இதற்கு இடையில் வர்ஷன் சம்மதம் இருந்தால் மட்டுமே இவள் சி ஈ ஓ பதவி ஏற்க முடியும் என்பதால் அதற்கு தேவையானவைகளை அவனுக்கு மெயில் செய்துவிட்டதாக சொன்னாள் இன்பா.
கொஞ்சம் என்ன ரொம்பவே ஒரு மாதிரி இருந்தது இவளுக்கு….பதவியில் இருக்கும் ஒரு நபரை நீ எனக்காக பதவி விலகிக் கொள் என்று சொல்வதல்லவா இது…..
இத்தனைக்கும் வர்ஷன் தன் மனைவிக்காக ஆரம்பித்த ஒன்று…..அங்கு விஜிலா இவள் வீட்டில் இருக்க….இங்கு இவள் அவளுக்கான பதவியிலா???
அவள் மனதை உணர்ந்தவள் போல் இன்பாதான் எடுத்துச் சொன்னாள்…..
ஆனால் பேச ஆரம்பிக்கும் முன் சுற்று முற்றும் பார்த்தாள்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சித்ராவின் "நெஞ்சோரமா என் நெஞ்சோரமா..." - காதல் கலந்த குடும்பக் கதை...
படிக்க தவறாதீர்கள்...
அப்போது இவர்கள் இவளுக்காக கொடுக்கப் பட்டிருக்கும் வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்…… இவளை ஒரு தலையசைப்பில் தன்னோடு வரும்படி அருகிலிருந்த ஒரு அறைக்கு அழைத்துச் சென்ற இன்பா……அந்த அறையின் கதவை பூட்டி….ஜன்னல்கள் எல்லாம் பூட்டி இருக்கிறதா என பரிசோதித்துவிட்டு பின் விஷயத்தை விளக்கினாள்….
“நீயே பாரு மனோ…..மித்ரன்ட்ட பயோசிய பாருன்னு வரைக்கும் சொல்லிட்டு போய்ருக்கான் வர்ஷன்…..அத்தனை நம்பிக்கை அவன் மேல……ஆனா அவன் மேரெஜ்கு கூட இவன் வரலை….அத்தனை பிஃஸி…. இவ்ளவு ஏன் விஜி அண்ணினா வர்ஷன் உயிரா இருப்பான்…..அவங்க இவனுக்காக எல்லா சொந்தத்தையும் விட்டுட்டு வந்து கல்யாணம் செய்தாங்க….சும்மாவே அவங்கன்னா இஷ்டம்…..கல்யாணத்துக்குப் பிறகு பிறந்த வீட்டை தேடிடக் கூடாதுன்னு அப்டி கவனிச்சுப்பான் அண்ணிய….. அப்படிபட்டவன் அவங்க டெலிவரிக்கு கூட வரலை…..அதவிட இப்போ அண்ணி டிவோர்ஸ்னு வீட்டைவிட்டு போயாச்சு……அதுக்கு கூட வரலை…… ஃபோன்ல கூட பேசுறதும் இல்ல….மெயில் வழியாதான் கரஃஸ்பான்டஸ் எல்லாம்….அவன் அங்க என்ன விஷயத்துல இப்டி பிஃஸியா இருக்கான்னு சரியா தெரியலை….. ஆனா கண்டிப்பா அவனுக்கு ஹெல்ப் வேணும்….. அப்பதான் அவனுக்கு அவன் குடும்பத்த பார்க்க டைம் கிடைக்கும்….. நீ ஒரு மேரேஜ சேவ் பண்ற மனோ….”
இதைக் கேட்கும் போது மனோவுக்கு இவள் சி இ ஓ வாக ஜாய்ன் செய்வதைவிடவும் ரொம்பவும் குழப்புகிறது வர்ஷனின் நிலை….அப்படி என்ன பிஃஸினஸா இருக்க முடியும்…..வைஃப கூட பார்க்க வராம? பிஸினஸுக்காக வைஃப விடுறதுன்னா…..? சரியா படலையே……விஜிலா நினைக்கிற மாதிரி வர்ஷன்ட்ட ஏதும் தப்பு இருக்குதோ? இல்லனா அந்த மாசிரனோட கை இதுல எதுவும் இருக்குமா?’
இவள் முகம் பார்த்து இன்பாவே பதில் தந்தாள்.……
“அது….” இன்பா சொல்ல சங்கடப் படுகிறாங்களா…சரியான வார்த்தை தேடுறாங்களா?...ஆனால் எதனாலும் விஷயம் நிச்சயம் சின்னது இல்ல…..
“நேஷன் க்ரூப்ஸ் ஃபினான்ஸ் பத்தி டீடெய்லா சொல்றப்ப உனக்கே புரியும் மனோ…..அது சம்பந்தமாதான் வர்ஷன் எதுவும் செய்துட்டு இருப்பான்றது என் கெஸ்….. எனக்கு இது இப்போ தார்கிகா அப்பா அரெஸ்ட்க்கு பிறகுதான் தெரியும்….. தார்க்கி அப்பா ப்ளான் செய்து ஃஸ்டெப் பை ஃஸ்டெப்பா மித்ரன் பேர்ல இருக்ற பிஸினஸோட வருமானத்தை எல்லாம்….என் பேர்லயும் வர்ஷன் பேர்லயும் இருக்ற பிஸினஸுக்கு கடனா கொடுத்த மாதிரி செய்துறுக்காங்க….. இப்ப இருக்ற நிலையில எங்க ரெண்டு பேரோட பங்கும் மித்ரன்ட்ட அடமானத்துல இருக்ற மாதிரி நிலைனு வச்சுகோயேன்….. மித்ரன் நினச்சா கடனை காமிச்சு எல்லாத்தையும் எடுத்துக்கலாம்…. இப்போதான் அது மித்ரன் பங்குல இருந்து வந்த கடன்னு தெரியும்…..முன்ன வர்ஷனுக்கு இது தெரிஞ்சு இருக்காது இல்லையா….அவன் மொத்த நேஷன் க்ரூப்பும் அளவுக்கு மீறி கடன்ல இருக்குன்னு புரிஞ்சுகிட்டாலும் புரிஞ்சுறுப்பான்….. அது சம்பந்தமா எதாவது செய்வான்றது என் யூகம்….மொத்த கம்பெனியும் பேங்கரப்ட் ஆகிடுமோன்ற நிலையில இருந்தா விஜி அண்ணிக்காக கூட அதை காப்பாத்த தானே அவன் ட்ரைப் பண்ணுவான்…..அண்ணிட்டயும் கன்சீவா இருக்றதால விஷயத்தை சொல்லியிருக்க மாட்டானா இருக்கலாம்…..அவங்களுக்கும் தாங்க முடியனுமில்லையா…..எங்க யார்ட்ட டச்ல இருந்தாலும் இதை எப்டி சொல்லன்னு நினச்சானோ….இல்லை எங்க வழியா அண்ணிக்கு போயிடும்னு நினச்சானோ தெரியலை…..அது கொஞ்சம் புரியலை தான்…..பட் இது தான் விஷயமா இருக்கும்….”
இன்பாவின் இந்த பதிலில் ஆடித்தான் போனாள் மனோ…..எத்தனை எளிதாக இதை இவளிடம் சொல்லிவிட்டாள் இந்த இன்பா…. இன்பாவாக சொல்லாத வரை இங்கிருந்து வரும் பண விஷயங்களில் ஈடுபாடு காட்டாத மித்ரன் என்று இந்த விஷயங்களை தேடி துருவி கண்டு பிடிக்க….? என்ன ஒரு நம்பிக்கை நேற்று வந்த இவள் மீதும்????
வாய் திறந்து கேட்டேவிட்டாள் இவள்….
“என்ன நம்பிக்கையில இன்னைக்கு வந்த என்ட்ட இதெல்லாம் சொல்றீங்க அண்ணி…?” காட்டப்படாத பதற்றமும் தவிப்பும்….. கண்டு கொள்ளதக்க அசௌகரியமும் கலந்த குரலில் இவள் கேட்க…
இன்பாவிடம் சின்னதாக புன்னகை….. “என்ன நம்பிக்கையில இந்த வீட்ல நீ தங்கின மனோ…..? நியாயப்படி என்னையும் அம்மாவையும் வில்லி ரேஞ்சுக்கு நினைக்கனும் நீ…..”
விக்கித்துதான் போனாள் இவள்…..