(Reading time: 12 - 23 minutes)

" ய் என்னடி கண்ணு கலங்குது "

" நீ அப்படியே அம்மா மாதிரி ஷக்தி .. உன்கூட இருக்குறது அம்மாகூட இருக்குற மாதிரி இருக்கு தெரியுமா ?"

" ஆஹான் .. அப்போ நானும் சித்ரா அத்தை மாதிரி உனக்கு தோச கரண்டியிலே ரெண்டு போடவா ?"

" நீ சொல்லி நான் முடியாதுன்னு  சொல்வேனா மாமா ?" என்று அவள் கண்ணடிக்க

" அடிங்க .. ஓடி போ " என்று அவளை ததுரத்தினான் ஷக்தி .. அவன் வாங்கி தந்த உடை அணிந்து கண்ணாடியில் அழகு பார்த்தாள்  மித்ரா .. உண்மையிலேயே இப்போதுதான் அவளிடம் ஒரு நிமிர்வும் மிடுக்கும் தெரிந்தது .. ஆள் பாதி ஆடை பாதின்னு சொல்றது இதுதானோ ? என்று மலைத்தவள் , அடுத்த வேலையாய்  சீப்பை எடுத்து கொண்டு அவன் முன் நின்றாள் ..

" இப்போ என்னடி ?"

" என்ன மாதிரி ஹேர் ஸ்டைல் பண்ணட்டும் ஷக்தி ?"

" என் தலையெழுத்து " என்று மீண்டும் தலையில் அடித்து கொண்டவன் , அவளுக்கு அழகாய் தலைவாரி விட்டான் .. வழக்கத்தை விட அதிகமாகவே தன்னை அவள் ரசிக்கிறாள் என்று உணர்ந்தவன்

வேண்டுமென்றே " இதெல்லாம் , என் பொண்ணு வர்ற வரைக்கும் தான் .. அதுக்கு அப்பறம் பண்ண மாட்டேன் ..எனக்கு என் மகளை கவனிக்கவே நேரம் போதாது " என்றான் ..

" அய்யே போடா .. நான் இல்லாமல் உன் பொண்ணு என்ன வானத்தில் இருந்து குதிப்பாளா  ? முதலில் நீ என்னை கவனி .. அப்போதான் உனக்கு பாப்பா " என்றவள் தான் சொன்ன வார்த்தையை எண்ணி திருதிருவென விழித்தாள் .. முதலில் அதை இலகுவாய் எடுத்து கொண்டவன் அவள் முகம் போன போக்கை பார்த்ததும் வேண்டுமென்றே

" ஓஹோ எப்படி மேடம் கவனிக்கணும் ?" என்று ரொமாண்டிக் லுக் விட

" ஐயோ ஆளை  விடு மாமா " என்று ஓடியே விட்டிருந்தாள்  அவள் .. அன்றைய தினம் இருவருக்குமே இனிதாய் தொடங்கிட  மித்ரா இனியா வீட்டிற்கும் ஷக்தி கடைக்கும்  புறப்பட்டனர்..

காரை ஓட்டி  கொண்டே போனை அவ்வப்போது பார்த்து கொண்டிருந்தாள் தேன்  நிலா ..

" என்னாச்சு பேபி ? " என்றார் மனோ .. காரில் பாக்யமும் அவரும் பின்னால் அமர்ந்திருக்க , அவ்வப்போது போனை பார்த்து கொண்டிருந்த மகளை கவலையாய் பார்த்தார் மனோ ..

" ப்ச்ச்ச் .. இந்த மது போனை எடுக்க மாட்டுறான் அப்பா "

" இப்போ தானே மாப்பிளை வந்துருப்பார் ? தூங்குவார் டீ .. தொந்தரவு பண்ணாதே "

" அம்மா நீ உன் மாப்பிளைக்கு ஜிங் சக்  அடிக்க வேணாம் "

" பத்து நாளாய் பார்க்கலையே .. நான் பாவம் ஆச்சேன்னு தோணுதா அவனுக்கு ? ஏதோ  பாவம்ன்னு கொஞ்சம் விட்டு கொடுத்தா , ஓவரா தலைக்கு மேல ஏறி போறான் அவன் " என்றாள்  நிலா கடுப்பாய் ..

அதே கோபத்தில் ஸ்பார்க் எப் எம் ஐ திறக்க , அவள் தேடி கொண்டிருந்த கள்வன் அங்கு பேசி கொண்டிருந்தான் ..

அப்படி என்ன ஸ்பெஷலா நடக்குது ? அடுத்த எபிசொட்ல சொல்றேன் ..

தொடரும்

Episode # 28

Episode # 30

{kunena_discuss:777}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.