சக்தி மயங்கியிருந்தான். பதட்டத்துடன் ஓடிவந்த சுஜயாவைப் பார்த்து
“அம்மா! எந்த பிரச்சினையும் இல்லை. தம்பி அதிர்ச்சியில் மயங்கியிருக்கு. இனிமே அந்த ஆள் பிரச்சினைக்கு வரமாட்டான். நீங்க கவலைப்படாதீங்க.”
அவனைப் பார்த்த அனைவருக்குமே அதிர்ச்சிதான். ஆங்காங்கு ரத்தக்காயத்துடன் நின்றிருந்தான். ருத்ரதேவன் ஓடிப்போய் முதலுதவிப் பெட்டியை எடுத்துக்கொண்டு வந்து அவன் காயத்தை சுத்தம் செய்து மருந்திட்டான்.
“ஐயோ! சார். இதெல்லாம் போய் நீங்க செஞ்சுக்கிட்டு?” தயக்கமுடன் சொன்னான்.
“ஏன் செய்தால் என்ன?”
“நீங்க எங்க வீட்டு மாப்பிள்ளையாகப் போறவர். எங்க சிந்தும்மாவைக் கல்யாணம் செய்துக்கப்போறவர்.”
“அதனால் என்ன கண்ணா? நீங்க என் குடும்பத்தில் ஒருத
...
This story is now available on Chillzee KiMo.
...
ுமா.”
“எனக்கு அப்பாவும் வேணும். அம்மாவும் வேணும் ஆன்ட்டி. ஆனால் அம்மாதான் சாமிக்கிட்ட போயிட்டாங்களே. நான் கூப்பிட்டா வரமாட்டேங்கிறாங்களே.” ஏக்கமுடன் சொன்னது குழந்தை.
“உன் அம்மா சாமிக்கிட்ட போய் என் சுஜாக்குட்டிக்கு இன்னொரு புது அம்மாவைக் கொடுன்னு கேட்டாங்களாம். உனக்கு வேணுமா?”