அந்த நன்றி விசுவாசத்தில்தான் நிச்சயமான உடனே தங்கள் வீட்டிற்கு அன்புவை அழைத்து வரவேண்டும் என்று சொல்லிவிட்டாள்.
ஏற்கனவே அன்புவின் மீது பிரியமாயிருந்த தாத்தாவும் சந்தோசமாகவே அழைத்து வந்துவிட்டார். அவரது பேரக்குழந்தைகளுடன் அன்புவின் தம்பியும் ஓடியாடி விளையாடி அங்கேயே ஒன்றிவிட்டான்.
“இதப்பாருங்கப்பா. அன்பு நம்ம எல்லாருக்குமே ரொம்ப பிடிச்ச பொண்ணு. பெத்தவங்க இறந்த பிறகு என்ன செய்யறதுன்னு முழிச்சிக்கிட்டு நிற்காம நீங்கதான் பார்க்கனும்னு யாரையும் அண்டி நிற்காம யாருக்கும் தொல்லை கொடுக்காம அவளே தனது குடும்பத்தை தாங்கிக்கிட்டா. சின்னப்பொண்ணா இருந்தாலும் முகம் சுளிக்காம நம்ம எல்லாருக்கும் எல்லாவிதமான வேலையும் செய்து கொடுத்திருக்கா. யார் வீட்டிலாவது விசேசம்னா
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்லி அதற்குத் தீர்வும் கண்டனர்.
“என்ன ஸ்பெசல்மா இன்னிக்கு?”
கேட்டவாறே சமைத்து வைத்திருந்தவற்றை திறந்து பார்த்தான் சிற்பி.
“ஆஹா! எல்லாமே எனக்கு பிடிச்சதாவே இருக்கு.”
“நீ எதைதான் பிடிக்கலைன்னு சொல்லியிருக்கே. அம்மா சமைக்கிறதை எல்லாம் காலி பண்ற ஒரே ஆள் நீதானே.”