(Reading time: 13 - 25 minutes)

னால் நீங்கள் வரவில்லையே.. நிச்சயத்தின் போதுத்தான் ஏதோ நடந்து விட்டது. இப்போ கல்யாணத்திலும் என்றால் எங்களால் தாங்க முடியவில்லை.. நீங்கள் முதலில் சொன்னது போல் நாங்கள் இருவரும் கொஞ்சம் பொறுமையாக இருந்திருந்தால், இந்த கல்யாணம் நடந்திருக்காது. நாங்கள் பேச போய்தான் நீங்கள் எங்களுக்காக அப்பாவிடம் பேசி இந்த திருமணம் ஏற்பாடு செய்தீர்கள். நாங்க அன்றைக்கு பேசாமல் இருந்திருந்தால் இவ்ளோ பிரச்சினை ஏற்பட்டிருக்காது இல்லயா ?”

“ஹேய்.. லூஸ் மாதிரி பேசாதீங்க... மண்டபத்திற்கு எல்லாரும் வந்திருப்பாங்க.. யாரு காதிலேயவது விழுந்தா என்ன நினைபாங்க...? தேவையில்லாத பிரச்சினை உண்டாக்கதீங்க? நான் இன்னிக்கு இல்லாட்டாலும் நாளைக்கு எப்படியாவது வரேன்.. அமைதியா இருங்க..”

“சரி.. மாமா கிளம்பிட்டாங்களா? “

“அது.. “ என்று இழுத்தவள்.. இப்போ அவர் லைன் கிடைக்கலைன்னு இன்னும் அழ ஆரம்பிப்பார்கள் என்று எண்ணியவளாக, “மாமாவிற்கு இந்த டென்ஷன் லே பேசலமா.. அதோட அவர் travel லே இருக்கும் போது அவரை டென்ஷன் குடுக்க வேண்டாம்ன்னு நானும் அவாய்ட் பண்ணிட்டேன்..”

“என்னக்கா .. இப்போ  நீயும் இங்கே இல்ல.. மாமாவும் இல்ல.. எங்களுக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா..?”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

RRன் "மலரே ஒரு வார்த்தை பேசு.... இப்படிக்கு பூங்காற்று...!" - மனம் மயக்கும் மெல்லிய காதல் கலந்த குடும்ப கதை...

படிக்க தவறாதீர்கள்...

“ஒரு கஷ்டமும் கிடையாது.. என் சார்பில் உங்கள கவனிசிக்கதான் ப்ரியாவ அனுப்புயிருக்கேன் .. இப்போ வருவா..” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போது கதவை திறந்து கொண்டு பிரியா வர, இவர்கள் இருவரும் சிரித்துக் கொண்டே “அக்கா.. உன்னோட substitude வந்தாச்சு.. “ என்றார்கள்..

அவர்கள் இருவரையும் காதோடு சேர்த்து பிடித்தவள், “ஏய்.. வாலுங்களா.. உங்க அக்காவா நின்னு ரெண்டு பேரயையும் கரையேத்தாலம் ன்னு ..என் லீவ் தியாகம் செஞ்சு வந்தா.. ரெண்டு பேரும் என்னை கிண்டலா பண்றீங்க.. ? இதுக்கு உங்க அக்கா அந்த நல்லவளும் கூட்டா..?” என்று அடிக்க வர ..

அவர்கள் இருவரும் “எஸ்கேப்” என்று விட்டு உள்ளே சென்றார்கள்.

போன் பிரியா கைக்கு வந்திருக்க ப்ரயு “தேங்க்ஸ் டி.. ரொம்ப disturb டா இருந்தது.. நீ வந்ததுக்கு அப்புறம் .. ப்ரீயா இருக்கு.. “ எனவும்,

“அதை விடு.. நீ அங்கே பார்த்துக்கோ .. நான் இங்கே ரெண்டு பேரயும் பார்த்துக்கறேன்..” என்று முடித்தாள்..

அதன் பிறகு சற்று நிம்மதியாக மூச்சு விட்டவள், தன் கணவன் பற்றிய கவலை சேர, மீண்டும் அவன் நம்பர் கிடைக்கவில்லை.

நல்ல வேளை.. அவளிடம் அவன் flight பற்றிய விவரங்கள் மெயிலில் இருந்தது நினைவிற்கு வர, அவள் வேகமாக அலுவலக பகுதிக்கு சென்று செக் செய்த போதுத்தான் .. அங்கே flight கான்செல் ஆன விவரம் தெரிந்தது. அங்கே உள்ள நிலவரமும் தெரிய, அவள் கண்களில் கண்ணீர் வந்தது,

இந்த முறை அவனின் பத்திரம் பற்றிய விவரங்கள் , அவர்கள் லோக்கல் ஆபீஸ் மூலம் இவளுக்கு தெரியபடுத்திருந்தனர். சற்று நேரம் அங்கேயே அமர்ந்து தன்னை ஆசுவாசபடுத்தியவள் , பின்னர் வித்யா இருக்குமிடம் சென்று சேர்ந்தாள்.

வித்யாவை வாடிற்கு மாற்றியிருக்க, குழந்தையையும், அவள் அம்மாவையும் பார்த்துக் கொண்டு அவள் மாமியார் இருந்தார்.

அவரிடம் வித்யா கணவன், ஆதி பற்றிய விவரம் சொல்லிவிட்டு, அவருக்கு சாப்பிடவும், வித்யாவிற்கு குடிக்கவும் எல்லாம் வாங்கி வர சென்றாள்.

அவள் திரும்பி வரும்போது வித்யா வீட்டினர் வந்திருக்க, அவர்கள் வரும் வழியில் ஒரு ஸ்வீட் , ஏன் சாக்லேட் கூட வாங்கி வரவில்லை. இத்தனைக்கும் அவள் குழந்தை பிறந்த உடன் தகவல் செய்திருந்தாள். இவள் இப்போது வாங்கி வந்ததை எல்லோர்க்கும் கொடுத்தனர்.

ப்ரயு இவ்வளவுதான் இவர்கள் என்று எண்ணியவளாய், மெதுவாக தன் மாமியாரிடம் தங்கைகள் திருமணத்திற்கு செல்வதை பற்றி கேட்க,

“நீ சாயங்காலம் reception அட்டென்ட் பண்ணி விட்டு வா ப்ரயு.. நானும் சம்பந்தி அம்மாவும் வித்யாவை பார்த்துக் கொள்கிறோம்” என்றார்.

இதை கேட்ட வித்யா மாமியார் “இல்ல சம்பந்தி .. நான் ரெண்டு நாள் அலைச்சலில் மிகவும் களைத்து விட்டேன்.. பிரஷர் வேற இருக்கும் போலே இருக்கு. நான் வீட்டிற்கு போய் ரெஸ்ட் எடுத்து விட்டு, நாளை காலை கல்யாணத்திலும் தலையை காட்டி விட்டு வருகிறேன்” என்று கிளம்பியே விட்டார்.

பிரயுவும், அவள் மாமியாரும் செய்வது அறியாது முழித்தனர். வித்யாவோ தூங்கி கொண்டிருக்க , அவள் கணவனோ நான் அம்மாவை கொண்டு விட்டு வருகிறேன் என்று கிளம்பி விட்டார்.

பிரயுவிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. இப்போ வேலை இல்லை என்றாலும், தன் மாமியாரை மட்டும் தனியே விட மனமின்றி அவளும் அங்கேயே இருந்து விட்டாள்.

அங்கே பவி, தாரிணி மாமியாரோ விஷயத்தை கேள்வி பட்டவர், நல்ல விஷயம் தானே என்று சாதாரணமாக கூறி விட்டு சென்று விட்டார். அவர்கள் முகம் வாடுவதை பார்த்த பிரியா, இருவரிடமும் சீண்டி, கேலி செய்து சாதாரணமாக சிரிக்க வைத்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.