(Reading time: 21 - 41 minutes)

வெண் நிற டிசைனர் சாரியில்…ப்ரவ்ன் நிறத்தில் குட்டி குட்டி இலைகள் டிசைன் செய்யப்பட்டிருக்க……அதனோடு வெள்ளை கற்களும் பதிக்கப் பட்டிருக்க…. ஒற்றை முந்தியிட்டு உடுத்தியிருந்த புடவை முந்தியை க்ளீட்ச்சோடு சேர்த்து ஒரு கையில் பிடித்தபடி…. முன் நெற்றியை வெட்டி விடப்பட்ட குட்டை முடிகள் மறைத்திருக்க….. முன் தலையில் சற்று பன் போல் மேடிட்டு உயர்த்திப் போட்டிருந்த கொண்டையோடு சற்று துள்ளுவது போன்ற ஒரு நடை பாவத்துடன் பாய்ண்டட் ஹீல்ஃஸ் ஒலியோடு வந்தாள் அவள்…. பார்க்க நடிகை சமந்தா போல் ஒரு சாயல்….

ஒரு வார்த்தை இன்றி அவள் கொழுத்த பணக்காரி என அறிவித்தது ஏதோ ஒன்று…..

ஒரு நொடி கர்வமும் அலட்சியமுமாய் இவள் மீது பார்வை சிந்தியவள்…. “ஏன் இப்டி செய்துட்டீங்க ஆன்டி…..எதுனாலும் என்ட்ட சொல்லிருக்கலாம்ல……அப்பா என்ன தப்பா செய்துட்டாங்கன்னு இப்டி அரெஸ்ட் செய்ய வச்சுட்டீங்க…. நீங்க எதுக்கு மனு என்ன மேரேஜ் செய்யனும்னு நினச்சீங்க……நான் ஒரே பொண்ணு அப்போ என் சொத்தெல்லாம் அவருக்கு வரும்னுதானே…….அதே இத என் அப்பா நினச்சாமட்டும் தப்பா….?” என களஞ்சியத்தைப் பார்த்து கேட்டாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

மனோஹரியின் "காதல் பின்னது உலகு" - கல்யாணமாம் கல்யாணம்…

படிக்க தவறாதீர்கள்...

‘அப்பா என்ன தப்பு செய்தாங்களாவா? அதோட கொலை செய்ய நினச்சதுலாம் கணக்குல வராதா இவளுக்கு…’ இப்டில்லாம் தோணுறதுக்கும் முன்னமே அவளது மனு என்ற வார்த்தையில் சுர் என ஏறுகிறது மிளகாய் காரம் மனோவினுள்…

இதற்குள் இவள் புறம் திரும்பியவள்

“ம்…..அவன் உன்ன அடச்சு வச்சு மிரட்டி கல்யாணம் பண்ற அளவுக்கு உன்ட்ட என்ன இருக்குன்னு பார்க்கதான் வந்தேன்….” இவள் மீது பார்வை ஓட்டியபடி சொன்னவள்….

“பாவம்தான் நீ……ஆனாலும் இப்ப பணத்த பார்க்கவும் எல்லாம் சரின்னு தோணிருக்குமே உனக்கு….. பைதவே…..உன்ன நான் மன்னிச்சுட்டேன்தான்……ஆனா உன்ன கல்யாணம் செய்துருக்கானே அவனுக்கு என் கையாலதான் சாவு….” சொல்லிவிட்டு கட கடவென் சென்றுவிட்டாள்…

“ஏய் என்ன பேசுற நீ..? தார்க்கி……தார்க்கிகா…” களஞ்சியத்தின் இந்த வார்த்தைகளை கண்டு கொள்ளாமல் போயிருந்தாள் அவள்.

அன்று மனோ இந்த மிரட்டலை பெரிதாக கண்டு கொள்ளவில்லை தான்…. என்னதான் கோபமா பேசினாலும் அந்த தார்க்கிகா குரல்ல இல்லாம போயிருந்தா ஆளுமையா……டிடர்மினேஷனா….. ஏதோ ஒன்னு ரொம்ப ஈசியாவே இந்த தார்க்கிகாவின் வார்த்தைகளை அலட்சியபடுத்த வைத்தது மனோகரியை…….. ஆனால் எல்லாம் மித்ரன் ஆபத்தில் மாட்டிக் கொள்ளும் வரைக்கும் தான்.

Episode # 18

Episode # 20

தொடரும்!

{kunena_discuss:928}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.