அவள் முயற்சியை புரிந்து கொண்ட அருண், அரவிந்த் இருவரும் தங்கள் கண்களால் ஆறுதல் அளித்தனர்.
ப்ரயு மீண்டும் ப்ரியாவிற்கு பேசி அங்குள்ள நிலைமையை பார்த்துக் கொள்ளுமாறு சொன்னாள்.
மறுநாள் காலை ப்ரயு மாமியாரே ,
“ப்ரத்யா .. நீ வீட்டிற்கு போய் குளித்து எனக்கும் டிரஸ் எடுத்துக் கொடுத்து விட்டு மண்டபத்திற்கு போ.. இங்கே வித்யாவிற்குதான் hospital இல் எல்லாம் கொடுத்து விடுவார்களே... எனக்கு மட்டும் தானே.. நானே பார்த்துக் கொள்கிறேன்.. “ என்றார்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
படிக்க தவறாதீர்கள்...
அவர் சொன்னதும் பிரயுவும் கிளம்பி விட்டாள்.. அவள் மனதில் தன் தங்கைகளின் திருமணம் ஒன்றே நினைவாக இருந்தது.
அவர் சொன்னது போலேவே அவருக்கு தேவையானது செய்து விட்டு, மனம் கேட்காமல் அங்குள்ள தன் சக அலுவலர்களிடம் பேசி அவரை பார்த்துக் கொள்ள சொல்லி விட்டு கிளம்பி விட்டாள்.
இவள் சரியாக மண்டபம் சென்று சேரும் போது, மணமக்கள் முகூர்த்த புடவை மாற்ற கொடுத்து அனுப்பியிருந்தனர்.
பவி, தாரிணி, அவள் பெற்றோர் விழிகள் இவள் வரவையே எதிர் பார்த்துக் கொண்டிருக்க, இவள் நுழையவும் வேகமாக வந்து அவளை அழைத்து சென்றனர்.
இவளை பார்த்ததும் , ஆதியை பற்றி கேட்க, அவனின் நிலையை சொல்லவும், எல்லோரும் வருத்தப் பட்டனர்.
தன் வருத்தத்தை காண்பிக்காமல் எல்லோரயும் அதட்டி, ரெடி ஆக்கி மேடைக்கு அழைத்து வந்தாள்.
பிறகு நல்ல நேரத்தில் வந்திருந்தவர்கள் வாழ்த்த, மணமக்களுக்கு மாங்கல்யம் பூட்டினர் மணமகன்கள்.
ப்ரயு முகத்தில் எல்லையற்ற நிம்மதி.. எந்த பிரச்சினையும் இல்லாமல் திருமணம் நல்லபடியாக முடிந்தது.
தொடரும்
{kunena_discuss:948}