(Reading time: 18 - 35 minutes)

வன் விளக்கத்தில் அம்மாவும் அப்பாவும் ஒருவாறு சமாதானப் பட்டாலும் வினிக்கு இது நிஜமா ட்ராமாவா என்ற குழப்பம் வந்தாலும் மனதிற்குள் சந்தோஷமும்தான். .’பண ஆசை பிடிச்சவன் இவ்ளவு நகைய ஈசியா விட்டுகொடுக்க மாட்டானே….’

டுத்து அவர்கள் கொண்டல்புரம் திரும்புவதாகத்தான் நினைத்தாள் வினி. ஆனால் வழியில் பாதை மாறி அவன் ஒரு இடுக்கமான சாலையில் செல்லத்தொடங்கும் போது ஆரம்பித்த பயம்….. மை இருட்டான ஒரு இடத்தில் பைக்கை நிறுத்தி “இறங்கு வினு…இதுக்கு அப்றம்  மலை….. நடந்துதான் போகனும்…ரொம்ப கேர்ஃபுல்லா வா” என்ற போது உச்சத்தை தொட்டது.

எங்க கூட்டிட்டுப் போறான்? ஏன்?

தூரத்தில் எங்கேயோ ஊளை இடுது நரி….

வாராய் நீ வாராய்…போகுமிடம் வெகு தூரமில்லை…..’எங்க இருந்தோ இந்த பாட்டு காதுல விழுற மாதிரியே இருக்குல்ல….’ திக் திக் என்கிறது இவள் இதயம்.

“இ..இங்க அனிமல்ஸ்லாம் உண்டா?” வாய் அதுவா கேள்வி கேட்குதே…

இவளை திரும்பிப் பார்க்கிறானோ அவன்.? இருக்க இருட்ல என்ன புரியுது?

“இதென்ன கேள்வி வினு….அனிமல்ஸ் இல்லாமலையா?.....அதோட இது நீ பார்த்திருக்க எல்லா மலையில இருந்தும் ரொம்பவே பெருசு……பகல்ல பாரு புரியும்….” அவனின் அப்பதிலில் சுற்றி முற்றும் பார்த்தாள் வினி. ‘புலியோட கண்ணு இருட்ல ரெட்டா தெரியுமாமே…. எங்கயாவது ரெண்டு ரெட் தெரியுதா?’

இதற்குள் எப்ப போய் அவன் மேல இடித்தபடி நின்றாள் என அவளுக்கே தெரியாது…

“வினு இது மலை….இங்க வீட்ல மாதிரி அவசரமா ஹக் பண்ணா ரெண்டு பேருமா கீழ விழுந்துடுவோம்…….அதனால எதை செய்தாலும் சொல்லிட்டு செய் என்ன?” அவன் கிண்டல் தொனியின்றி சொல்ல…’சே நானாவது இவனையாவது ‘ என விறைத்தபடி விலகி நின்று கொள்கிறாள் இவள்.

இப்போது பைக்கிலிருந்து டார்ச்சை எடுத்து உயிர்ப்பித்த அவன் அதைப் பிடித்தபடி முன்னால் தடுமாற்றம் இன்றி நடக்க… அந்த பழக்கமற்ற ஏறுமுகமான மலைப் பாங்கான ஒற்றையடிப் பாதையின் சரல் தரையில் இவளுக்குத்தான் செருப்பு சருக்கி…. சருக்கி…..

ஃபர்ஸ்ட் டைம் இவ புதையல் எடுக்க ட்ரைப் பண்ணப்ப….. பதறிப் போய்…. பாய்ந்து வந்து…. “சொன்னேன்ல வினி…...…கேர்ஃபுல்மா….பதறடிச்சுட்டியே” என்றபடி  இவ கூப்டாமலே இவள் கைய பிடிச்சு இவளை காத்தவனை,

அடுத்த தொடர் சருக்கல்களில் நான் புதையல் எடுத்து தந்தே  தீருவேன் என்று இவள் கால்கள் விடாமல் அடம் பிடித்தாலும் தொடாமலே சென்றாள்….அவனும் விடாமலே வந்தான்.

‘சொல்லிட்டு ஹக் பண்ணுனு சொல்லிட்டானே…..எவ்ளவு திமிர் இவனுக்கு….’

 “வினு இனி ரொம்பவே கேர்ஃபுல்லா ஏறனும் வினு…..இதுக்கு மேல போறப்ப சைடு முழுக்க  பள்ளம். அதுல தண்ணியும் இருக்கும்….” அவன் சொன்ன தொனியில்  …..

காலேஜ் டைம்ல போய்ட்டு வந்த கொடைக்கானல் மலையும் அதன் பக்கவாட்டு பள்ளத்தாக்கும்….”இங்க விழுந்தா உடம்பு வைகை டேம்ல தான் கிடைக்குமாம்” என்ற யாரோ சொன்ன சொல்லும் வினிக்கு அதுவாக ஞாபகம் வர

அவ்வளவுதான் அந்த நொடியே “நான் ஹக் பண்றேன் யவி…” அவன் சொன்ன படியே சொல்லிவிட்டே அவனை அணைத்திருந்தாள் நிலவினி. ‘இவ பிடிச்ச வேகத்துல அவன் விழுந்துட்டாலும்தான் போச்சே….. ரெண்டு பேரும் கூண்டோட போய் சேர்ந்துட மாட்டாங்களாமா?’

கிடு கிடுவென உடல் நடுங்க…..வாய் தட் தட் தட தட என தந்தி அடிக்க…..இன்ஸ்டென்டாய் உடல் குளிர்ந்து கொண்டு வர…. கண் திறக்க முடியாதபடி தலை சுற்ற…. “எனக்கு உயரம்னா தலை சுத்தும்” என்று முனங்கினாள்….

இப்போது அவளை மென்மையாய் தன்னோடு சேர்த்து அணைத்திருந்தான் அவன்.

கண்களை இறுக மூடி இருந்தாள் அவள்…உடல் நடுக்கம் மெல்ல அவன் கைகளுக்குள் குறைய தொடங்குகிறது இவளுக்கு.

“நான் ஹக் பண்ணலாம் தானே….தப்பா நினைக்க மாட்டியே?” அவன் தான்.

பதிலென்று எதுவும் சொல்லவில்லை எனினும் அவன் பிடியிலிருந்து வெளியில் வர அவள் நினைக்க கூட இல்லை.

.“இப்ப உனக்கு ஓகேவா வினு ?” சற்று நேரம் கழித்துக் கேட்டான் அவன்

“இல்ல உயரம் போக போக தலைக்கு போற ரத்தம் அளவு குறைஞ்சு தல சுத்தும்னு சொன்னாங்க….எனக்கு கீழ போனாதான் சரி ஆகும்…”

“சே அப்டில்லாம் இல்ல……” மறுத்தான் அவன். அவ்வளவுதான்….தான் நினைத்ததையும் மீறி இப்பொழுது இவள் நெற்றியில் தன் நெற்றி வைத்தான்….

இவள் முதுகுக்குப் பின்னால் இருக்கும் அவன் கையிலிருந்து வெளிப்படும் டார்ச் வெளிச்சம் அவன் முகத்தை இவளுக்கு காட்டிச் செல்லாத போதும்…….இந்த இருட்டு நிலையிலும்…… கண் திறக்கும் போது தன்னை கைகளில் வைத்திருக்கும் கணவனை உணர முடிகிறது வினியால்….. அதுவும் கணவனாக மட்டுமாய் உணர முடிகிறது…..

காரணம் அந்த இருட்டா…இல்லை  இருவருக்கும் உண்மையில் ஒருவர் மேல் ஒருவருக்கு இருந்த காதலா…..அல்லது அனைத்து உரிமையும் தந்திருந்த திருமண பந்தமா…..ஒருவர் அணைப்பில் ஒருவர் உருகிக் கொண்டிருந்த அந்த நிலையா? அல்லது அனைத்துமேயோ…..

வினிக்கு தன்னவன் தன் அதரங்களை கொண்டாட விளைவதை தடுக்க எண்ணமில்லை….. சம்மதமாய் கண் மூடிக் கொண்டாள்….. அவனும் அவளை நோக்கிக் குனிந்தவன் பின் சட்டென விலகி

“இப்ப வேண்டாம் வினு…..உனக்கு பிடிக்காது “ என ஏதோ ஒரு காரணம் சொல்லியபடி அவளை தன் இரு கைகளிலும் அள்ளிக் கொண்டு  அந்த பாதையில் நடக்க தொடங்கினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.