“ஆமாம் வேணும். எனக்கு அம்மா மாதிரி முடியெல்லாம் வளர்க்கனும். அதை அம்மாகிட்ட சொன்னேன். அதுக்காகதான் அவங்க சாமிக்கிட்ட எனக்கு புது அம்மாவை வரச்சொல்லியிருப்பாங்களோ?”
“ஆமாடா கண்ணா. இப்ப போய் நீ விளையாடு.”
அவள் ஓடிவிட்டாள்.
“பார்த்தீங்களா? அந்த குழந்தை மனதில் ஏக்கம் இருக்கு. அவ சந்தோசத்துக்காகவாவது நீங்க கல்யாணம் பண்ணிக்கனும். வெண்ணிலா ரொம்ப நல்ல பொண்ணு. நீங்க இப்ப மறுத்தீங்கன்னா அவளால் பேச முடியாததால்தான் அவளை மறுத்திட்டீங்கன்னு நினைச்சு வாழ்க்கையை வெறுத்திடுவா.”
“என்னைக் கல்யாணம் செய்துக்கச்சொல்லிட்டு நீங்க என்ன பண்ணப்போறீங்க?”
“நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன். எனக்கு திருமண வாழ்க்கையில் ஈடுபாடு கிடையாது.”
அப்போது மட்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
ான் பார்த்துக்கறேன்யா.”
அவனிடத்தில் கொஞ்சம் சலனம் வந்தது.
“அம்மா! நீங்க சொல்லுங்கம்மா. நீங்க சொன்னாதான் கேட்பார்ம்மா.”
சுஜயா கண்ணன் அருகில் வந்தாள். காலில் விழுவதே பிடிக்காத அவள் அவன் காலடியில் மண்டியிட்டாள். அவன் பதறி விலகினான்.
“அம்மா! என்ன காரியம் பண்றீங்க?”