அதே அன்பு திரும்ப வேண்டும் என்ற எண்ணம் வேண்டாம்!!ஏனெனில்,இது.வியாபாரம் அல்ல!!!
சுப தினத்தை குறிக்கும் பொருட்டு வரன் மற்றும் வதுவின் ஜாதகத்தை சுமந்துக்கொண்டு வதுவோடு ஜோதிடரின் இல்லம் நோக்கி பயணப்பட்டார் ஜானகி.
"வாங்க ஜானகிம்மா!வாங்க!உட்காருங்க!"-வரவேற்றார் எண்பது வயது மதிக்கத்தக்க ஒருவர்.
இருவரும் அமர்ந்தனர்.
அந்த இடமே ஒரு தெய்வீகத்தை தாங்கி இருந்தது.
"நம்ம ஆதித்யாக்கு கல்யாணம் பண்ண முடிவு பண்ணி இருக்கேன்!"
"சந்தோஷம்மா!ரொம்ப சந்தோஷம்!"
"அதுக்காக ஜாதக பொருத்தத்தையும்,விவாஹ தேதியையும் குறிக்க வந்தேன்!"
"அதற்கென்ன தாராளமா குறித்து தரேன்!ஜாதகத்தை தாங்கம்மா!"-ஜாதகத்தை வாங்கி ஒப்பிட்டு பார்த்தார்.சோழியை உருட்டி பார்த்தார்.பழம் சுவடிகளை எடுத்து வந்து படித்துப் பார்த்தார்.
யாத்ராவின் மனம் வேகமாக துடித்துக்கொண்டது.
"அம்சமான அமைப்பும்மா! சாட்சாத் அந்த பரமேஷ்வரன் பார்வதி விவாஹ அமைப்பு!"-இதைக்கேட்டதும் அவ்வளவு நேரம் இழுத்து வைத்த மூச்சை வெளிவிட்டாள் யாத்ரா.
"பத்து பொருத்தமும் அமைந்திருக்கு!இது மாதிரி ஒரு பொருத்தத்தை நான் பார்த்தில்லை!!ஆனா..."
"என்னாச்சு ஜோசியரே!!'
"தம்பி ஜாதகத்துல சனி திசை நடக்கிறது!அதனால,கல்யாணத்தை கொஞ்சம் தள்ளிப்போடுங்க!"
"எவ்வளவு நாள்??"
"மூணு மாசம்!மூணு மாசம் திசை கடுமையாக இருக்கு!அதனால,பயப்பட வேண்டாம்!மூன்று மாதம் வாங்க குறித்து தரேன்!"-யாத்ராவின் மனதில் ஒருவித திகில் படர்ந்தது.
"ஐயா!!இதனால்,அவருக்கு ஒன்றும் ஆகாதே?"-கலக்கமாக வெளி வந்த கேள்வி அவள் காதலை கூறாமல் கூறியது!!
அவர் ஆழமாக அவளை பார்த்தார்.
"பயப்பட வேண்டியதில்லைம்மா!! சகலத்தையும் ஆட்சி செய்யுற மகேஷவரனை தினமும் பூஜை செய்து வழிப்படு!!சிவ லிங்கத்தை பூஜை செய்!!மலை போல வந்தது எல்லாம் பனி போல மாயமாகும்!நம்பிக்கை வை!"-அவள் மனதில் ஒரு வித நம்பிக்கை உதித்தது.இருவரும் விடைப்பெற்றனர்.
"சுவாமி!!நீங்க ஏன் நாள் குறித்து தரவில்லை?."-அவர்கள் சென்றதும் வினவினார் ஒருவர்.
"அந்தப் பொண்ணு வாழ்க்கையை கெடுக்க துணிவு இல்லை!!நான் சொன்னது எல்லாம் உண்மை தான்!!ஆனா,தேதி குறிக்காத காரணம் இன்னும் மூன்று மாதத்தில் அந்தப் பையன் உயிரோட இருக்க மாட்டான்!"
"ஏ..லூசு!இதுக்கு ஏன் குழந்தை மாதிரி அழுற?"
"இல்லை ஆதி!பயமா இருக்கு!"
"இதுக்கு தான் நான் எதையும் நம்புறது இல்லை!"
"விளையாடாதே ஆதி!"
"என்னவாம் அந்த ஆளுக்கு?உன்னையும்,அம்மாவையும் பயமுறுத்தி அனுப்பி இருக்கான்!!"
"ஆதி..."
"யாத்ரா!!கம் ஆன்!!எனக்கு ஒன்றும் ஆகாது!பயப்படாதே!வேணும்னா,அவர் ஒரு ரெமிடி ஏதோ சொன்னாரு சொன்னியே!அதை ட்ரை பண்ணு!!இது மாதிரி டென்ஷன் ஆகாதே!"-அவளுக்கும் அது சரி என்றே தோன்றியது.
கண் கட்டிய நேரத்தில் பரம்பொருள் ஒருவனே சரணாகதி அல்லவா!!!!
தொடரும்
{kunena_discuss:969}