(Reading time: 18 - 35 minutes)

வர்களை இங்கு கொண்டு வந்துவிட்ட அனைவரும் விடை பெற்றுச் செல்ல…. அதுவரை அவள் அருகிலேயே சுற்றிக் கொண்டு…..அடுத்தவரிடம் மட்டுமாய் பேசிக் கொண்டிருந்தவன்…..இப்போது இவளது கண் பார்த்து….கைப் பற்றி மென்மையும் சிறு இறைஞ்சுதுலமாக “வா மனு…” என்றான்… இவளும் அவனது கண்ணைப் பார்த்துக் கொண்டே கையை மெல்ல உருவிக் கொண்டாள்…

“மனு ப்ளீஸ்….என்ன விஷயம்னு சொல்றேன்….அப்றமா நீயே சொல்லு…”

இரண்டு காதையும் பொத்திக் கொண்டு அவனிடம் முரண்டு பிடிக்க ஒரு மனதிற்கு தோன்றுகிறது என்றால்…. அதென்ன விளக்கமே கேட்கமாட்டேன்னா எப்படி என்கிறது மறு மனம்.

இவன் மட்டும் எல்லாத்தையும் சொல்லிட்டா செய்தான்? காரணம் தெரியாம தலைய பிச்சுக்கிறது எப்டி இருக்கும்னு இவனுக்கும் தெரியனும்ல…..என்கிறது மூன்றாவதாய் ஒன்று….

அவர்களுக்கான பெட்ரூம் வாசலில் இவள் முகத்தை படிக்க முயன்றபடி நின்றிருந்த அவனைப் பார்த்தாள்.

‘காரணம் கண்டிப்பா கேட்கனும்தான்…பட் சேம் டைம் காயப் போட்டு ….மண்டைய உடைக்கிற ப்ராஜக்டையும் மறக்காம செய்யனும்…’ இரண்டு நினைவுக்கும் நடு நிலமையாய் ஒரு முடிவுக்கு வந்தவள்…. கட கடவென அங்கிருந்த அறையில் புகுந்து,  மாற்று உடை எடுக்க ஆரம்பித்தாள் தன் உடைமைகளில் இருந்து…

இவள் எதிர் பார்த்தது போல இவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு விலகிப் போனான் அவன்….

அடுத்து இவள் குளித்து உடை மாற்றி படுக்க வந்த போது அவனும் அதையெல்லாம் செய்து இவளிருந்த இவர்களுக்கான படுக்கை அறைக்கு வந்திருந்தான்.

இவள் மெத்தையில் அமர்ந்திருக்க…. இவளுக்கு அடுத்து வந்து அமர்ந்தவன்…. “மனு “ என்றபடி இவளைப் பார்க்க அவன் கண்களை நேரடியாக சந்தித்தாள்…

‘இப்ப சொல்லு உன் கதைய நான் கேட்கிறேன்…..எனக்கும் எல்லாத்தையும் உன் கண்ணையும் முழியையும் பார்த்து புரிஞ்சுக்கோன்னு தானவிட்ட……இப்ப என் முழியைப் பார்த்து புரிஞ்சுகிட்டு கதை சொல்லு…’

அவன் முகத்தையே இவள் பார்த்திருப்பதை உணர்ந்தவன்….”உனக்கு முதல்ல இருந்து எல்லாத்தையும் சொல்லனும் மனு “ என்று தொடங்கினான்.

“என் அப்பாவுக்கு என் அம்மா ரெண்டாவது வைஃப்…. வர்ஷனும் இன்பாவும் அப்பாவோட  ஃபர்ஸ்ட் வைஃபோட….. நான் பெரியம்மான்னு சொல்லனும் இல்லையா….அவங்க குழந்தைங்க….” அவனது தொடக்க வார்த்தையிலேயே அதிர்ந்து தான் போனாள் மனோகரி….

அதெப்படி அவர்களை ஏற்றுக் கொண்ட இவனது அம்மா…இவனை இப்படி??....மனோவின் அம்மா முன்பு குறிப்பிடும் போது கூட இப்படி எதையோ சொன்னார்தானே……அவங்களையே ஏத்துகிட்ட உன் மாமியார் மாப்ளைட்ட ஏன் இப்டி இருக்காங்கன்னு காரணம் புரிஞ்சுகனும்னு….அப்ப அவளுக்கு இதுக்கு அர்த்தம் இப்படி இருக்கும்னு தோணலையே…..

“இன்பா பிறக்கிறப்ப டெலிவரிலதான் அவங்க இறந்தது……அப்பா ஃபேமிலி எவ்ளவு வசதின்னு உனக்கே தெரிஞ்சுருக்கும்….அப்பாவோட நேஷன் க்ரூப்ஸ் இன்டியால டாப் த்ரீக்குள்ள இருந்துது அப்பவே…. என் அம்மா ஒரு ப்ரைவேட் ஸ்கூல் டீச்சர்….அவங்களுக்கு இடையில இருக்கிற ஃபினான்ஷியல் டிஃபரென்ஸ் உனக்கு புரியுதுதானே….வர்ஷனோட டீச்சராம் அம்மா…பொதுவாவே குழந்தைங்கட்ட நல்லா இருப்பாங்களாம்….வர்ஷன் அம்மா இறந்துட்டாங்கன்னதும் அவன் மேல இன்னுமே சாஃப்ட் கானராம்…அவன் இவங்கட்டயே இருக்கனும்னு  ட்ரைப் பண்ணுவான் போல…அவன் அப்ப மூனு  வயசு குழந்தை இல்லையா…..எது எப்படியோ…என் அப்பாவோட அம்மாவுக்கு என் அம்மாவைப் பார்க்கிற மாதிரி சூழ்நிலை அமைஞ்சிருக்கு……….அவங்களுக்கு என் அம்மாதான் தன் மகனுக்கு சரியான பொண்ணுனு தோணிட்டு….

அப்பாட்ட இதை சொல்லிருப்பாங்க போல…..அப்பா முதல்ல கோபபட்டாங்களாம்…. ஆனா அப்பாவோட அம்மா வர்ஷனை காரணம் காட்டி அப்பப்ப அம்மாவை எங்க வீட்டுக்கு வர வச்சுருக்காங்க….எப்டியாவது அப்பாவை சம்மதிக்க வைக்கனும்ன்றது தான் ப்ளான்…..வர்ஷன் இன்பா ரெண்டு பேரும் இதில் அம்மாட்ட ரொம்ப சேர்ந்துகிட்டாங்க போல…..இதுக்கிடையில என் அப்பாவோட அம்மா வேற இறந்துட்டாங்க….இன்பாக்கு முழுசா ஒரு வயசு கூட ஆகலை…. உனக்கு புரியும்னு நினைக்கிறேன்….. அப்பா அம்மாவை மேரேஜ் செய்துகிட்டாங்க….. ஆக செகண்ட் மேரேஜ் அப்பாவோட ஃபர்ஸ்ட் வைஃப் இறந்து ஒன் இயர்குள்ள நடந்துட்டு…...

ஆனால் அதுதான் அங்க பெருசா ப்ரச்சனை ஆகிட்டு…..வர்ஷன் இன்பாவோட அம்மாவழிப் பாட்டிக்கு அப்பா அடுத்த கல்யாணம் செய்ததை ஒத்துக்க முடியலை…. அதுக்கு பிறகு என் பொண்ணோட குழந்தைங்கள பார்க்கனும்னு அடிக்கடி அவங்க என் அப்பா வீட்டுக்கு வர ஆரம்பிச்சுருக்காங்க……வந்தப்பல்லாம் என் அம்மாவை ரொம்ப டிஸ்டர்ப் செய்துருப்பாங்க போல தெரியுது……அப்பாதான் இதெல்லாம் என்ட்ட சொன்னது….

அம்மா வசதி இல்லாதவங்க…காசுக்காக பிள்ளைங்கட்ட நல்லா இருக்ற மாதிரி நடிச்சு அப்பாவை கல்யாணம் செய்துட்டாங்கன்றது தான் மெயினா அந்த பாட்டி சொல்ற கம்ப்ளெய்ண்ட்…..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.