(Reading time: 10 - 20 minutes)

" ன்னடா , பிச்சை கேட்குற மாதிரி கெஞ்சுறானே  அல்லது  வற்புறுத்துறானேன்னு நினைக்காதே !"

" .."

" ஒரு உறவை வேணாம்னு தூக்கி வீசிட்டு போறது ரொம்ப சுலபம் .. ஆனா அதே உறவை மீண்டும் பெறுவதோ , அல்லது இன்னொருத்தர் மூலமாய் அந்த அன்பை பெறுவதோ நடக்காத காரியம் .. ஒரு துளி விஷயத்தை பாலில் கலந்த மாதிரி , உன் கோபத்துல நம்ம உறவை மொத்தமாய் தூக்கி எறியாதே !"

".."

"இது என்னோட கோரிக்கை தான் ..கட்டளை இல்ல .. சாரி .. அம்மா உள்ளத்தான் இருக்காங்க ..போயி பாரு " என்றவன் அவள் கைகளை விடுவித்து விட்டு விடுவிடுவென நடந்தான் ..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

சித்ராவின் "நெஞ்சோரமா என் நெஞ்சோரமா..." - காதல் கலந்த குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்...

தீரஜின் அன்னையை பார்க்கும் தைரியம் தனக்கு இப்போது இருக்கிறதா ? புரியவில்லை அவளுக்கு .. தான் நினைத்தது என்ன ? இங்கு நடந்தது என்ன ? தலை லேசாய் வலிக்கவும் , வந்த வழியே திரும்பி சென்றிருந்தாள்  தீப்தி .. அவள் வெளியேறுவதை பார்த்த தீரஜ் , சில நிமிடங்களில் காரை எடுத்து கொண்டு சாலையில் அவளை சந்தித்தான் ..

" தீபா "

".."

"தீப்தி ... காரில் ஏறு .. நான் உன்னை பத்திரமா விட்டுட்டு போறேன் "

" வேணாம் "

" ப்ளிஸ் தீப்தி "

" முடியாது "

" உன் மேல சத்தியம் .. நீயா என்னை வான்நு கூப்பிடுற வரைக்கும் நானாக வந்து உன்னை தொல்லை பண்ண மாட்டேன் .. இதுதான் கடைசி ..போதுமா வா ?"

கேள்வி தந்தவனே பதிலும் தந்தது போல , அவளுக்கு என்ன தேவையோ அது அவன் வாயாலேயே வந்தது .. இப்போது இருக்கும் மனநிலையில் அவளால் சண்டை போடவும் முடியவில்லை .. அதே நேரம் மன்னிக்கவும் முடியவில்லை .. இப்போதைக்கு அவன் அவளது கண்களில் படாமல் இருந்தாலே போதும் என்று அவள் நினைக்க அதையும் தீரஜே கூறி இருந்தான் .. ஒரு விஷயத்தை மட்டும் நன்கு உணர்ந்தாள்  தீப்தி ..தீரஜ் அவளை பற்றி நன்றாய் தெரிந்து வைத்திருக்கிறான் ..

பதில் ஏதும் பேசாமல் காரில் ஏறி கொண்டாள் ..அதுவே அவனின் வார்த்தைக்கு அவள் கூறும் சம்மதம் என்று புரிந்து கொண்டான் தீரஜ் ..

" போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி .. காதலா ஐ லவ் யூ என்று சொன்னால் பொன்மணி ..

இதுதான் காதல் எக்ஸ்பிரஸ் " துள்ளலுடன் பாடி கொண்டிருந்தான் கவீன் ..

" என்ன தல ஒரு வாரமாய் செம்ம குஷி தான் .. நம்ம நீலாம்பரி கூட இப்போ எல்லாம் ரொம்ப ராசி ஆகிட்ட போல " என்றான் அருண் ..

" அதை ஏன் மச்சி கேட்குற ? ஒரு பக்கம் தீப்தி , ஒரு பக்கம் ஜெனின்னு சார் அப்படியே திருப்பரங்குன்றம் முருகர் மாதிரி சுத்திட்டு இருக்கான் " என்றான் செல்வம் ..

" டேய் அடங்குங்க டா .. நானே என்னைக்காச்சும் தான் சந்தோஷமா இருக்கேன் ..அது பொறுக்கலையா உனக்கு ?" என்றான் கவீன்  .

" என்னமோ நடக்குது தல ..ஆனா நீ சொல்ல மாட்டுற  ?"

" ஏன்டா கவீன்  இன்னுமாடா இந்த உலகம் நம்மள நம்புது ?" என்று சிரித்து கொண்டான் கவீன் ..

சந்துருவின் வீட்டில் ,

தனது துணி மணிகளை பெட்டியில் வைத்தபடி ஹாலில் இருக்கும் மகனிடம் குரல் கொடுத்தார் நளினி ..

" சந்துரு "

" என்னம்மா ?"

" நீயும் உங்கப்பாவும் கிளம்பலயா ?"

" எங்க ?"

" ஊருக்கு டா ?"

" யாரு ஊருக்கு ?" என்று கர்ஜித்தார் ஞானப்ரகாஷ் ..

" எங்க ஊருக்குத்தான் " என்று உடனே பதில் வந்தது ..

" போகலாம் அப்பா " என்றான் சந்துரு இடைபுகுந்து .

" என்னடா , அன்னைக்குத்தான் ஏதோ  , நான் உங்க புள்ளப்பான்னு  வசனம் பேசின ? இப்போ என்ன ஆச்சு ?"

" இப்பவும் அதேதான் சொல்லுறேன் .. கொஞ்சம் திருப்பி கொடுக்க வேண்டிய கணக்கு பாக்கி இருக்கு .. சோ போகலாம் " என்றான் சந்துரு .

" என்னால முடியாது "

" அப்பா , உங்களுக்காக நான் உங்க பேச்சை கேட்குற மாதிரி , எனக்காக ஒரு தடவை  வாங்க ... உங்களுக்கு பிடிக்காதது எதுவும் அங்க நடக்காது" என்றான் ..

அவரும் பதில் பேசாமல் தொலை குலுக்கி கொண்டார் .. அடுத்த சில நிமிடங்களிலேயே சந்துருவும் ஊருக்கு வருகிறான் என்ற செய்தி நந்துவை அடைந்தது ..

" பிரபு அத்தான் .. ஒரு வாரமாய் என்கிட்டே பேசாமல் கண்ணாமூச்சி ஆடுறிங்களா  ? ஊருக்கு வாங்க ..உங்களை படுத்தி எடுக்குறேன் " என்று தனக்குள் பேசி கொண்டாள்  நந்திதா .. தானே பாடாய் படபோவது தெரியாமல் .. !

Go to நினைத்தாலே  இனிக்கும் episode # 31

Go to நினைத்தாலே  இனிக்கும் episode # 33

நினைவுகள் தொடரும்...

Buvaneswari is continuing the story from where it was let off... Appreciate your comments but no comparisons between the three writers please...

{kunena_discuss:677}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.