(Reading time: 18 - 35 minutes)

துக்கு அம்மா நான் உண்மையிலேயே பிள்ளைங்க மேல பாசமாதான் இருக்கேன்னு ஃப்ரூவ் பண்ண ட்ரைப் பண்ணிட்டே இருந்திருக்காங்க…. இந்த சூழ்நிலைல நான் பிறந்திருக்கேன்…. டெலிவரியான புதுசு…. அந்த டைம் வர்ஷன் எப்டியோ  மாடி படியில இருந்து உருண்டுட்டான் போல…..அவனுக்கு ரொம்ப அடி போல….அடுத்து ரெண்டு நாள்ல வர்ஷனுக்கு குடுத்துட்டு இருந்த சிரப்பை இன்பா… அப்போ அவ சின்னகுழந்தை இல்லையா…..என்னமோனு எடுத்து முழு பாட்லையும் குடிச்சுட்டா போல….அவளுக்கு ஸ்டமக் வாஷ்லாம் செய்து ரொம்ப கஷ்டபட்டுதான் காப்பாத்தியிருக்காங்க….

அப்பாவுக்கு இதில் அம்மா மேல அவநம்பிக்கைலாம் கிடையாது….வர்ஷன் விஷயத்தில் அதை தடுக்க அம்மா எதுவும் செய்துருக்கலாம் முடியாதுன்னு அப்பா சொன்னாங்க……ஆனா வர்ஷனோட சிரப்பை அவனுக்கு குடுத்துட்டு மறந்து போய் கீழ வச்சது அம்மாதானாம்…..அவங்க ஒன்னும் இன்டென்ஷனாலாலாம் செய்யலைனு அப்பாவுக்கும் தெரியும்….அதுவும் நான் பிறந்த புதுசுன்றதால அம்மாக்கு தூக்கம் வேற ரொம்ப குறைவாம்……நைட்லாம் நான் அடிக்கடி விழிப்பேன் போல…பகல்ல இன்பா தூங்க விட மாட்டா போல….இதுல அந்த டேஸ்ல  வர்ஷன் வேற வலியில அம்மாவை அங்க இங்க அகலவிடமாட்டான் போல…. இதெல்லாம் அப்பாதான் எனக்கு சொன்னதும்….

பட் அந்த நேரம் இன்பாவை அப்டி ஹாஸ்பிட்டல்ல பார்க்கவும்….’அப்டி என்ன உனக்கு கேர்லெஸ்னெஸ்….சின்ன குழந்தை வீட்ல இருக்குன்னு தெரியும்ல…அந்த மெடிசினை கவனமா  அவ ரீச்சுக்கு இல்லாத இடத்துல வச்சுருக்கனும்ல…..பையனை மட்டும் பார்த்துகிட்டா போதுமான்னு’ கோபமா சொல்லிட்டாங்களாம்….

  அந்த நேரத்துல அம்மா வர்ஷனை பார்த்துகிட்டு இன்பா விஷயத்துல கேர்லெஸா இருந்துட்டாங்கன்னு தான் அப்பா மீன் பண்ணேன்றான்ங்க……அம்மா என்னைய பார்த்துட்டு இன்பாவை கவனிக்காம விட்டுடாங்கன்னு அப்பா சொல்றதா எடுத்துகிட்டாங்களாம்…

இதுல அந்த பாட்டியோ, தன் பிள்ளைக்குத்தான் எல்லா சொத்தும் வரனும்னு, இதெல்லாம் வர்ஷனையும் இன்பாவையும் கொல்றதுக்காக என் அம்மா செய்த வேலைன்னு ரொம்ப ஆடிட்டு போல…..அம்மா ரொம்ப ஹர்ட் ஆகிட்டாங்க போல….

அவங்க தன் பக்க நியாயத்தை நிரூபிச்சாகனும்னு அன்னைக்கே என்னை கொண்டு போய் அவங்க அக்காட்ட குடுத்துட்டாங்களாம்…..அப்போ பெரியம்மா இங்க சென்னைல தான் இருந்தாங்க……அவங்களுக்கு மேரேஜ் ஆகி ஃப்யூ இயர்ஸ் ஆகியும் குழந்தை இல்லாம இருந்திருக்கு…..அவங்களும் சந்தோஷமா என்னை வாங்கிகிட்டாங்க….

அப்பாக்கு இதை ஒத்துக்கவே முடியலை….ஆனா அம்மா நீங்களே என்னை சந்தேகப் பட்டுடீங்கல்ல…..? என்னால மூனு குழந்தைய ஒரே நேரத்துல பார்த்துக்க முடியலை….மத்தபடி நான் வர்ஷனுக்கும் இன்பாக்கும் எந்த துரோகமும் செய்யலைனு ஒரே அழுகை….

அப்பா நான் வர்ஷனை தான் சொன்னேன்னு சொல்லிப் பார்த்திருக்காங்க….அம்மாவால அதை ஒத்துக்க முடியலை…..

இப்ப நான் அழுத உடனே இப்டி சொல்றீங்க….நாளைக்கு திரும்ப என்னமாவதுன்னா திரும்பவும் என் மேலதான் தப்பா தோணும் உங்களுக்கு….அதனால குழந்தைங்க கொஞ்சம் பெருசாகிற வரை மித்ரன் அங்கயே இருக்கட்டும்……இதுல கட்டாயப்படுத்துனீங்கன்னா நான் தற்கொலை செய்துட்டு செத்து போய்டுவேன்னு ரொம்ப பிடிவாதம் பிடிச்சிருக்காங்க…..

அப்பா சொல்ற வரை சொல்லிப் பார்த்துட்டு என்னைப் போய் தூக்கிட்டே வந்துட்டாங்க போல….அம்மா சூசைட் அட்டெம்ட்…….எப்டியோ அம்மாவைக் காப்பாத்திட்டாங்க…..அதோட குழந்தைய பார்க்க மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கவங்கட்ட ஃப்யூ மந்தஸ் ஓல்ட் பேபி என்னை எப்டி விட….வேற வழியில்லாம என்னை என் பெரியம்மாட்டயே குடுத்துருக்காங்க…

3 இயர்ஸா அம்மா என்னை கூப்டுட்டு வர ஒத்துக்கவே இல்லை…...அந்த பாட்டி எதுவும் சொல்லிட்டு இருக்கும் போல……அதுட்ட நான் நிரபராதின்னு காமிக்க இவங்க என்னை கூப்டுட்டே போகலை…..அதோட பெரியம்மா பெரியப்பா ரெண்டு பேரும் என்னை ரொம்பவே நல்லா பார்த்துப்பாங்க போல….

இந்த டைம்ல பெரியப்பாவுக்கு யூஎஸ் ஷிஃப்ட் ஆகுற மாதிரி சிச்சுவேஷன்……அப்பாக்கு என்னை அவங்க கூட அனுப்ப இஷ்டம் இல்லை….அம்மாவுக்கு என்னை வீட்டுக்கு கூட்டிட்டு வர இஷ்டம் இல்லை…..இதில் நான் வேற பிறந்ததுல இருந்து அவங்கட்ட இருக்கேன்ல… அப்பா என்னை வீட்டுக்கு கூட்டிட்டுப் போக… நான் அவங்களை விட்டுட்டு வர மாட்டேன்னு அழுது ஃபீவர்…..

அதையே காரணமா வச்சு என்னை பெரியம்மா வீட்டோட அனுப்றதா ஆகிட்டுது…..அதுல அடுத்த இஷ்யூ என்னனா….. அவங்களுக்கு குழந்தையை தன்னோட கொண்டு போக லீகல் அத்தாரிடி தேவை…..சும்மாலாம் சொந்தகாரங்க குழந்தைனு ஒரு குழந்தைய தூக்கிட்டு யூஎஸ் வர முடியாது…..விசா கிடைக்காது……சோ லீகலி அவங்க எனக்கு அடாப்டட் பேரண்ட்ஸ்னு டாகுமென்டைஸ் செய்துட்டாங்க……

ஜஸ்ட் டாகுமென்ட்காகதான்….மத்தபடி நாம ஒன்னும் அடாப்ஷன் குடுக்கலைனு அம்மா சொல்லிக்கிட்டாலும்….. என் நிலை அடாப்ஷன் கொடுக்கப்பட்ட பேபி நிலை தான்….. பெரியம்மா பெரியப்பா வீட்டோட  நான் மில்வாக்கி போய்ட்டேன்.

அடுத்து என் 9 வயசில் பெரியம்மாவுக்கு ஃபர்ஸ்ட் பேபி அலிஷா….நெக்‌ஸ்ட் இயர் தம்பி அலிக்‌ஸ் பிறந்தாங்க….அடுத்து தான் எனக்கு அங்க ப்ரச்சனை ஆக ஆரம்பிச்சுது…..பெரியப்பா பெரியம்மா ரெண்டு பேருக்குமே என் மேல இன்ட்ரெஸ்ட் போய்ட்டு…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.