய்விட்டே பாராட்டினாள் சங்கமித்ரா ..
" இதெல்லாம் எப்போ மாமா வாங்கின ?"
" நேற்றுதான் "
" எப்படி இப்படி எல்லாம் ?"
" எப்படின்னா ?"
" உனக்கு இந்த மாதிரி ட்ரெஸ் பண்ணா பிடிக்காதுன்னு நினைச்சேனே "
" அப்படின்னு நான் சொல்லலியே!"
" டேய் "
" உன் வேலைக்கு நீ சேலை எல்லாம் கட்டிட்டு போன அவ்வளவோ நல்ல இருக்காது மிது .. எல்லாத்துக்கும் இடம் பொருள் ஏவல் இருக்கு " என்றபடி அவள் தலையில் தட்டினான் ஷக்தி ..
மித்ராவிற்கு அவள் அன்னையின் நினைவு வந்தது ..சித்ராவும் இப்படித்தான் , அவள் எங்கு போவதாய் இருந்தாலும் அவள் உடை தொடங்கி அனைத்து நேர்த்தியாய் இருப்பதை கவனித்து கொள்வார் அவர் .. சக்தியை போலத்தான் அவரும் , அதட்டலில் தான் அன்பினை பொழிவார் ..