(Reading time: 21 - 41 minutes)

19. மனம் கொய்தாய் மனோஹரி - அன்னா ஸ்வீட்டி

Manam koithaai Manohari

னோ தான் இப்படி ஒரு சூழ்நிலையில் வந்து நிற்க வேண்டி இருக்கும் என நிச்சயமாய் எதிர்பார்த்திருக்கவில்லை…… ஆம் மித்ரன் அவளை அவனது அம்மா வீட்டில் விட்டுவிட்டு ஸ்விஸ் கிளம்பினான்…..

அதில் கொடுமை என்னவென்றால் அந்த முடிவில் மித்ரனுக்கோ இவளுக்கோ ஏன் இவளது மாமியார் களஞ்சியம் நாத்தனார் இன்பா உட்பட யாருக்குமேகூட சம்மதமுமில்லை விருப்பமுமில்லை என்பதுதான்.

பயோசி சீஃப்ஃபிற்கு கம்பெனி ரூல் படி மித்ரனின் அம்மா வீடு இருந்த அந்த அகாபே காம்பஸிற்குள் உள்ள ஒரு வீடு அலாட் செய்யப்பட்டிருந்தது…..கம்பெனி ரகசியம் வெளியே போகாமலிருப்பதற்காகவும்….பாதுகாப்பு நிமித்தமும் இப்படி ஒரு ஏற்பாடாம்….. ஆக இவள் அங்கிருந்த வீடுகளில் ஒன்றில் தங்கி ஆக வேண்டுமாம்….

இது பதவி ஏற்ற பின்தான் கட்டாயம் என்றாலும்…..எப்படியும் மித்ரன் ஸ்விஸில் இருந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்று உறுதியாய் தெரியாத நிலையில்….இவள் சில தினங்களில் கூட பதவி ஏற்கும் நிலை இருக்கும் பட்டச்சத்தில்…. அவள் இப்போதிருந்தே இங்கு தங்கட்டும் எனதான் எல்லோருக்கும் நினைக்க தோன்றியது….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

புவனேஸ்வரியின் "நினைத்தாலே இனிக்கும்..." - கல்லூரி காதல் கதை...

படிக்க தவறாதீர்கள்...

இடைப்பட்ட ரெண்டு மூன்று நாள் அவள் தன் பெற்றோர் வீட்டிலோ….அல்லது மித்ரனின் அப்பார்ட்மென்டிலோ தங்கலாம்தான்…அதற்கு மித்ரன் தேவையான பாதுகாப்பு ஏற்பாடு செய்து தரவும் தயாராகத்தான் இருந்தான். ஆனால் இரண்டு மூன்று நாளுக்காக அவனை எத்தனை அலைகழிக்க என மனோதான் மறுத்துவிட்டாள்.

அவன் இன்று நைட் ஃப்ளைட்டுக்கு கிளம்பும் முன்னால் இதை செய்து தர வேண்டும் என்றால் அவனை அலைகழிப்பதாக தானே அது இருக்கும்….

அவளுக்குள் இருந்த உறுத்தல்வேறு அவனிடம் எதையும் இந்தவிஷயத்தில் எதிர்பார்க்கவே இவளை தடை செய்தது. இவள் ஒன்றும் பயோசி சி இ ஓ ஆக வேண்டும் என்ற லட்ச்சியத்தில் இந்த பதவியை ஏற்கவில்லையே…..ஏதோ மித்ரன் சொன்னதுக்கு எதுத்து சொல்லனும்ன்ற ஒரு கோபத்தில் அல்லவா இந்த பதவியை இவள் ஏற்பது…. அவள் மனசுக்கு அது தெரியும்தானே…..

ஏன் இவள் கண் அசைவை வைத்து இவள் மனதை படிப்பவன் இவள் கணவன்….அவனுக்கும் இவள் எதற்கு இந்த முடிவுக்கு வந்தாள் என தெரிந்துதான் இருக்கும் என்பது நிச்சயம்……ஆனால் அவன் இது சம்பந்தமாக இவளிடம் எதுவுமே பேசவில்லை….அதுவேறு இன்னுமாய் இவளை தாக்கியது…..ஆக அவனிடம் வேறு எதையும் எதிர்பார்க்க இவளுக்கு மனமில்லை……

அம்மா வீட்டில் போய் அகதன் கல்யாணம் வரை இருக்கலாம் என ஸ்விஸ் வர மாட்டேன் என முதலில் சொல்லிய போது இவள் நினைத்தாள்தான்….. இப்போது நினைத்துப்பார்த்தால்…. ஏன் ஸ்விஸ் போகலைனு அம்மா அப்பா கேள்வி கேட்பாங்களே…அதற்கு எந்த உண்மையை பதிலாக சொல்ல என இவளுக்கு தெரியவில்லை…..

அங்கு யாரும் இவள்மேல் பாய்ந்து விழுந்து பரண்டப்போவதெல்லாம் இல்லைதான்……ஆனால் நிச்சயமாய் ஒரு வருத்தம் தோன்றும் அவர்களுக்கு…..அதுக்கு இங்கயே இருந்துடலாம் என தோன்றிவிட்டது இவளுக்கு…. எப்படியும் இவ இங்க மித்ரனோட வீட்ல இருக்கா….. முடிஞ்சவரை அவங்க கூட சமாதானமா இருமா என சொன்ன அம்மாவுக்கு இது கொஞ்சமாவது நல்ல விஷயமாகத் தோன்றலாம்.

இது எல்லாவற்றையும் யோசிக்க முடிந்தாலும் மனோவால் தன் முடிவை மாற்றிக் கொண்டு பயோசி வேண்டாம் நான் ஸ்விஸ் வர்றேன் என மித்ரனிடம் சொல்ல இயலவில்லை…

மித்ரனுமே மனோகரியின் மனதில் என்ன ஓடுகிறது என அறிந்திருந்தான் தான்….. அவள் ஏன் ஸ்விஸ் வர மறுக்கிறாள்…ஏன் இந்த சி இ ஓ பதவியை ஏற்க போகிறாள் என்று அவனுக்கும் புரிகிறதுதான்…..ஆனால் இதையெல்லாம் அவன் அவளுக்கு புரிய வைக்க முனைந்தால் அவள் இன்னுமாய் எதிர்மறையாய் எதையாவது சொல்லக் கூடுமே தவிர வேறு ப்ரயோஜனம் இருக்காது என்பதால் அவள் விருப்பத்திற்கே விட்டுக் கொடுத்தான் அவன்..…

கொஞ்சம் கொஞ்சமாக இவனுக்கு அவள் மீதுள்ள அன்பை… அதன் ஆழ அகலத்தை….. இவனுக்கு அவளை வருத்தும் எண்ணம் எதுவுமே கிடையாது என்ற உண்மையை அவள் உணர்வளவில் புரிந்து உணர்ந்து கொள்ளும் போது அவள் மனம் சமநிலைப் பட்டுவிடும் என நம்பினான் அவன்.

ஆக அவள் முடிவை மறுக்க கூடாது என்ற ஒரே காரணத்துக்காக அவனே தங்க விரும்பாத அவன் தாய் வீட்டில் அவள் தங்க அனுமதித்தான்.

இன்பாவுக்கு மனோ மித்ரனுடன் ஸ்விஸ் செல்லவில்லை என்பது மிகவும் வருத்தம் அளித்தது. தம்பதியராய் இவர்கள் இருவரும் ஹனிமூன் செல்கிறார்கள் என அவள் நினைத்துக் கொண்டிருக்க…..அதில் மனோ மட்டும் இங்கே தங்குவது என்றானால் அதை எப்படி எடுக்க என தெரியவில்லை அவளுக்கு….

மித்ரனுக்கும் மனோவுக்கும் இடையில் ஏதோ ப்ரச்சனையோ என யோசிக்க தோன்றுகிறது தானே…..

ஆனால் இந்தியா வந்த பின்னும் இத்தனை காலம் தான் எங்கு இருக்கிறேன் என்று கூட தகவல் தராத மித்ரன்… அதிசயத்திலும் அதிசயமாக தன் மனைவியை இங்கு தன் வீட்டில் தங்க வைக்கும் போது அதை மறுத்து ஒரு வார்த்தை சொல்ல அவளுக்கு விருப்பம் இல்லை….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.