“பின்னே சாப்பிட்டா குண்டாயிடுவோம்னு பயந்துக்கிட்டு உன்னை மாதிரியே கொறிக்க சொல்றியா? நான்லாம் வளர்ற பிள்ளைப்பா.”
“டேய் ரொம்ப வளந்துடாதே. இப்பவே உன்னை தலையை உயர்த்திதான் பார்க்க முடியுது. இனியும் வளர்ந்தா உன் முகத்தைப் பார்த்து பார்த்தே என் கழுத்தில் சுளுக்கு வந்துடும்.”
“நீ ரொம்ப கிண்டல் பண்றே. அம்மா பாரும்மா.” செல்லமாய் சிணுங்கியவனை பார்த்த அன்பரசிக்கு சிரிப்பு வந்தது. தன்னை விட உயரமாய் வளர்ந்து நின்றவனை பூரிப்புடன் பார்த்தாள்.
“ரெண்டு பேருக்குமே உடம்புதான் வளர்ந்திருக்கு.” நமட்டு சிரிப்புடன் உள்ளே சென்றாள் அன்பரசி.
அவள் சொன்னது இருவருக்குமே தாமதமாகதான் புரிந்தது.
“அம்மா! இப்படி பழிவாங்கிட்டீங்களே.”
...
This story is now available on Chillzee KiMo.
...ா போட்டுவிட்டாள் அன்பரசி.
அப்பாவிடம் சென்று முறையிட முடியவில்லை. அன்பரசிதான் அவர்களுக்குத் தேவையானதை எல்லாம் புகழேந்தியிடம் சொல்லி வாங்கித்தருவாள். புகழேந்தியிடம் ஏதாவது கேட்க நேர்ந்தால் கூட
“அம்மாகிட்ட கேளுப்பா. எனக்கு எல்லாம் மறந்துடும்.” என்று சொல்லிவிட்டு விரைந்துவிடுவார்.